இந்திய கிரிக்கெட் அணி கொஞ்சம் வலுவடைந்திருக்கின்றது

இந்திய கிரிக்கெட் அணி கொஞ்சம் வலுவடைந்திருக்கின்றது என்பதை விட அதில் அரசியலும் நடக்கின்றது என்பது புரிகின்றது.

விராட் கோஹ்லிக்கும் அணியில் சில வீரர்களுக்கும் நடக்கும் அரசியல் ஒன்றும் ரகசியமல்ல.

ஹோலி திருமணம் செய்ய லீவ் போட்ட நிலையில் இலங்கையினை எதிர்கொண்ட இந்திய அணி முதல் போட்டியில் தடுமாறியது. “நான் இல்லா இந்திய அணி என்ன பாடு படுகின்றது பார்த்தீர்களா..” என கோஹ்லி சொல்ல அது வசதியாயிற்று

அதற்கு பதிலடியாக அவர் இல்லாவிட்டாலும் மாபெரும் வெற்றி அடைவோம் , கோஹ்லி சும்மா என சொல்லி அடித்திருக்கின்றது இந்தியா,

மிக மிரட்டலான வெற்றி

இலங்கைக்கு அச்சம் வந்திருக்குமோ இல்லையோ நிச்சயம் கோஹ்லிக்கு வந்திருக்கும், மனிதரை நிம்மதியாக தேனிலவு கூட கொண்டாட விடமாட்டார்கள் போலிருக்கின்றது


திருமணநாளினை இரட்டை சதம் அடித்து கொண்டாடினார் ரோகித் சர்மா : செய்தி

ஒஹோ.. ஒவ்வொரு பந்தும் அவருக்கு மனைவி முகம் போலவே தெரிந்திருக்கும் போல. அவர் அடித்த அடியும் வெறுப்பிலும் கோபத்திலும் அடித்தது போலத்தான் இருந்தது

கோஹ்லிக்கும் திருமணம் ஆகிவிட்டதாம், சும்மாவே அவர் கோபக்காரர், மனிதர் இனி அடுத்த திருமணநாளில் மூன்று சதமும் அடிக்கலாம்.