இதே 1975 ஜூன் 25 மெர்ஜென்சி அறிவிப்பு

Image may contain: 1 person

1971ல் இந்திராவின் மேல் சர்ச்சைகள் வெடித்தன, சஞ்சய் காந்தி இந்திராவினை இயக்குகின்றார் என்ற குரல்கள் வலுத்தன. அந்த தேர்தலில் இந்திரா முறைகேடு செய்தார் என அவர் வெற்றிபெற்ற அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கபட்டது

(ஜெயபிரகாஷ் நாராயணன் இந்தியா முழுக்க சுற்றுபயணம் செய்து இந்திராவினை விளாசிகொண்டிருந்தார்

அவர் தமிழகம் வந்தபொழுது ராமசந்திரன் ஓடிப்போய் கலைஞருக்கு எதிரான ஊழல் பட்டியலை கொடுத்தார், இதற்கு ஆதாரத்தை கொடுங்கள் என ஜெய்பிரகாஷ் நாராயணன் கேட்டபொழுது ஆதாரம் தேடி சென்ற ராமசந்திரன் வரவே இல்லை

கலைஞர் மேல் தொடுக்கபடும் எந்த குற்றசாட்டும் ஆதாரமற்றவை என சொன்னார் ஜெயபிரகாஷ் நாராயண்)

இந்திரா மீது தொடுக்கபட்ட வழக்கு, பின்னாளில் ஜெயா மேல் தொடுக்கபட்ட வழக்கிற்கு முன்னோடி, ஒரு வழக்கு அல்ல பல வழக்குகள் தாக்கல் செய்யபட்டன. லஞ்சம் கொடுத்தது மற்றும் வாங்கியது, அரசு அதிகாரிகளை பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தியது, மற்றும் அரசின் மின்சாரத்தை பயன்படுத்தியது போன்ற பல வழக்குகள்

அந்த தீர்ப்பு ஜூன் 12ம் தேதி 1975ல் வந்தது அதிர வைத்திருந்தது . இந்திரா முறைகேடு செய்தது நிரூபணம் ஆயிற்று அவர் பதவி விலக வேண்டும் மற்றும் 6 ஆண்டு அரசியலில் ஈடுபட தடை என நீதிபதி சின்ஹா சொல்லியிருந்தார்

ஜெயாவிற்கு ஒரு குன்ஹா போல இந்திராவிற்கு அந்த சின்ஹா

1974ல் இந்திரா செய்த அணுகுண்டு சோதனை, முந்தைய வங்கப்போர் வெற்றி, சிக்கிம் சாகசம் எல்லாம் ஒரு நொடியில் அடித்துகொண்டு போனது தீர்ப்பு. இந்திரா பெரும் சிக்கலில் ஆழ்ந்தார்

நிரம்ப யோசித்தார் இந்திரா, சஞ்சய் காந்தியின் திட்டம் இருந்தது. நீதிமன்ற தீர்ப்பை மீற முடியாது நிச்சயம் அரியாசனத்தை விட்டு இறங்கி 6 ஆண்டு அஞ்ஞான வாசம் செல்ல வேண்டும்.

என்ன செய்யலாம், பிரச்சினை என்ன? நீதிமன்ற தீர்ப்பு.

நீதிமன்றத்தை முடக்கிவிட்டால்? முடியும் நீதிமன்றம் இயங்கமுடியாத சட்டம் ஒன்று அரசிடம் இருப்பதும், 352ம் பிரிவு என இருக்கும் அவசர கால சட்டம் அவர்கள் நினைவுக்கு வந்தது

தன் அடியாளான பக்ரூதின் அலி எனும் ஜனாதிபதிக்கு அந்த 352ம் பிரிவினை அமல்படுத்த கடிதம் எழுதினார், உடனே அவரும் அமுல் படுத்தினார்

அப்போது நடந்த இஸ்ரேலிய அரபு யுத்தம், எண்ணெய் விலை சர்ச்சை, பாகிஸ்தான் மிரட்டல் , அணுகுண்டு செய்ததால் சர்வதேச மிரட்டல் எல்லாம் நாட்டை பாதிப்பதாகவும் அதை காக்க எமர்ஜென்ஸி தவிர வேறு வழி இல்லை எனவும் அறிவித்தார்

இதே 1975 ஜூன் 25

எமர்ஜென்ஸி என்பது என்னவென்றால் நாடு இயங்கும் ஆனால் மக்கள் கருத்துரிமை, பேச்சுரிமை எல்லாம் தடுக்கபடும். எதிர்கட்சியோ அதன் குரலோ இருக்காது. மீடியாக்கள் எல்லாம் அரசு சொன்ன செய்திதான் வெளியிட வேண்டும். தேர்தல் அரசியல் எல்லாம் நினைப்பே வரகூடாது

மீறி பேசுதல், மாநாடு, ஊர்வலம் என கிளம்பினால் போட்டு சாத்துவார்கள்

சட்டம் அறிவிக்கபட்டதும் முண்ணணி தலைவர்கள் அனைவரும் கைது செய்யபட்டனர். தமிழக காமராஜர் மட்டும் விதிவிலக்கு

இந்தியாவில் திமுக மட்டும் மிக துணிவாக மிசாவினை எதிர்த்தது. ஸ்டாலின் கைது செய்யபட்டு தாக்கபட்டார், சிறையில் அவரை காக்க சிட்டிபாபு உயிரிழந்தார்

திமுக தன் பாணியில் எதிர்ப்பினை தெரிவித்து கொண்டே இருந்தது

சோ ராமசாமி மகா துணிச்சலாக எதிர்த்து நின்றார், அவரின் எழுத்தும் பேச்சும் பெரும் சிலாகிப்பை பெற்றன‌

நாடு முழுக்க சர்ச்சைகள் வெடித்தன, எதிர்கட்சிகள் எல்லாவற்றையும் முடக்க முயன்றார் இந்திரா. இந்தியாவே இந்திராவிற்கு எதிராக பொங்கி கொண்டிருந்தது

ஒரே ஒருவர் மட்டும் எமர்ஜென்ஸியினை வரவேற்றார், அவர் அதற்கு முன்பு ஒரு காரியம் செய்தார் அண்ணா திமுக என்றொரு கட்சிவைத்திருந்தார்

மாநில கட்சிகளை இந்திரா குறிவைக்கின்றார் என்றவுடன் அனைத்திந்திய அதிமுக என தன் கட்சி பெயரை மாற்றிகொண்டு இது தேசிய கட்சி என்றார், இந்தியாவே சிரித்தது அவரும் சிரித்துகொண்டார்

அவரும் அவர் கட்சியும் எமர்ஜென்ஸியினை வரவேற்றது, காரணம் கலைஞர் ஆட்சி டிஸ்மிஸ் செய்யபட்டது

“எமர்ஜென்ஸியில் ஜனநாயாகம் காக்கபட்டது” என ராமசந்திரன் உளறிவைக்க, இந்தியாவே இந்த ஆள் மெண்டலா என முறைக்க, அவர் போக்கில் தன் அடிமைகளோடு சிரித்துகொண்டிருந்தார் ராமசந்திரன்

இந்தியாவின் எல்லா கட்சிகளும் இந்திராவினை எதிர்க்க ராமசந்திரன் வரவேற்றதை இந்தியாவே வினோதமாக பார்த்தது

சிறை கொடுமை, பத்திரிகை தடை, உரிமை மீறல் , கட்சிகள் தடை , ஸ்ட்ரைக் செய்வோருக்கு மிதி என பல அடக்குமுறைகளை செய்தாலும் மறுபக்கம் வினோதமாக இருந்தது

அரசு அலுவலங்கள் மிக சரியாக இயங்கின, பேருந்துகளும் ரயிலும் குறிப்பிட்ட நேரத்தில் வந்து போயின. மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு ஒரு பாதிப்புமில்லை

அரசு அலுவலகங்களில் லஞ்சம் என்பது துளியுமில்லை, எல்லா அரசு ஊழியர் முகங்களிலும் பொறுப்பும் பய உணர்ச்சியும் பெருக்கெடுத்தது, சுருக்கமாக சொன்னால் அவர்கள் லஞ்சம் வாங்காமல் சம்பளம் மட்டும் வாங்கியது அப்பொழுதுதான்

பின்பு எதிர்ப்புகள் பெருக பெருக நிலமை சிக்கலானது இந்திரா பணிந்தார், காமராஜரின் மரணம் நிலமையினை சிக்கலாக்கியது

ஆயினும் 2 ஆண்டுகள் கழித்தே எமர்ஜென்ஸி மீட்கபட்டது

இந்திய ஜனநாயகத்தின் கருப்பு நாட்கள் அவை. தன் ஆட்சியினையும் அதிகாரத்தையும் தக்க வைக்க இந்திரா செய்த காரியம் அவை

அமெரிக்க உள்நாட்டு போர்காலம், சீனாவின் மாணவர் புரட்சி அல்லது டினான்மென் சதுக்க கொடூரம் போலவே இந்தியாவில் இந்த கருப்பு நாட்கள் என வரலாறு குறித்தது.

நிச்சயம் பெரும் கொடுமைகளும் அக்கிரமும் நிறைந்த காலம் அவை

ஆனால் அதை அனாசயமாக‌ எதிர்த்த திமுக 1977 தேர்தலில் தோற்றதும், அதே இந்திரா பின் மகா பலத்துடன் ஆட்சிக்கு வந்ததும் ஜனநாயகத்து அதிசய காட்சிகள்..