இந்தியா : வடக்கு தெற்கு…

காவல்துறை அதிகாரி சுட்டுகொல்லபட்டிருக்கின்றார், நிச்சயம் தமிழக காவல்துறை கொதித்துகொண்டிருக்கும் . அது அமைதியாக விட்டுவிடாது. அதன் கோபங்களை எங்கு காட்டவேண்டுமோ அங்கு காட்டி தமிழக போலீஸ் என்றால் என்ன? என நிச்சயம் நிரூபிக்கும்

கிட்டதட்ட 20 லட்சத்திற்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர் தமிழகத்தில் வேலை செய்கின்றதாக சொல்கின்றது ஆய்வு

என்னதான் ஊழலும் சில அட்டகாசங்களும் மிக்க மாநிலமாக தமிழகம் இருந்தாலும் அங்கும் வாழ வழியிருக்கின்றது, பெரும் சிக்கல் என ஏதுமில்லை

வெள்ளையன் போட்டுவைத்த அஸ்திவாரம் அது, காமராஜர் அதற்கு டாப் கியர் போட்டு கொடுத்தார், பின்னைய திமுக ஆட்சியும் அதனை சரியாமல் பார்த்துகொண்டது, கல்வியிலும் தொழிலும் தமிழகம் வேகமாக முன்னேறியது. ஒரளவு சிக்கல் இல்லா மாநிலங்களில் தமிழகமும் ஒன்று

வடக்கே அப்படி அல்ல, வெள்ளையன் அங்கு முழுமையாக கால்பதிக்கவில்லை கடும் எதிர்ப்புகளும் பெரும் மூடநம்பிக்கைகளும் பெருகி இருந்தன. தனக்கு எது லாபமோ அத்தோடு ஒதுங்கினான் வெள்ளையன்

தெற்கே அப்படி அல்ல 1900களிலே உருவான சீர்திருத்தம், சம உரிமை இயக்கங்கள் மற்றும் கல்வியினால் ஓரளவு மாற்றம் இருந்தது

கிறிஸ்தவ மிஷினரிகள் மட்டும் அல்ல, அழகப்ப செட்டி, பச்சையப்பன், அண்ணாமலை செட்டி போன்ற தனி மனிதர்களும் கல்லூரிகளை அமைத்து கல்வி பணி செய்து ஓரளவு மக்களை கைதூக்கிவிட்டனர்

இதனால் இங்கிருந்து வடக்கே சென்ற தமிழர்கள் ஓரளவு படிப்போடுதான் சென்றனர், இன்று சென்றாலும் அப்படியே செல்கின்றனர்

ஆனால் வடக்கே இருந்து வருபவர்கள் அப்படி அல்ல, அங்கு கல்வி இல்லை, நிலம் ஒருவரிடமே குவிந்து கிடக்கின்றது இவ்வளவிற்கும் செழிப்பான ஆறுகள் ஓடும் பகுதி ஆனால் பிழைக்க முடியவில்லை

பெரும் பழமைவாதமும், மத ரீதியான காட்டுமிராண்டி தனமும் அவர்களை விரட்டுகின்றன இப்பக்கம் வருகின்றார்கள்

வடக்கு வாழ்கின்றது, தெற்கு தேய்கின்றது என்பதெல்லாம் காமராஜரை வீழ்த்த சொல்லபட்ட பொய்கள். வடக்கு இன்றுவரை வாழவுமில்லை தெற்கு அன்றிலிருந்தே தேயவுமில்லை

அவர்கள் இங்கு வந்து எந்த வேலையும் குறைந்த சம்பளத்திற்கு செய்கின்றார்கள், எல்லோரும் குற்றவாளிகள் அல்ல மாறாக சிறுவயதிலே குற்ற செயல்களால் புறக்கணிக்க பட்டவர்களும், சில சமூக விரோதிகளும் இங்கு வந்து அதனையே தொடர்கின்றார்கள்

விளைவு இன்றைய குற்ற செயல்களில் அவர்கள் பங்கு கணிசமாகின்றது, பெரும் கொள்ளைகள் அவர்களால் நிகழ்த்தபடுகின்றன, உச்சமாக பின் தொடர்ந்த காவலரே கொடூரமாக கொல்லபட்டிருக்கின்றார்

இப்பொழுது சிக்கல் என்னவென்றால் இந்தியாவின் எல்லா பகுதியிலும் தமிழர் இருப்பது போல இங்கும் வடமாநிலத்தவர் இருக்கின்றார்கள்

ஆனால் முறையற்ற வகையில் இருக்கின்றார்கள், அவர்களின் பிண்ணணி என்ன? ஏதும் குற்றம் உண்டா? சிறை தண்டனை பெற்றவரா? தேடபடும் குற்றவாளியா என்பது பற்றியெல்லாம் ஒரு தரவும் இல்லை

இது ஒழுங்குபடுத்தபட வேண்டும், அவர்கள் இங்கு வந்து காலாட்டிகொண்டு படுக்க முடியாது. நிச்சயம் வேலைக்கு செல்ல வேண்டும் , அங்கு அவர்களை பற்றிய விவரம் சரிபார்த்தபின்பே வேலைக்கு எடுக்கபட வேண்டும்

இதுபற்றிய துறை உருவாக்கபட்டு அவர்களை கண்காணிப்பில் வைத்தால் ஒழிய இதனை தடுக்க முடியாது

இதற்கு காவல்துறை மட்டுமல்ல, பொதுமக்கள் ஒத்துழைப்பும் மகா முக்கியம். நம் மாநில பாதுகாப்பில் நமக்கும் பங்கு உண்டு

எவனா இருந்தால் என்ன? குறைந்த கூலிக்கு சிக்கிவிட்டான் என அமர்த்திகொண்டால் அது நமக்கோ அல்லது அக்கம்பக்கத்தில் இருப்பவருக்கோ ஆபத்தாய் முடியும்

கொள்ளை என்றல்ல இன்னும் பல வரம்புமீறிய செயல்களில் வடமாநிலத்தவர் ஈடுபடுவதாகவும் , மக்கள் புகார் கொடுக்க தயங்கும் குற்றம் அவை என்றும் செய்திகள் சொல்கின்றன‌

என்ன இருந்தாலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என ஒன்று எக்காலமும் உண்டு, வீரப்பன் கூட காட்டில்தான் பதுங்க முடிந்தது. ரவுடிகள் கூட மறைமுகமாகத்தான் இங்கு இயங்கமுடியும்

ஆனால் வடக்கே அப்படி அல்ல, சமூக‌ ஒழுங்கு என்றால் என்ன? அமைதியாக பொது இடங்களில் உலாவுவது எப்படி என்று கூட அவர்களுக்கு தெரியாது. ஒரு மாதிரி கலாச்சாரம் அது, சந்தேகம் இருப்பின் தெரிந்தவர்களிடம் விசாரிக்கலாம்

அப்படிபட்ட கூட்டம் இங்கு வந்தால் பெரும் கட்டுபாடு போட்டு வைக்க வேண்டியது நமது கையில் இருக்கின்றது

தமிழகம் அமைதியான மாநிலம் என்றுதான் மார்வாடிகள் ராஜஸ்தானில் இருந்து வந்து இங்கு பெரும் எண்ணிக்கையில் எல்லா தொழிலிலும் இருக்கின்றார்கள். அவர்கள் தமிழர்பால் நல்ல மரியாதையும் நன்றியும் கொண்டவர்கள்

இந்த சில கொள்ளையர்களால், அவர்களின் படுபாதகத்தால் எல்லா ராஜஸ்தானியும் அப்படி என சொல்லமுடியுமா? நிச்சயம் முடியாது

களைகளை மட்டும் பிடுங்குவோம் , நற்பயிர் நம்மோடே இருக்கட்டும்

இதில் ஒரு விஷயம் உறுத்துகின்றது.

தமிழ்நாட்டில் வேலைக்கு ஆளே இல்லையா? உழைப்பிற்கு பெயர்போன தமிழன் என்ன ஆனான்? எப்படி வேலையாட்களுக்கு தட்டுபாடு என பார்த்தால் விஷயம் எளிது

தினகரனை சுற்றி எப்பொழுதும் பெரும் கூட்டம் இருக்கின்றது, அது தினகரன் செல்லுமிடங்களில் எல்லாம் கூட்டத்தை கூட்டுகின்றது

இப்படியே ஸ்டாலின், அன்புமணி, திருமா, சீமான் என ஆளாளுக்கு பெரும் கூட்டத்தை வைத்திருக்கின்றார்கள்

இதில் எவனாவது உருப்படியான வேலை செய்கின்றானா என்றால் நிச்சயம் இல்லை, வேலை இருந்தால் அவன் ஏன் இவர்கள் பின்னால் போகின்றான்?

ஆக இந்த தலைவர்கள் எல்லாம் ஒரு கூட்டத்தை வைத்துகொண்டு, தாங்களும் எப்படியோ உருட்டி மிரட்டி சம்பாதித்து அதில் புல்லுக்கும் கசியவிடுகின்றார்கள்

உழைக்க வேண்டிய தமிழன் அய்யா வாழ்க, அம்மா வாழ்க அவன் வாழ்க இவன் வாழ்க என கோஷம் போடுவதிலும் , போஸ்டர் ஒட்டுவதிலுமே தீவிரமாக இருக்கின்றான்

இதில் சினிமா அடுத்தவகை அதற்கொரு கூட்டம்

வேலையே செய்யாமல் கட்சி எனும் அடையாளத்தோடு சம்பாதித்துவிட்டவனை பார்த்து ஒழுங்காக வேலை செய்தவனும் அரசியல்வாதி பின்னால் ஓடுகின்றான்

அண்ணன் நம்மோடு பால் விற்றவர், களை பிடுங்கியவர் ஆனால் இன்று அமைச்சராகிவிட்டார் எப்படி? நாமும் அப்படி ஆகலாம் என எல்லோரும் கிளம்புகின்றனர்.

இப்படியாக அரசியலுக்கு சேரும் கூட்டமும் அதில் புரளும் பணமும் சாதாரண தொழிலில் இருந்து மக்களை புறம்தள்ளுகின்றன‌

ஆ.கே நகரையே பாருங்கள், எத்தனைபேர் கட்சிக்காக சுற்றிகொண்டிருக்கின்றான், இவனுக்கெல்லாம் என்ன வருமானம்? என்ன தொழில்? எப்படி சுற்ற முடிகின்றது?

ஆக இப்படி தமிழன் எல்லாம் ஆளாளுக்கு ஒருவன் பின்னால் செல்ல தொடங்கினால் யார் வேலை செய்வார்?

வடநாட்டில் இருந்துதான் வருவார்கள், அவர்களையும் தடுத்தால் ஆப்ரிக்காவில் இருந்துதான் இனி அள்ளிகொண்டுவர வேண்டும்

இந்த அரசியல் கட்சிகளை மட்டும் தடை செய்தால் போதும் லட்சகணக்கான தமிழர்கள் ஒழுங்காக வேலைக்கு செல்வார்கள், எந்த மாநில தொழிலாளியும் இங்கு வரவேண்டிய அவசியம் இருக்காது.