இந்தியா எங்கும் லாரி ஸ்டைரக்
இந்தியா எங்கும் லாரி ஸ்டைரக் தீவிரமடைந்திருப்பது நல்லதல்ல, அரசு உடனே பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும்
லாரிகள் இந்நாட்டின் ரத்த நாளங்கள், எல்லா வித சரக்கு போக்குவரத்தும் அதன் மூலமே பரிவர்த்தனை செய்யபடும்
லாரிகள் ஸ்டிரைக்கினை தொடங்கி பல இடங்களில் விவசாயிகள் பாதிக்கபடுகின்றனர், வியாபாரிகள் படு மோசமான விலை வீழ்ச்சியினையும் சிக்கலையும் சந்திக்கின்றனர்
காய்கறி முதல் பால் வரை அத்தியாவசிய பொருட்கள் கெட்டுபோய் உற்பத்தியாளர்கள் கடும் நெருக்கடியில் இருகின்றார்கள்
இதில் இப்பொழுது டேங்கர் லாரியும் சேர்ந்துகொள்ள போகின்றதாம் இதனால் பெட்ரோல் டீசல் தட்டுபாடும் உருவாகும்
இந்த மத்திய அமைச்சரவை அமைந்தது பெரும் சாபம், அதில் ஜெட்லி தவிர குறிப்பிட்டு சொல்லமுடியாத அமைச்சர்கள் அமைந்தது மாபெரும் சாபம்
மோடி மற்றும் ஜெட்லி தவிர உருப்படியான முகம் யாருமில்லை, இந்த இருவரும் திறமையால் உருப்படி இல்லாதவர்கள் என்பது இன்னொரு விஷயம்
இந்த சிக்கலை சந்திக்க வேண்டிய மோடி ருவாண்டாவில் அந்நாட்டு அரசின் கண்ணீரை துடைப்பதாக சொல்லி கொண்டிருக்கின்றார்
லார் ஸ்ட்ரைகினை மகா அவசரமாக முடிவுக்கு கொண்டுவராவிட்டால் நாட்டில் மாபெரும் குழப்பம் ஏற்படும் என்பது உறுதி