இந்தியாவில் தனிபட்ட நாகரீகமும் சுத்தமும் அதிகம்.

உலகின் மிகபெரும் சொத்து ஆரோக்கியமும் உயிரும் , மாறாக‌ பணமும் வசதியும் அல்ல என்பதை பலர் முகத்தில் அடித்து சொல்கின்றது கொரோனா

வழக்கமாக ஐரோப்பிய நாடுகள் அந்நியர் வரகூடாது, வந்தால் சிறை திருப்பி அனுப்பும் நடவடிக்கை என செய்து கொண்டிருந்தன, அமெரிக்கா மெக்ஸிகோ எல்லையில் சுவரே கட்டியது

இப்பொழுது அமெரிக்கர்கள் கொரொனாவுக்கு அஞ்சி மெக்ஸிகோவுக்குள் நுழைய (அது மட்டுமே தெற்கில் நிலத்தை பகிரும் எல்லை) அந்நாட்டு அரசு அனுமதி மறுத்து திருப்பி அனுப்புகின்றது, மெக்ஸிகோ அரசு டிரம்புக்கு கால் செய்து “என்னய்யா, உன்நாட்டு மக்கள் இப்படி எல்லாம் செய்கின்றார்கள், உன் மேல் நம்பிக்கை இல்லையா? இனி வந்தால் சிறையில் அடைக்கமாட்டோம் சுட்டு கொல்வோம்” என்ற ரீதிக்கு போக “எல்லாம் நேரம்டா டேய்..” என பல்லை கடிக்கின்றார் ட்ரம்ப்

ஐரோப்பியர் பலர் ஆப்ரிக்க நாடுகளுக்கு செல்ல துடிக்க அந்நாடுகளோ கையெடுத்து வணங்கி “எங்ககிட்ட நீங்க விட்டு வச்சிருக்கிறதே இந்த உயிர் மட்டும்தான், அதையும் எடுக்க வந்துராதீக எசமான், மீறி வந்தால் கல்லால் அடித்து யானை காலில் போட்டு மிதிப்போம்” என விரட்டுகின்றன‌

ஆப்ரிக்கரையும், லத்தீன் அமெரிக்கரையும், ஆசியரையும் நாயினும் கீழாக கருதி விரட்டிய வெள்ளை ஏகாதிபத்திய கூட்டம் இப்பொழுது அவர்களிடமே அடைக்கலம் கேட்பதும் , அவர்கள் விரட்டி அடிப்பதும் கொரோனா செய்யும் கால சக்கர விளையாட்டு..

சுத்தமான இடத்தில் நோய்பரவாது என் நம்பினர் ஐரோப்பியர், 13ம் நூற்றாண்டு பிளேக் சொல்லி கொடுத்த பாடம் அது

ஆனால் பொது சுத்தம் வேறு, தன் சுத்தமும் சுத்தமான பழக்க வழக்கமும் சுத்தமான உணவு பழக்கமும் சமூக பழக்கமும் வேறு அதுதான் மகா முக்கியம் என செவிட்டில் அறைந்து சொல்கின்றது கொரோனா

ஆம் ஐரோப்பாவில் பொது சுகாதாரம் அதிகம் ஆனால் கண்டபடி கட்டிபிடிப்பது ,ஒரே கோப்பையில் குடிப்பது, முத்தமிடுவது உள்ளிட்ட தனிபட்ட சுத்தம் மகா மோசம் , கொரொனா பரவ இதுதான் காரணம்

இந்தியாவில் பொது சுகாராம் குறைவு ஆனால் தனிபட்ட நாகரீகமும் சுத்தமும் அதிகம்

இதை இப்பொழுதுதான் உணர்ந்து தலையில் கைவைத்து இன்னமும் இந்தியாவிடம் அதிகம் படிக்க வேண்டியுள்ளது என அமர்ந்திருகின்றது மேற்குலகம்.