இந்தியாவின் பெரும் சாபம்
இந்தியாவின் பெரும் சாபம் அதன் துருபிடித்த சட்டங்கள், அந்த சட்டங்களை வைத்துகொண்டிருந்தால் சர்வதேசத்தில் இந்தியா நாணித்தான் தலைகுனியவேண்டும்
இதோ குனிந்திருக்கின்றது
இந்த தேசத்தின் முன்னாள் பிரதமரை கொன்றதற்காக பிடிபட்ட கூட்டம் ஒவ்வொன்றாக வெளிவர ஆரம்பித்தாயிற்று
ராஜிவ் கொலையில் முதலில் 26 பேருக்கு தூக்கு என்றது சிறப்பு நீதிமன்றம், பின் சட்டத்தின் ஒட்டைகளில் ஒவ்வொருவராக தப்பி கடைசியில் 7 பேருக்கு ஆயுள் என்பதோடு முடித்து கொண்டது
ஆயுள் தண்டனை என்பது இந்தியாவில் ஆயுளுக்கும் அல்ல, அமெரிக்க சட்டங்களை போல 200 முன்னூறு ஆண்டுகால தண்டனை எல்ல இருபதுவருடங்களை கூட தாண்டாது
அந்த ஓட்டையினை பயன்படுத்தி பேரரிவாளன் வந்துவிட்டார், இந்தவழியில் இனி நளினியும் முருகனும் அடுத்து வருவார்கள்
இனி இந்தியா என்ன செய்யும் தெரியுமா?
இலங்கை தமிழர்களான அந்த 4 பேரையும் இலங்கை மருமகளான நளினியினையும் இலங்கை அரசிடம் பத்திரமாக ஒப்படைக்கும் நிலை வரும்
ஆக இன்னொரு நாட்டில் இருந்து இந்தியாவுக்கு சென்று பகிரங்கமாக கொலையும் செய்துவிட்டு முடிந்தால் திருமணம் செய்து பேரன் பேத்திகளோடு வரலாம் எனும் அளவு இங்கு எல்லாம் சீர்கெட்டு கிடக்கின்றது
பேரரிவாளன் விடுதலையினை இங்கு யாரும் தடுக்க முடியாது, காரணம் அது தூக்கு அல்ல ஆயுள்தண்டனை, அந்த தண்டனை காலம் முடியும்பொழுது சட்டம் அனுமதிக்கத்தான் செய்யும்
இந்தியாவுக்கு தேவை பலமான சட்டங்கள், அது அல்லாமல் இனி கொலைகாரர்களுக்கு டாட்டா காட்டுவதை தவிர ஏதும் செய்யமுடியாது
இப்படியே போனால் நாட்டில் குற்றவாளிகள் கொலை செய்து விட்டு நல்ல சுக போக வாழ்க்கை அனுபவித்து விட்டு தியாகியாகி விடுவார்கள்…. தமிழ் நாட்டில் பாதுகாப்பு என்பது அரசியல் தலைவர்கள், மக்கள் யாருக்கும் கிடைக்காது. அண்ணாமலைகே open media வில் சவால் விடுகிறார்கள்… குற்றவாளிகள் வெகு விரைவில் case முடித்து தண்டனை நிறைவேற்ற பட வேண்டும்… சட்டங்கள் நிச்சயமாக திருத்த பட வேண்டும்.