இது பனங்காட்டு நரி , இந்த பேக் ஐடிக்கெல்லாம் சிக்காது சார்
தோழர் Dhivya Anand முகநூல் நண்பர், ஆனால் இன்றுவரை அவர் உண்மையில் பெண்ணா இல்லை பேக் ஐடியா எனும் சந்தேகம் இன்றுவரை உண்டு
எப்படி அறிமுகமானார் என்றால் ஒரே வார்த்தையில் அடித்துவிட்டார், ” நான் குஷ்பு வீட்டு பக்கத்து வீடு..” என ஒரு நாள் சொன்னார், அவ்வளவுதான் சங்கம் சரண்டர் ஆனது
அவர், இல்லை அந்த ஐடி மிகபெரும் தொழிலதிபரின் ஐடி என்பது மட்டும் அறியபடுகின்றது, சில பதிவுகளும் அதனை உறுதிபடுத்துகின்றன, குஷ்பு வீட்டு அருகே இருக்க வாய்ப்புகள் அதிகம்
ஆனால் ஒருநாளும் தலைவியினை பார்த்ததாகவோ அவருடன் படமெடுத்ததாகவோ சொன்னதே இல்லை
மிகசிறந்த வாசகர், அதுவும் பெரியாரிஸ்ட் சிந்தனை கொண்ட திராவிடவாதி அவர் இல்லை அந்த ஐடி என்பது சந்தேகமில்லை
தலைவி பற்றிய பதிவிட்டால், அதெல்லாம் விஷயமே இல்லை , வாருங்கள் சந்தித்துவிடலாம் என்பார். ஆனால் நீங்கள் பார்த்தீர்களா என்றால் பதிலும் வராது, குரலும் வராது
தலைவி போன்ற தெய்வபிறவியினை அருகில் வைத்துகொண்டு யாராவது பார்க்காமல் இருக்க முடியுமா? ஏ மனமே விழித்துகொள் என அசரீரி காதில் சொல்லியது
ஆனால் இவரோ வாங்க சார், அவர்களை பார்த்துவிடலாம் என சொல்லிகொண்டே இருக்கின்றார்
ரஜினியினையே பார்க்க முடியாத உலகில் குஷ்புவினை எளிதாக பார்த்துவிடமுடியுமா என்ன?
மொசாத், சி.ஐ.ஏ , ரா , அந்த ராவிற்கு தண்ணிகாட்டிய புலிகளின் பொட்டம்மானின் தீரமிகு கதைகளை எல்லாம் படித்திருந்ததால் உள்மனம் எச்சரித்தது
கூட்டி கழித்து பார்த்தால் வரும் விடை ஒன்றுதான்,
மிக சரியாக குஷ்பு வீடு, அவர் வரும் பாதை கார் , அவர் வாக்கிங் பாதை இன்னும் பல விஷயங்களை மிக சரியாக சொல்லிவிட்டு, தன் வீட்டையும் காட்டிவிட்டு ஆனால் மறைந்தே இருக்கும் அந்த ஐடி வேறு யாரும் அல்ல
நிச்சயம் சுந்தர்.சி ஐடியாகத்தான் இருக்க முடியும், நம்பி சென்றால் என்னாகும் என்பது சொல்லியா தெரியவேண்டும்?
இது பனங்காட்டு நரி , இந்த பேக் ஐடிக்கெல்லாம் சிக்காது சார்.