இந்தியாவில் இனி ஒரு சட்டம் கொண்டுவரவேண்டும்

புதுபுது விஞ்ஞானிகள் கிளம்புகின்றனர், அணு என்றால் என்ன தெரியுமா? அது எப்படி வெடிக்கும் தெரியுமா அனு தத்துவம் தெரியுமா என ஏகபட்ட கோஷ்டி

அதில் எவனாவது அணுசக்தி படித்தானா? சர்வதேச அணுசக்தி கமிஷனில் படித்தானா? அட குறைந்தபட்சம் பாபா ஆட்டோமிக் ரிசர்ச் சென்டரில் வாட்ச்மேனாக கூட இருந்தானா என்றால் இல்லை

தனக்கு சம்பந்தமே இல்லா விஷயங்களை கொஞ்சமும் கூச்சமின்றி கத்தி சொல்வதில் தமிழனுக்கு நிகர் தமிழனே

ஈழபோராட்டம் என்றால் என்னவென்றே தெரியாத சைமன் அள்ளிவிடுவான், அதையும் சிலர் நம்புவான்

வரிமுறை என்றால் என்ன? வரி வசூலுக்கான கணக்கீடுகள் என்ன என்பதை சுத்தமாக தெரியாத, ஏன் குடிக்கும் துண்டு பீடிக்கு கூட வரிகட்டாமல் ஓசியில் குடிப்பவன் எல்லாம் திடீர் பொருளாதார ஞானியாகி மன்மோகன் சிங் அளவுக்கு பொருளாதாரம் பேசுவான்

அப்படித்தான் ஜிஎஸ்டி பற்றி அதற்கு ஸ்பெல்லிங் கூட தெரியாதவனெல்லாம் விளக்கினான்

அப்படி இப்பொழுது திடீர் அணுசக்தி விஞ்ஞானிகள் வந்துவிட்டார்கள், ஒரே அழிச்சாட்டியம்

இந்தியாவில் இனி ஒரு சட்டம் கொண்டுவரவேண்டும்

துறைசார் வல்லுநர்களை தவிர முக்கியமான விஷயங்களில் எவனும் சும்மா உளறகூடாது, ஆதாரமின்றி உளறினால் நிரூபிக்க தவறினால் அவனை 50 ஆண்டுகாலம் சிறையில் அடைக்கலாம் என சட்டம் திருத்தபட வேண்டும்

இல்லாவிட்டால் இனி திடீர் ராக்கெட் விஞ்ஞானிகள், அணுவினை வெட்டி குறுக்கே மிதிப்பவர்கள் எல்லாம் உருவாவதை தடுக்க முடியாது

இதெல்லாம் எங்கிருந்து வந்தது என நினைக்கின்றீர்கள்?

கொஞ்சமும் நாடு பற்றியோ, ஆட்சி பற்றியோ தெரியாத ஒரு கூட்டம், சினிமாவுக்கு வசனமும் பாடலும் எழுதிய கூட்டம், சினிமா முன்னால் கூத்தாடிய கூட்டம் மிக முக்கியமானதும் புனிதமானதுமான அரசியலுக்கு வந்து ஆட்டம் போட்டதோ அன்று தொடங்கிற்று