இந்தியன் என்பதை விட மனிதன் என்றே சொல்லமுடியாது
இந்த நேரத்திலும் மோடியின் மீதான வெறுப்பை கொண்டாடுபவனை இந்தியன் என்பதை விட மனிதன் என்றே சொல்லமுடியாது
இது இந்திய விஞ்ஞானிகளின் சோதனை காலம், நாம் அவர்களுடன் இருத்தல் வேண்டும் ஆறுதலும் நம்பிக்கையும் கொடுத்து உற்சாக படுத்துதல் வேண்டும்
அரசியல் பேச இது நேரமல்ல, நடந்திருப்பது நாட்டு விஷயம்
இதற்கு மகிழ்பவன் நிச்சயம் நல்ல குடிமகன் அல்ல, நாளை அவன் முழுக்க சுயநலவாதி, எந்த நாட்டுக்கு சென்றாலும் அவன் உருப்படபோவதில்லை அவன் வாழும் நாடும் உருப்படாது
முழு அயோக்கியன் யார்? தேசத்தின் விரோதிகள் யார் என்பது அப்பட்டமாக தெரியும் நேரமிது
இவர்களின் நன்றிகெட்ட தனத்தால், நாட்டையே கேவலபடுத்தும் இந்த ஈன புத்தியினை கண்டு நாணி நிற்கின்றோம்
இம்மாதிரி புல்லுருவிகள் எக்காலமும் உண்டு
ஆம் இந்த தேசம் என்றெல்லாம் ஒன்றாகுமோ, என்றேல்லாம் மொத்தமாக ஒரே குரலில் ஒரே கண்களில் ஒரு விஷயத்தை பார்க்குமோ அப்பொழுதெல்லாம் இவர்கள் முகம் கறுத்துவிடும்
இதோ சந்திராயன் அகில இந்திய விஷயமாக எல்லா மக்களும் ஒரே குரலில் அதை பேசுவதால் அது பொறுக்காமல் இறங்கிவிட்டார்கள் கயவர்கள்
இந்த சீழ்பிடித்தவர்களை, குறை புத்தி கொண்ட மடையர்களை தூக்கிபோட்டு மிதித்து நம் வழியில் தேசத்தை வளர்ப்போம்
தோற்றாலும் நாட்டுபற்றை மக்கள் உள்ளத்தில் நெருப்பாக எரிய வைத்திருக்கின்றது சந்திராயன், இந்த வெற்றி போதும், அவ்வகையில் மாபெரும் வெற்றி இது
ஜெய்ஹிந்த்