இது ஒருவகை தந்திரம்

“தோல்வி மனிதனுக்கு வெறியூட்டும், வெறியில் மதிமாறும் அந்நேரம் எதிரி இடம் கண்டு அடிப்பான், வெறி மேலும் ஓங்கி மதிகெட்டு அறிவுகெட்டு அவன் படுகுழுயில் வீழ்வான்”

இது ஒருவகை தந்திரம், மகாபாரத சகுனி இதைத்தான் செய்ததாக சொல்கின்றான் கண்ணன்

இந்த இடத்தில் துரியோதனன் நம் இம்ரான்கான், சகுனி யாரென்றால் ரஷ்யா

காஷ்மிர் கைவிட்டு போனபொழுது அமெரிக்கா காட்டிய அமைதி, தாலிபான்களோடு தன்னைவிட்டு அமெரிக்கா மட்டும் பேசியது என ஏக கடுப்பில் இருக்கும் பாகிஸ்தானை ரஷ்யா சீண்டியது

ரஷ்ய பத்திரிகை இம்ரான் கானை பேட்டி கண்டு லேசாக கொக்கி போட்டது, அவ்வளவுதான் மனிதர் கொட்டிவிட்டார் “ரஷ்யாவுக்கு எதிராக தாலிபன்களை உருவாக்கியது அமெரிக்கா, பாகிஸ்தான் அதற்கு ஆதரவளித்தது நாங்கள் இருவருமே சேர்ந்து ஆப்கனை நாசமாக்கினோம், எல்லாம் அமெரிக்கா தொடங்கி வைத்த அழிவு” என மனிதர் வாக்கு மூலமே கொடுத்துவிட்டார்

இது உலக அரங்கில் பலத்த அதிர்ச்சியினை கொடுத்திருகின்றது

இந்த பாகிஸ்தானுக்கும் அமெரிக்க்காவுக்குமான கள்ள உறவு தெரியாததல்ல எல்லோருக்கும் தெரியும் ஆனால் மறைப்பார்கள்

முதல் முறையாக அண்ணா பாணியில் நான் பத்தினி அல்ல அமெரிக்கா யோக்கியனும் அல்ல என சொல்லியிருகின்றது பாகிஸ்தான்

விவகாரத்தை கவனித்த அமெரிக்கா பதில் ஏதும் சொல்லவில்லை

மற்ற நாடுகள் வாயில் கைவைத்து கவுண்டமணி பாணியில் சிரிக்கின்றது

ரஷ்யா ஒரு காலத்தில் எந்த பாகிஸ்தானும் அமெரிக்காவும் ஆப்கன் மண்ணில் இருந்து தங்களை விரட்டியதோ அதே பாகிஸ்தான் பிரதமர் வாயில் இருந்து பாவமன்னிப்பு கேட்டதில் கடும் சந்தோஷத்தில் இருக்கின்றது