இதுவும் இதே தமிழகத்தில்தான் நடக்கின்றது.
தமிழகத்தில் முன்பு காமராஜர் என்றொருவர் இருந்தார், முதல்வராகவும் இருந்தார்
நன்றாகத்தான் ஆண்டார் என இன்றளவும் சொல்வார்கள், ஆனால் எதிர்கட்சிகள் செய்த அழிச்சாட்டியத்தில் தேர்தலில் தோற்றார், தோற்ற பின்னாலும் அவருக்கு அரசியல் எதிர்காலம் இருந்தது, வோட்டு வங்கி இருந்தது
காமராஜர் மேல் அன்றைய முதல்வர் கலைஞருக்கு அச்சம் இருந்தது, அவ்வப்போது சீண்டிகொண்டே இருந்தார்
ஒரு கட்டத்தில் கலைஞர் காமராஜரை சீண்டும் விதமாக “முதல்வர் பதவிக்கு ஆசைபட்டுத்தான் காமராஜர் இப்படி உழைக்கின்றார்” என்பது போல பேசிவிட்டார்
சீறிய காமராஜர் சொன்னார் “அவனெல்லாம் முதல்வர் நாற்காலில உட்கார்ந்த பின்னால், நான் அந்த பதவிக்கு ஆசைபடுவேனா? “
ஒரு சொல்லுக்கு தாங்காத மானம் அது.
பின் ராமசந்திரன் வந்து நின்று உங்களோடு இணைந்து உங்களை முதல்வர் ஆக்குவேன் என்றபொழுதும் மறுத்தார், மிசாவில் கலைஞரே வந்து முதல்வர் பொறுப்பில் அமருங்கள் என்றபொழுதும் மறுத்தார்.
பிரதமராகும் வாய்ப்பில் ஏதோ மூப்பனாருக்கு ஆசை என யாரோ கொழுத்திபோட துண்டை உதறி தோளில் போட்டு கிளம்பினார் மானமுள்ள மூப்பனார்.
இரண்டாம் முறை ஜனாதிபதி ஆகும் வாய்ப்பினை விட்டுவிட்டு பள்ளிகளுக்கும் கல்லூரிக்கும் பாடம் நடத்த சென்றால் கலாம்
இவர்கள் எல்லாம் தமிழர்கள்.
அப்படி மானமுள்ள தமிழர்கள்,தலைவர்கள், இனி பதவியில் அமர்ந்தால் அவமானம் என நினைத்தவர்கள் எல்லாம் தமிழகத்தில் இருந்திருக்கின்றார்கள்.
இங்கொரு அம்மையார் தமிழ்பேசும் மாந்தர் அனைவரும் எதிர்த்து சொன்ன பிறகும், மற்ற மாநில தலைவர்களே முணுமுணுக்கும் நிலையிலும், ஆளுநரும் மத்திய அரசும் கதவினை சாத்திய நிலையிலும் , இன்னும் சிலர் பெரும் கண்டனம் எழுப்பும் நிலையிலும்
கொஞ்சமும் வெட்கமின்றி நாற்காலி வேண்டும் என அடம்பிடித்துகொண்டிருக்கின்றார்
இதுவும் இதே தமிழகத்தில்தான் நடக்கின்றது.
மக்கள் இரட்டை இலை சின்னத்திற்குத்தான் வாக்களித்தார்கள் , ஜெயாவிற்காக அல்ல : பொன்னையன்
பின்ன ஏன் அம்மா என அழுது காலில் புரண்டீர்கள், குனிந்தீர்கள்? இரட்டை இலை சின்னத்தின் அடியில் வணங்கி நின்றால் என்ன?
கொசு மருந்து இருந்தால் சென்னை பக்கம் அடிக்கவேண்டும், இவரின் தொல்லை தாங்க முடியவில்லை
வர்தா புயலில் எப்படி தப்பி தொலைத்தார் இவர்?
இவர் பொன்னையன் அல்ல, பொய் அய்யன்.