இந்தியாவின் அதிகாரமிக்கவர்கள்
இந்தியாவின் அதிகாரமிக்கவர்கள் வரிசையினை எடுத்துகொண்டால் யாரெல்லாம் துணிச்சலும் நாட்டுபற்றும் குடிகளை காக்கும் பொறுப்பும் வாக்குவங்கி கவலையும் இல்லையோ அவர்களே பெரும் யுத்தம் நடத்தியிருக்கின்றார்கள்
முதலில் பட்டேல் நடத்தினார் நாடு வலிமையானது, பாகிஸ்தானை சீனாவினை நம்பிய நேரு முதுகில் வாங்கினார்
சாஸ்திரி மிக துணிச்சலான யுத்தத்தை முன்னெடுத்தார்
தந்தை வழியில் இருந்து விலகினார் இந்திரா, அந்நிய சக்திக்கோ வாக்கு வங்கிக்கோ அவர் அஞ்சவில்லை இஸ்லாமிய வாக்குகள் பாதிக்குமோ என்ற தயக்கம் ஏதுமே இல்லை
அவர் அடித்த அடியில் பாகிஸ்தான் உடைந்தே போனது
பஞ்சாபில் பெரும் வாக்குசரிவு ஏற்படும் என யோசிக்காமல் பொற்கோவிலையே தாக்கி தன் உயிரையே கொடுத்தார் அந்த அன்னை
ராஜிவ் தமிழக வாக்குகளை கிஞ்சித்தும் கணக்கிடாமல் முக்கியமான நிலையில் இலங்கைக்கு ராணுவம் அனுப்பினார் இல்லாவிடில் அமெரிக்க ராணுவம் கால்பதித்திருக்கும்
அதற்காக உயிரை கொடுத்தார் ராஜிவ்
கார்கிலில் ஒரு சென்ட் இடம் கூட ஆக்கிரமிக்க விடமாட்டோம் என மீட்டது வாஜ்பாயின் அரசு
2008 மும்பை தாக்குதலில் பல கணக்குகளோடு காங்கிரஸ் அமைதியானது ஏன் என தெரியாது
மோடி அரசு பதன்கோட் தாக்குதலுக்கே சிறிய பதிலடி கொடுத்தது, இப்பொழுது புல்வாமா தாக்குதலுக்கு போர் தயாரிப்பு வரை சென்றாயிற்று
தைரியமும் நாட்டுபற்றுமிக்க பிரதமர்கள் என்ன செய்தார்களோ அதைத்தான் மோடியும் செய்தார்
“எதிரி என்ன வகையில் பேசுகின்றானோ அந்த வகையில் பேசு, அதுவும் அடி ஒன்றுக்குத்தான் பாகிஸ்தான் அடங்கும்..” என்பது பட்டேல், சாஸ்திரி, இந்திரா, வாஜ்பாய் என எல்லோரும் உணர்ந்து சென்ற பாதையில்தான் மோடியும் சென்றார்
இதில் அரசியலோ இன்னபிற கணக்குகள் சுத்தமாக இல்லை
போர், பொருளாதாரம், பாகிஸ்தானியரும் நல்லவர்கள், போர் என்றால் அழிவு என்றேல்லாம் பழைய பிரதமர்கள் என்ணியிருப்பார்கள் என்றால் இன்று பாகிஸ்தான் உடைந்திருக்காது, வங்கம் டூ லாகூர் சாலை அமைத்திருப்பார்கள், அதில் சுட்டுகொண்டே பாகிஸ்தானியர் பயணித்துகொண்டிருந்திருப்பார்கள்
பட்டேல் சொன்ன வார்த்தைதான் “போர் என்பது வலிதான் ஆனால் அறுவை சிகிச்சை உடலுக்கு பின்னாளில் நலம் கொடுக்கும் என்றால் அதை தவிர்க்கவா முடியும்?”
இந்திராவும் அதைத்தான் செய்தார், அனுபவ பூர்வமாக செய்தார் , அந்த தாய் காட்டிய வழியில்தான் இவ்வளவாவது அமைதி
மோடி அவ்வழி சென்றால் என்ன தவறு?
இதை சொல்வதால் நாம் ஒரு சங்கி என்றால் அதை தயக்கமின்றி ஏற்றுகொள்ளலாம்