இது பொங்கல் சீசன் …

ஒரு பொங்கல் விடுமுறை அறிவிப்பிற்கே இப்படி தமிழகத்தை , அதுவும் இந்த தகவல் தொடர்பு யுகத்திலே கதறவிடுகின்றார்களே

ஒன்றும் இல்லாத காலங்களில், அதாவது பத்திரிகை மட்டும் வந்த, அதுவும் மக்களுக்கு படிப்பறிவில்லா காலங்களில் எப்படி எல்லாம் ஏமாற்றி இருப்பார்கள்??

எப்படி எல்லாம் கதை கட்டி இருப்பார்கள்?

அட்டைகத்தி எம்ஜிஆரை “இவன் நின்றால் பொது கூட்டம், நடந்தால் ஊர்வலம், பேசினால் மாநாடு” என ஏன் புகழ்ந்திருக்கமாட்டார்கள்

எம்ஜிஆர் காமராஜர் ஆட்சியில் சுடபட்டார், என ஏன் கொதித்திருக்கமாட்டார்கள்?

காமரஜருக்கும் எம்ஜிஆருக்கும் என்ன சரோஜாதேவி கால்ஷீட் தகறாரா? என்று கூட மக்களை யோசிக்கவிடாமல் எப்படி எல்லாம் ஏமாற்றியிருப்பார்கள்

அந்த எம்ஜிஆருக்காவது தகுதிக்கு மீறி நம்மை புகழ்கின்றார்கள், இப்படியே போனால் நம்மை விட ஒரு கூமுட்டையினை நாம் உருவாக்கி நாட்டை கெடுத்துவிடுவோம் என்ற அறிவு இருந்ததா?

அவருக்கும் இல்லை, அவரும் கட்சி ஆட்சி என ஏதோ செய்து அவரை விட அரைவேக்காடுகளை எல்லாம் ஆட்சிக்கு வருமாறு செய்துவிட்டார்

எப்படி எல்லாம் தமிழகத்தை பொய்சொல்லி வஞ்சித்திருக்கின்றார்கள் என்பதற்கு இந்த பொங்கல் விடுமுறையே சாட்சி.

ஈழவிவகாரத்திலும் இப்படித்தான் சம்பந்தமில்லாமல் பேசுவார்கள், அதில் சீமான், வைகோ பெஸ்ட்

இது பொங்கல் சீசன்

பொங்கலுக்கு கட்டாய விடுமுறை விடவேண்டியது மாநில அரசு,

மத்திய அரசு இந்தியா முழுக்க கட்டாய பொங்கல் வைக்க நிர்பந்திக்க முடியாது, சீக்க்கியனிடமோ குஜராத்தியிடமோ நீ வேட்டி அணிந்து பொங்கல் வைக்கவேண்டும் என கட்டயாபடுத்தமுடியாது

தமிழகத்தில் மத்திய அரசு ஊழியர் எல்லோருக்கும் கட்டாய விடுமுறை என்பது சாத்தியமுமன்று.

தமிழகத்தில் பொங்கல் விடுமுறை என ரயில் நிலையங்களை மூட முடியாது, அணுவுலைகளை ஐஐஐஐ பொங்கல் என சொல்லி விடுமுறை கொடுக்கமுடியாது

ஆக மத்திய அரசுதுறைகளில் பொங்கலுக்கு விடுமுறை எடுப்பவர்கள் எடுக்கலாம் கட்டாயம் எல்லாம் இல்லை என்கிறது மத்திய அரசு

இவர்கள் சொல்லும் கட்டாய விடுமுறை என்றால், ரயில் ஓடாது, கடலோர பாதுகாப்பு படை தூங்கும், தமிழக விண்வெளி ஆராய்ச்சி மையம் முடங்கும், ஏன் தமிழகத்தினை புயல் தாக்கினாலும் சும்மா இருக்க வேண்டும், தீவிரவாதி தாக்க வந்தாலும் சும்மா இருக்க வேண்டும்

கட்டாய விடுமுறை அல்லவா?

எப்படி எல்லாம் மக்களை ஏமாற்ற கிளம்பியிருக்கின்றார்கள்

இதில் காமராஜர் தோற்றதில் என்ன ஆச்சரியம் இருக்கின்றது

தமிழகம் நாசமாய் போனதிலும், பன்னீர் முதல்வர் ஆனதிலும் என்ன ஆச்சரியம் வேண்டியிருக்கின்றது?

அப்படி என்ன கட்டாய விடுமுறை?

ஆலய அர்ச்சர்களுக்கு விடுமுறை அளித்து கோயிலை பூட்டிவிடுவோமா?

ஆலயத்தை விடுங்கள்..

திரையரங்குகளுக்கு 3 நாள் கட்டாய விடுமுறை விட சொல்லுங்கள் பார்க்கலாம்?

இது தமிழகம் அல்லவா? பொங்கல் அல்லவா? டாஸ்மாக்கிற்கு 3 நாள் விடுமுறை விட சொல்லுங்கள், அதேதான் கட்டாய விடுமுறை

அந்த டாஸ்மாக் பணியாளன் பொங்கல் கொண்டாட வேண்டாமா?

தமிழக போலிசார் அய்யோ பாவம், அவனுக்கு தீபாவளி, பொங்கல் என எதுவுமில்லை அவர்களும் தமிழர் அல்லவா?

கட்டாய விடுமுறை விட்டு காவல்நிலையத்தை மூடிவிடலாமா?

மருத்துவமனை டாக்டர்கள், ஆம்புலன்ஸ் பணியாளர்கள், தீயணைப்பு துறையினர், அணையின் நீர் மட்டம் கண்காணிப்போர் என எல்லோருக்கும் விடுமுறை கொடுத்துவிடலாமா?

அதனை பற்றி எல்லாம் ஒரு பயலும் பேசமாட்டான்,