இதுதான் “பொலிட்டிகல் மிராக்கிள்” என்பது

முன்பெல்லாம் அதிமுகவில் ஜெயா மட்டும்தான் பேசுவார், அமைச்சர்கள் எல்லாம் “அம்மா வாழ்க”, “இதயதெய்வம் வாழ்க..” என சொல்லிவிட்டு தரையினை மட்டும் பார்த்து நடப்பார்கள்

திமுகவில் டி.ஆர் பாலு, பொன்முடி, துரைமுருகன், சிவா, தயாநிதிமாறன் , எ.வ வேலு, நடிகர்களில் சிலர் என பெரும் பட்டாளமே பேசிகொண்டிருக்கும்

இப்பொழுது எல்லாமே தலைகீழ்

அங்கு அமைச்சர்கள் முதல் அடிப்பொடிகள் வரை பொளந்து கட்டுகின்றன, உளரலோ உதறலோ ஆனால் வாய்திறந்து பேசுகின்றார்கள்

திமுக பக்கம் செயல் தலைவர் மட்டுமே பேசிகொண்டிருக்கின்றார்

என்ன ஆச்சரியம் இது? இதுதான் “பொலிட்டிகல் மிராக்கிள்” என்பது.