இதோ மற்றுமொரு சாதனை என பொங்க போகின்றார்கள்
இன்னும் இரு நாட்களில் மோடியும் அவரின் அடிப்பொடிகளும் இதோ மற்றுமொரு சாதனை என பொங்க போகின்றார்கள்
ஆம் நவீன நீர்மூழ்கி கப்பல்கள் வேண்டும் என 2012ல் இருந்தே இந்திய கடற்படை சொல்லி அதற்காக பிரான்ஸ் நிறுவணத்துடன் சேர்ந்து அதை கட்டும் வேலையும் தொடங்கியாயிற்று
இப்பொழுது இந்தியாவிடம் இருப்பது 10 நீர்மூழ்கிகள் அதுவும் பழைய வகை, அரிகந்த் இப்பொழுதுதான் இணைந்தது
சீனாவிடம் 30 நீர்மூழ்கியும் பாகிஸ்தானிடம் 7 நீர்மூழ்கியும் உள்ள நிலையில் இந்தியாவிடம் குறைந்தது 25 நவீன நீர்மூழ்கி வேண்டும்
இதனால் 24 நீர்முழ்கிகளை கட்டும் திட்டம் மன்மோகன் சிங் ஆட்சியிலே தொடங்கபட்டது
முதல் கட்டமாக 3 கப்பல்கள் முடிக்கபட்டிருக்கின்றன அது இன்னும் இரு நாளில் வெள்ளோட்டம் விடபடும்
அடுத்தடுத்த கப்பல்கள் கட்டிமுடிக்கபட 2024 முதல் 2026 வரை ஆகலாம் என்கின்றார்கள், எப்படியும் இன்னும் சில ஆண்டுகளில் 25 நவீன நீர்மூழ்கிகளுடன் இந்தியா பலம்பெறும்
இதுபற்றி சங்கிகளிடம் கேட்டால், நீர்மூழ்கி பற்றி எமக்கு அதிகம் தெரியவில்லை ஆனால் 2040ல் அவை பயன்பாட்டுக்கு வந்தால் மோடிதான் அவற்றை இயக்கிவைப்பார், அவர்தான் இருக்க வேண்டும் என ஒருமாதிரி கண்சிவக்க சொல்லிகொண்டிருக்கின்றன
