இந்தியாவும் ஜி.எஸ்.டி சுழலில் சிக்கிகொண்டது

வளரும் நாடுகள் ஜிஎஸ்டி விதிக்கும் பொழுது பல விஷயங்களை கவனிக்க வேண்டும் இல்லாவிட்டால் பெரும் குழப்பம் ஏற்படும்

அந்நிய முதலீடுகள், அடுத்த நாட்டு தொழில் நிறுவணங்களின் நிலை, இன்னபிற விஷயங்கள் எல்லாம் கவனிக்கபட வேண்டும்

மலேசியா கடந்தமுறை 6% ஜிஎஸ்டி விதித்தது , அது பெரும் குழப்பங்களை கொண்டுவந்து நாட்டின் பொருளாதார ஸ்திரதன்மையினை பாதித்தது

பெரும் வித்தகரான மகாதீர் மலேசிய பிரதமரானது அந்த ஜிஎஸ்டியில்தான் கைவைத்தார், முதல் சீர்திருத்தம் அதுதான்

இந்தியாவும் அந்த சுழலில் சிக்கிகொண்டது, மோடி அரசு இருக்கின்றதே இது ராமர் அரசு அல்ல மாறாக அபிமன்பு அரசு

எல்லா வியூகத்தையும் உடைத்து உள்ளே செல்லுமே தவிர, வெளிவர தெரியாது, ஏதும் கேட்டால் குமரிமுத்து போல சிரிப்பார்கள்

அப்படி ஜிஎஸ்டியிலும் அது வசமாக சிக்கிவிட்டது, அதனால்தான் தொழில் முடக்கம் முதல் டாலருக்கு நிகரான மதிப்பு அதல பாதாளத்தில் கிடக்கின்றது

இந்நிலையில் இந்நாளை அவர்கள் மறக்கடிக்க வேண்டும்

ஆனால் பெரும் சாதனை போல ஒருவருட‌ வெற்றிவிழா கொண்டாடுகின்றார்கள், பெரும் அவமானம்

நாட்டின் பொருளாதாரத்தை கெடுத்துவிட்ட ஒரு வரிக்கு விழாவாம்

இவர்கள் ஒருமாதிரியானவர்கள்தான் ஆனால் இந்த அளவு காமெடியர்கள் என்பது இப்பொழுதுதான் தெரிகின்றது


நாட்டின் பொருளாதாரம் வளர்ந்துள்ளது : தமிழிசை பெருமிதம்

எந்தநாட்டு பொருளாதாரம் என அக்கா சொல்லவில்லை

கண்ணாடியினை பார்த்துகொண்டு தலையினை தடவிகொண்டு தன் தலைமுடி வளர்கின்றது என்பதற்கு பதிலாக பொருளாதார


பேரவையிலிருந்து வெளிநடப்பு ஏன்? மு.க.ஸ்டாலின் விளக்கம்

இதில் என்ன விளக்கம்?

நான் வெளிநடப்பு செய்யாவிட்டால் துரைமுருகன் ஜெயாவோடு நடிக்க ஆசைபட்ட கதை, பொன்முடி ராமசந்திரனுக்கு தம்பியாக நடிக்க ஆசைபட்ட கதை எல்லாம் வெளிவரும், இன்னும் கரகாட்ட மேடை போல‌ மிட்நைட் மசாலா கதை எல்லாம் பேசுவார்கள்

இதை தடுக்க ஸ்டாலின் என்ன செய்யமுடியும்? வெளிநடப்புத்தான் செய்யமுடியும்


 பிளாஸ்டிக் பொருளுக்கு தடை என்றால் காண்டம் எனப்படும் ஆணுறைக்கும் தடை வருமா? : நடிகை பூனம் பாண்டே கேள்வி

அவரவர் கவலை அவரவர்க்கு மிக பெரிது என்பது இதுதான்


நெல்லையில் அரிவாளால் கேக் வெட்டிய ரவுடி கைது, பொதுமக்களை அச்சுறுத்தும் செயல் என காவல்துறை நடவடிக்கை

ஒருவன் மீசையினை முறுக்கி 40 ஆயிரம் அரிசிகப்பலையே அசால்ட்டாக‌ கடத்தினேன் என மக்களை வேறு வகையில் மிரட்ட்டி கொண்டிருக்கின்றான் அவனை எல்லாம் விட்டுவிடுவார்கள்


நீரிழிவு நோய் ஏற்பட வைக்கும் 7 காரணங்களில் காற்று மாசுபாடும் ஒன்று, ஆய்வில் தகவல்

சென்னையும், டெல்லியும் இனி நீரழிவு நோயாளிகளால் நிரம்பி வழியலாம்

பழனிச்சாமியும், மோடியும் கவனமாக இருப்பது நல்லது.


 

மகாராஷ்டிர மாநில அரசு மருத்துவமனையில் நோயாளியை அழைத்து செல்ல ஸ்ட்ரெச்சர் இல்லாததால் அவரை போர்வையில் கட்டி இழுத்துச் சென்றனர் : செய்தி

அதே மகராஷ்டிராவில்தான் வீர சிவாஜிக்கு பல்லாயிரம் கோடி செலவில் பாகுபலி பல்வாள் தேவன் போல சிலை வைக்க போகின்றார்களாம்