இந்தியா பாலஸ்தீனம் இடையேயான உறவு காலம்கடந்து நிலைத்து நிற்கிறது – பிரதமர் மோடி
இந்தியா பாலஸ்தீனம் இடையேயான உறவு காலம்கடந்து நிலைத்து நிற்கிறது – பிரதமர் மோடி
பாலஸ்தீனம் சென்ற மோடி எப்படி பொய்மூட்டையினை அவிழ்த்துவிடுகின்றார் பார்த்தீர்களா?
1990 வரை இஸ்ரேல் தூதரகம் இந்தியாவில் கிடையாது, பாட புத்தகம் கூட பாலஸ்தீனில் இயேசு பிறந்தார் என்றுதான் வரலாற்றை சொன்னது.
அராபத்தின் அலுவலகமே டெல்லியில் இருந்தது
1995க்கு பின் இஸ்ரேலின் தந்திர பிடிக்குள் வந்தது இந்தியா, பாலஸ்தின் எனும் பெயர் மாறி அந்த இடத்தினை இஸ்ரேல் என பிடித்தாகிவிட்டது
அராபத்தின் கடைசிகால குரலுக்கும், அவரின் இண்டிபாதா நடக்கும்பொழுதும் இந்தியா மூச் விடவில்லை
பாலஸ்தீனத்திற்கு செல்லாமல் இஸ்ரேலுக்கு ஓடி சென்றவர் மோடி, இப்பொழுது சில நிர்பந்தங்களுக்காக சென்றிருக்கின்றார்
அங்கு சென்று நீங்களும் நாங்களும் நெடுங்கால நண்பர்கள் என்கின்றார், பதிலுக்கு அவர்கள் இந்திரா எங்களுக்கு செய்த உதவிகளை மறக்கமாட்டோம் என சொன்னால் மனிதரின் முகம் எப்படி கருகுமோ தெரியாது
ஆனால் அந்த வரலாறுகள் பேசபட்டால் நேரு முதல் ராஜிவ் வரை பாலஸ்தீனத்திற்கு இந்தியா செய்த அபார உதவிகள் வரும், அதனை எப்படி மோடியால் எதிர்கொள்ள முடியும்?
இந்தியாவிலும் உலக விவகாரங்களிலும் காங்கிரஸின் முத்தரை பெரிது, அதனை எல்லாம் அழித்துவிடலாம் என மோடி கனவிலும் எதிர்பார்க்க முடியாது
பாலஸ்தீனத்தை இந்தியா கைவிட்ட சூழலில் இப்படி எப்படி காமெடியாக மோடியால் பேசமுடிகின்றது? எழுதி கொடுத்தது இஸ்ரேலிய உளவுதுறையாக இருக்குமோ??