இந்தியாவுக்கு அதை அறியாமலே கொம்பு சீவி விடுகின்றது
இந்தியாவுக்கு அதை அறியாமலே கொம்பு சீவி விடுகின்றது அமெரிக்கா, ஒரு வகையில் பார்க்க போனால் இது நாட்டுக்கு அவ்வளவு நல்லதல்ல
சீனாவினை சீண்ட இந்தியாவுக்கு பல நவீன ஆயுதங்களை கொடுக்கின்றது அமெரிக்கா, நிச்சயம் அவை மகா நவீனமானவை
சீனாவுக்கு எதிராக இந்தியாவினை ராணுவ ரீதியாக வளர்ப்பதில் அமெரிக்காவுக்கு ஆர்வம் அதிகம், 1962 சீனபோரின் பொழுதே ஓடிவந்து நின்றது
ஆனால் அன்றைய அரசுகள் சிந்தித்தன , நேரு போன்றவர்கள் இரு பக்கமும் பகையாகும் என சிந்தித்தனர், அமெரிக்க ஆதரவினை பெற்றுகொள்ள தயங்கினர்
இது காங்கிரஸ்காலம் வரை நீடித்தது
சிக்கிம் எல்லையில் சீனா அட்டகாசம் செய்தால் வியட்நாம் ஜப்பானிய எல்லையில் இந்தியா செல்லமுடியும் என காட்டிவிட்டு அமைதி காட்டினர்.
அதிலும் சில கணக்குகள் இருந்தன குறிப்பாக அமைதி மற்றும் பொருளாதார கணக்குகள்
ஆனால் மோடி அரசு அதை எல்லாம் கடாசிவிட்டு அமெரிக்காவுடன் இணைந்துவிட்டது எப் 21 உட்பட இன்னும் ஏராளமான விஷயங்களை கொடுக்கும் அமெரிக்கா இந்திய கப்பலுடன் தென் சீன கடலுக்குள் நுழைந்துவிட்டது
இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து தன் காலடிக்கு வந்துவிட்டதில் பல்லை கடிக்கின்றது சீனா
ஏற்கனவே அமெரிக்காவுடன் பொருளாதார போரில் சீனா சிக்கியிருக்கும்பொழுது இந்த விவகாரம் சீனாவின் சீற்றத்தை தூண்டலாம்
அமெரிக்க ஆதரவுடன் நம் ஆயுதங்களை பெருக்குவது சரிதான், ஆனால் ஆயுதம் கொடுத்துவிட்டு சும்மா சென்றுவிடும் நாடு அல்ல அது
அவர்கள் வரலாறு அப்படித்தான்
ஒரு நாட்டுக்கு ஆயுதம் கொடுத்தால் அவர்களை தூண்டிவிட்டு கொண்டே இருப்பார்கள். முன்பு இந்தியாவினை ஒழிக்க பாகிஸ்தானுக்கு கொடுத்தார்கள் இப்பொழுது சீனாவினை ஒழிக்க இந்தியாவுக்க்கு
அரேபியாவில் சதாமுக்கு கொடுத்து ஈரானை அடிக்க சொன்னார்கள், இப்பொழுது சவுதி சிக்கியிருக்கின்றது
இந்தியா அவர்களிடம் சிக்கி என்னபாடு படபோகின்றதோ தெரியவில்லை, இது பற்றி பக்தாளிடம் கேட்டால் ராகுல்காந்தியினையே விரட்டி விட்ட மோடிக்கு அமெரிக்கா என்ன பெரிய விஷயமா? என சீரியசாக சொல்லிகொண்டிருக்கின்றார்கள்
