இது அரசியல் பதிவு அல்லவே அல்ல

முன்பு உலகை மிரட்டிய நோய்களில் ஒன்று பெரியம்மை, சின்னம்மை இரண்டுமே அக்காலத்தில் மனித சமூகத்தை அச்சுறுட்த்தியவை. இரண்டாலும் மனித குலம் சந்தித்த சவால்கள் ஏராளம்

ஏகபட்ட இழப்புகள், வந்துவிட்டால் மொத்தமாக வாரி சுருட்டாமல் அந்த நோய்கள் ஒழிந்ததில்லை

அவற்றுடன் போராடி போராடி இன்று இரண்டையுமே மனுகுலம் வென்றுவிட்டது, இந்த டிசம்பர் 9ம்நாள் பெரியம்மை ஒழிக்கபட்ட தினமாக உலகம் அனுசரிக்கின்றது

உலகெல்லாம் ஒழிந்தது போலவே தமிழகத்திலிருந்தும் பெரியம்மை, சின்னம்மை இரண்டும் ஒழிக்கபட்டு விட்டது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்

இது அரசியல் பதிவு அல்லவே அல்ல.


மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வழிமுதலாய் எண்ணிய மூன்று

இந்த குறள் எந்த மூன்றை சொல்கின்றது என ஆழ யோசித்தால் நாக்குக்கு அடிமையான மூளை சொல்வது இந்த மூன்றையுமே

ஆடு, கோழி , மீன்