இந்தியப் பெருங்கடல் வெப்பமடைந்து, நிலத்தடி நீர் குறைகிறது :ஐஐடி
இந்தியப் பெருங்கடல் வெப்பமடைந்து வருவதே இந்தியாவில் நிலத்தடி நீர் குறைய காரணம்: ஐஐடி ஆய்வில் தகவல்
10 மீட்டருக்கு ஒரு போர்வெல் தமிழகத்தில் சர்வ சாதாரணம், அதுவும் கிட்டதட்ட 600 அடி ஆழம் வரை செல்கின்றது
இந்தியா முழுக்க இப்படி நிலை ஆகிகொண்டிருக்கின்றது.
இப்படி பெரும் நீர் திட்டங்கள் இன்றி, மக்களை தங்களுக்கான நீரை தாங்களே தோண்டி நிலத்தடி நீரை இல்லாமல் ஆக்கிவிட்டாயிற்று.
விவசாயி, பொதுமக்கள், மினரல்கம்பெனிக்காரன் என பலரும் போர்வெல் அமைத்து அதனை 800 அடி ஆழத்திற்கு கொண்டு சென்றாகிவிட்டது.
இது மிக கண்கூடாக காணும் விஷயம்
இதற்கு ஒரு ஆய்வாம், அதுவும் ஐஐடி ஆய்வாம். அது கண்டறிந்த விஷயம் இந்திய பெருங்கடல் சூடாயிற்றாம்
அப்படியானால் இலங்கை, மாலத்தீவு இன்னும் பல நாடுகள் ஆவியாக அல்லவா சென்றிருக்க வேண்டும்?
அரசு முழு நீர்விநியோகத்திற்கும் பொறுப்பேற்றால் மக்கள் ஏன் தோண்ட போகின்றார்கள்??
தமிழக ஆற்றுமணல் எல்லாம் சுரண்டபட்டால் எப்படி அக்கரையில் நிலத்தடி நீர் நிற்கும்?
இந்தியாவின் பெரும் அறிவு நிறுவணம் என பெயரெடுத்த ஐஐடி இப்படி அறிவுகெட்டு போயிவிட்டதா?
இந்திய பெருங்கடல் சூடானதோ இல்லையோ, ஐஐடிக்காரர்களுக்கு மண்டை சூடாகிவிட்டது.