இந்தியா டுடே மாநாட்டில் சசிகலா, பன்னீர் செல்வம்

Image may contain: 1 person, standing and text

இந்தியா டுடே மாநாட்டில் சசிகலா , பன்னீர் செல்வம் பங்கேற்பு

என்ன சொந்த கருத்து சிந்தனையினை இவர்கள் அள்ளி தெளித்துவிடுவார்கள் என இவர்களை எல்லாம் மாநாட்டுக்கு அழைத்திருக்கின்றார்கள்?

இருவருக்கும் எதாவது 4 வார்த்தை சொந்தமாக பேச தெரியுமா? நாட்டு நலனோ மக்கள் நலனோ பற்றி ஒரு வார்த்தை சுயமாக பேச தெரியுமா?

இந்த கரன்சி பிரச்சினை அல்லது வறட்சி சமாளிப்பது என கேட்டால் இருவருக்கும் சத்தியமாக தெரியாது என்பது உலகிற்கே தெரியும்.

நாட்டை உலுக்கும் பிரச்சினைகள் பற்றி 1 வார்த்தை தெரியும்? அட என்ன பிரச்சினை என்றாவது தெரியுமா? தெரியாது..

பின் யார் அழைப்பார்கள்? ஒருவரும் இல்லை

அதனால் இவர்களாக மாநாடு நடத்தி இவர்களாக அமர்ந்துகொள்வார்கள்.

இந்திய அளவில் பிரபலமாகின்றார்களாம், அடுத்து ஐநா சபையினை கூட்டும் ஐடியா இருக்கலாம்..

விவசாயி கொத்தாக செத்துகொண்டிருக்கும் நேரத்தில் இந்த பொம்மைகள் எங்கு அமர்ந்திருக்கின்றன பார்த்தீர்களா?

சரி அப்படி என்ன பேசி கிழிப்பார்கள்?

எந்த மாநாடு என்றாலும் இந்த இருவருக்கும் தெரிந்த மொழி எது?

“பெப்பே பெப்பே பெப்பப்பே..”

இவர்களை சொல்லி குற்றமில்லை, இவர்களின் குலசாமி ராமசந்திரனே ஒரு முறை உலக செய்தி ஒன்றை சொல்லி பெரும் அவமனானபட்ட காலங்கள் எல்லாம் உண்டு

அந்த பொம்மை வாரிசுமுறை தொடர்கின்றது..