இந்தியாவுடன் சிக்கிம் இணைந்த நாள்
இந்தியா விடுதலை பெறும்பொழுது சிக்கிமும் விடுதலைபெற்றது, ஆனால் மக்கள் இந்தியாவோடு இணைவதை விரும்பவில்லை
இந்த பூட்டான் போல சிக்கிமை தன் கட்டுபாட்டில் வைக்கலாம் என திட்டமிட்டது இந்தியா, அதுவரை சிக்கல் இல்லை
ஆனால் சீனபோருக்கு பின் நிலமைகள் மாறின, அதன் முக்கியத்துவம் அதிகமானது, ஆனால் சிக்கிம் அரசரோ இணைய மறுத்தார்
இன்று சீனா முறுக்கி நிற்கும் டோக்லஹாம் பகுதி, அந்த நாலந்துலா பகுதி எல்லாம் சிக்கிமின் பகுதிகள்
அந்த சிக்கிம் இல்லை என்றால் கிழக்கேஉள்ள மாநிலங்களுக்கான தொடர்பு கடுமையாக பாதிக்கபடும்
டோக்லாஹாம் பகுதியினை துண்டித்தால் நிச்சயம் அருணாசல் பிரதேசம் இந்திய கட்டுபாட்டில் இருக்க ஏகபட்ட சிக்கல் வரும், சீனா எதிர்பார்ப்பது அதுதான்
கோழிகழுத்து பகுதி என அழைக்கபட்டு இப்பொழுது சீனா கடும் எரிச்சலோடு பார்க்கும் பகுதி அதுதான், சீனர்களுக்கும் குறி இருந்தது ஆனால் திபெத்தை ஆக்கிரமித்த சர்ச்சை இருந்ததால் அமைதி காத்தார்கள்
எனினும் இடம்பார்த்து அடிக்க காத்திருந்தார் மாவோ
சிக்கிம் யாருக்கு எனும் நிலையில் இந்திராவின் வழிகாட்டலில் இந்திய உளவுதுறை அட்டகாசமான நகர்வுகளை மேற்கொண்டது, ஒருபக்கம் நேபாளிகளால் சிக்கல் வரும்படி பார்த்துகொண்டே இன்னொருபக்கம் சிக்கிம் அரசருக்கு தனிபட்ட முறையில் செக் வைத்தது இந்தியா
கிடுக்கிபிடியில் சிக்கிய நேபாளம் வேறு வழியின்றி இந்தியாவோடு இணைந்தது
வங்கப்போர் போலவே இந்திய வரலாற்றில் மாபெரும் வெற்றி சிக்கிம் இணைப்பு
1947ல் உங்களோடு சேரமாட்டோம் என இருந்த சிக்கிமை, 1975ல் இதே நாளில் காதை பிடித்து இழுத்து வந்து சேர்த்தது இந்தியா
இந்திரா இத்தேசத்திற்கு செய்த மகத்தான காரியம் சிக்கிம் இணைப்பு. அந்த இந்திராவினை மறக்க முடியாது
இந்திய தேசத்தின் பாதுகாப்பிற்கு என்ன செய்யவேண்டுமோ அதை எல்லாம் துணிந்து செய்தார் இந்திரா
காங்கிரஸ் இத்தேசத்திற்கு என்ன செய்தது என கேட்டால், ஒரு வார்த்தையில் சொல்லமுடியாது, சொல்ல ஆயிரம் விஷயங்கள் உண்டு
இந்திய உளவுதுறையின் சாதனைகளும் கொஞ்சமல்ல, அவ்வகையில் உளவுதுறையின் மாபெரும் வெற்றிநாள் இது