இந்திய சுதந்திர வரலாறு : 04

கலீபக்களின் பெரும்படை சிந்துபகுதியினை கைபற்றி மேற்கொண்டு நகர்ந்தபொழுது மேவாரில் இருந்து கிளம்பி சென்ற பாப்பா ராவல் பெரும் போரை நடத்தினான்

அந்த போல் பொதுபுயுகத்துக்கு பின்னரான 738ம் ஆண்டுவாக்கில் நடந்திருக்கலாம், அவரின் பெரும் எதிர்ப்பு கலீபா படையினரை முன்னேறவிடாமல் தடுத்தது

பாப்பார் ராவல் கலீபாக்களை அனாசயமாக எதிர்ப்பதை அறிந்த இந்துக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவருக்கு ஆதரவளிக்க எதிரிபடைகளை பின்வாங்க வைத்தார் ராவல்

ஒரு கட்டத்தில் இந்திய எல்லையில் இருந்தே அவர்களை விரட்டி மேற்கொண்டு அவர்கள் வந்துவிடாமல் இருக்க பெரும் கோட்டையும் காவலும் கொண்ட அரண்மிக்க ஊரை நிர்மானித்தார்

அதுதான் ராவல்பிண்டி, பப்பா ராவலின் பெயரில் அமைக்கபட்ட ராவல் பிண்டி

இன்று பாகிஸ்தானில் இருக்கும் அந்த ஊர் என்றென்ற்றும் பப்பா ராவலின் பெயரை சுமந்தபடி நின்றுகொண்டிருக்கின்றது

ராஜபுத்திர மன்னர்களில் தலை சிறந்தவனான அந்த ராவல் கொடுத்த எழுச்சியில் இரு நூற்றாண்டுக்கு எந்த சிக்கலுமில்லை, அதன் பின் பெரும் படையோடு வர யாருமில்லை ஆனால் கொள்ளை கும்பல்கள் அதிகரித்தன‌

ஆப்கனில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவதும் கிடைப்பதை சுருட்டி கொண்டு ஓடுவதும் வழமையாய் இருந்தது

அதாவது இந்தியாவினை ராணுவரீதியாக பிடிப்பது அவர்களுக்கு முடியாது என தெரிந்ததால் எல்லையோர பகுதிகளில் கொள்ளையிட்டு ஓடிவிடுவார்கள்

இப்படி கொள்ளை கும்பல்கள் பெருகின அவர்களில் ஒருவன் ஆப்கனின் கஸ்னி (கஜினி) பகுதியினை ஆண்ட முகமது

இவன் பெரிய அரசனோ இல்லை பெரும் படை வைத்திருந்தவனோ அல்ல மிக சிறியபடை அவனுடையது அதை கொண்டு இந்தியாவினை வெல்வதோ ஆள்வதோ முடியாது என்பதால் அவனின் ஒரே இலக்கு கொள்ளைபடிப்பது

அந்த கொள்ளையினை வடமேற்கு இந்தியாவில் பல இடங்களில் செய்தான் ஒரு சிலமுறை கொள்ளையிட்டான் பலமுறை ஓட விரட்டபட்டான்

இப்படி பல‌ முறை முயன்றும் அவனிடம் பெரும் செல்வம் சிக்கவில்லை , அடிக்கடி அடிபட்டு ஓடி ஓடி திரும்புவதைவிட மொத்தமாக ஒருமுறை சரியான இலக்கினை அடித்து சென்றுவிட திட்டமிட்டான்

அவனுக்கு குஜராத்தின் சோமநாதர் ஆலயம் மேல் குறிவிழுந்தது, அவன் அடிக்கடி வந்தபொழுதெல்லாம் அன்றைய இந்து மன்னன் ஜெயபாலன் அவனை ஓட ஓட விரட்டி அடித்து கொண்டிருந்தான்

இதனால் மிக தேர்ந்த திட்டம் தீட்டினான் அந்த கஜினி, தன் படையினரை சிறிய சிறிய குழுக்களாக பிரித்து பக்தர்கள் போர்வையில் ஊடுருவசெய்தான், ஆம் பக்தர் வடிவில்தான் அவர்கள் கோஷ்டி வந்தது

அவனும் சாதாரணவனாக வந்து கலந்துகொண்டான், திடீரென அக்கூட்டம் ஒன்று சேர்ந்து ஆலயத்தை கொள்ளையிட ஆரம்பித்தது

சோமநாதபுரி ஆலயம் அன்று இன்றைய திருப்பதிக்கு ஈடாக இருந்தது, காரணம் அந்த அந்தரத்தில் தொங்கும் சிவலிங்கம்

நான்கு பக்கமும் காந்தகற்களை பதித்து நடுவில் இரும்பு லிங்கத்தை நிறுத்தி அந்த ஈர்ப்பு சமநிலையில் லிங்கம் மிதப்பது போல் வைத்திருந்தார்கள் இந்துக்கள்

அன்று உலக அதிசயமாக அது கருதபட்டது

காணிக்கைகள் குவிந்தன, இன்னும் சூர்யநகர் (சூரத்) போன்ற துறைமுகங்களின் வருமானத்திலும் இதர வருமானத்திலும் அக்கோவிலுக்கு பொன்னும் வைரமும் குவிந்திருந்தது

இந்துக்கள் எப்பொழுதும் தங்கள் இல்லத்தைவிட தங்கள் அரண்மனைவிட அதிக செல்வம் கோவிலில் இருக்க வேண்டும் என கருதுவார்கள் அவர்கள் தர்மம் அது

அதனால் கோவில்களில் பெரும் செல்வம் இருக்கும், கட்டபடும் பொழுதே நவமணிகள் விதைத்துத்தான் கட்டுவார்கள் , இன்னும் சில இடங்களில் பிரபஞ்ச சக்திக்காக பலவகை மணிகளை புதைப்பார்கள், கர்ப்பகிரகத்தில் தெய்வத்துக்கு சாற்றபடும் நகைகளை போல பூமிக்குள்ளும் மணிகள் புதைப்பார்கள்

அன்று தன் திட்டம் நிறைவேறியதில் உற்சாகமானான் கஜினி முகமது, காரணம் மன்னன் ஜெயபாலன் வேறு விவவகாரத்தில் தொலைதூரத்தில் இருந்தான்

அந்த நேரம்தான் மிதக்கும் சிவலிங்கத்தையும் காந்த கற்களையும் உடைத்துவிட்டு புகுந்து எல்லா கொள்ளையும் செய்தான், கடைசி வாய்ப்பு என்பதால் ஆலயத்தை இடித்தும் தங்கமும் மணியும் தேடினான்

பெரும் கொள்ளையினை செய்துவிட்டு ஆப்கனை நோக்கி ஓடினான் அதன் பின் அவன் வரவே இல்லை

ஆம், அவன் விடா முயற்சியாளன் 17 முறை முயன்ற ஊக்கம் மிக்கவன் என்பதெல்லாம் சரியல்ல. அவன் கொள்ளையிட முயன்றான் பலமுறை திரும்ப ஓடியவன் ஒரே ஒருமுறை பெரிய கொள்ளையுடன் திரும்பினான்

அவனுக்கு தெரியும், ஒரு அடிதான் அடிக்கமுடியும் அதை தாண்டி முடியாது இந்தியாவினை ஆளவும் முடியாது என்பது

இதெல்லாம் நடந்தது பொதுயுகத்துக்கு பிந்தைய 960ம் ஆண்டு காலங்கள்

அவன் கொள்ளைக்கு பின் இந்தியாவில் பாதுகாப்பு அதிகரித்தது சில காலங்களுக்கு அமைதி நிலவிற்று

வருடம் பொதுயுகத்துக்கு பின் 1150 ஆயிற்று, அப்பொழுது ஆப்கனில் காவ்ரி (காவேரி) பகுதியில் இருந்து ஒரு முகமது உருவானான், வரலாறு அவனை கோரி முகமது என்றாக்கிற்று

1170ல் கைபர் வழியாக ஊடுருவிய அவன் தார்பாலைவனத்தை அண்டி வந்து கங்கை கரை நோக்கி வரமுயன்றான், அதற்கு காரணமும் இருந்தது

ஆம் அப்பொழுது அப்பக்கத்தை ஆண்டுகொண்டிருந்தது ஒரு இந்து பெண் அவள் பெயர் நாயகி தேவி

சாளுக்கிய வம்சத்தின் அரசியாக சோலங்கி பக்கம் அவள் அந்த 1170களில் ஆண்டு கொண்டிருந்தாள்

கணவன் இல்லை மாறாக தன் சிறுவயது மகனுக்கு பதிலாக ஆட்சி நடத்தியிருக்கின்றாள், பெண் ஆளும் அரசு என மட்டமாக எண்ணி சரணடைய ஓலை அனுப்பினான் கோரி.

அதுவும் அவனோடு ஆப்கனுக்கு வருமாறு சீண்டல் வேறு

நாயகி தேவி அஞ்சவில்லை, தந்திரமான திட்டம் செய்தாள், போரில் இரு படைகள் மோதுவதை விட நாம் இருவரும் வாள் வீசுவோம் தயாரா என சவால்விட்டாள்

தனக்கு சவால் அதுவும் ஒரு பெண் விடும் சவால் என்பதால் மானபிரச்சினையாக கருதி ஏற்றுகொண்டான் கோரி

தான் அவனுடன் தனியாக சந்திக்க‌ , குறிப்பிட்ட நாளில் கயகாதாராவில் அவனை வருகின்றேன் என சொல் என செய்தி அனுப்பினாள்சொன்னளே அன்றி, தன் படைவீரர்களில் தேர்ந்தோர் 20 ஆயிரம் பேரோடு ஒரு பாதுகாப்பினை பின்னால் செய்துவிட்டு கோரியினை சந்திக்க கிளம்பினாள்

கோரி இம்மாதிரி விவகாரங்களில் தேர்ந்த தந்திரசாலி அவன் 50 ஆயிரம் வீரர்களை மறைந்திருக்க செய்து கயதாரா வந்தான்

கிருஷ்ணன் கோவிலில் வேண்டிவிட்டு வந்த தேவி கோரியினை நேருக்கு நேர் சந்திக்கின்றாள், அவளின் வாள்வீச்சில் அஞ்சுகின்றான் கோரி, அவளின் வாள் வீச்சின் வகை அப்படி இருந்தது, இன்னும் சில நிமிடங்களில் அவள் தன்னை கொன்றுவிடுவாள் எனும் நிலைக்கு கோரி தள்ளபட்டான்

அவள் சளைக்காமல் ஆடும் ஆட்டமும், லாவகமான வாழ்வீச்சும் அவனுக்கு காயங்களை ஏற்படுத்தின‌

ஆனால் அவளை நெருங்கமுடியவில்லைவிட்டால் அவள் அவனை கொன்றுவிடும் ஆபத்தில் இருக்க, இனியும் தாமதிக்கா கோரிபடை களம் புகுந்தது, அதை கண்டதும் ராணியின் படைகளும் களமிறங்கின‌

கோரிபக்கம் 50 ஆயிரம் பேர், ராணி பக்கம் 20 ஆயிரம் பேர்யுத்தம் கடுமையாக இருந்தது, ராணி நாயகி தேவி காளியின் அம்சமாக ஆடினாள்.

கோரியின் படைகள் துவம்சம் செய்யபட்டன. கோரியினை பாதுகாப்பதே பெரும்பாடாய் இருந்ததுகோரியின் படைகள் தோல்விக்கு திரும்பின, கோரி படுகாயமுற்றான்.

அவனை அவன் வீரர்கள் சூழ்ந்து காத்தனர், அதை உடைத்து கோரியினை முடிக்க கடுமையாக முயன்றாள் ராணிஅப்பொழுதுதான் அந்த துயரம் நடந்தது

நாயகிதேவி செய்த தந்திரம் அவளுக்கு எமனானது, எல்லாம் முடிந்தது என ராணி கொஞ்சம் அசந்திருந்த நேரம் கோரியின் மறைந்திருந்த படைகள் பின் பக்கமாய் இருந்து அவள் மேல் ஈட்டி வீசின‌

ராணி நாயகி தேவி கடும் காயமுற்றார்

ராணியினை சாலோங்கி வீரர்கள் சூழ , அந்த இடைவெளியில் முல்தானுக்கு தூக்கி செல்லபட்டான் கோரிராணி சாலோங்கி நாட்டுக்கு கொண்டு செல்லபட்டு காயம் காரணமாக சிலகாலம் கழித்து உயிர்விட்டார்

ராணியால் ஓட அடிக்கபட்ட கோரி இனி அவள் இல்லை என்பதும் நிம்மதி மூச்சுவவிட்டான் இம்முறை அவன் ராஜஸ்தான் பக்கம் செல்லாமல் அதன் வடக்கு பக்கமாக வந்தான்

அப்பொழுதுதான் அவானி எதிர்கொண்டான் மாவீரன் பிரித்வி ராஜன்

இன்றைய டெல்லி ஆஜ்மீர் பகுதியினை ஆண்ட அந்த மாமன்னன் பிரித்த்வி ராஜன் 20ம் வயதிலே அரசனாய் இருந்தான், மாபெரும் வீரனாய் இருந்தான்

1771ல் நாயகி தேவியிடம் தோற்றோடிய கோரி இனி இந்தியாவினை வெல்ல பெரும் படை அவசியம் என ஆப்கன் முழுமையும் தன் கட்டுபாட்டில் கொண்டுவந்து பெரும்படை திரட்டினான்

1791ல் அதாவது இருபது வருடம் கழித்து டெல்லியினை ஆள்வது ஒரு 20 வயது அனுபவமில்லாதவன் என கருதி படையெடுத்தான்

ஆனால் வீரத்தை போரில் காட்டினான் பிருத்வி ராஜன், ஹரியானாவின் தாராய் அருகே அந்த யுத்தம் நடந்தது

சுமார் 3 ஆயிரம் யானை உள்ளிட்ட பெரும் படையுடன் கோரியினை துவம்சம் செய்த பிரித்வி கோரியினை வளளைத்து பிடித்து விலங்கிட்டான்

அந்த இடத்திலே கோரியினை வெட்டி எறிந்திருந்தால் இந்திய தலைவிதி மாறியிருக்கும் ஆனால் இந்து தர்மபடி அவனை ஆப்கனுக்கு திருப்பி அனுப்பினான் பிருத்வி

அடிபட்ட பாம்பாக திரும்பிய கோரி அவமானத்தில் நெளிந்தான் எனினும் எப்படியாவது ஒரு இடத்தில் மறுபடி பாயலாம் என தன் இரு கண்களையும் இந்தியா நோக்கியே வைத்திருந்தான்

அவன் எதிர்பார்த்த வாய்ப்பு பிருத்த்வி ராஜன் சம்யுக்தா வடிவில் வந்தது, அந்த காதலும் அந்த திருமணமும்தான் விபரீதங்களுக்கு காரணமானது

இங்கு அந்நியர் வரவும் ஆளவும் ஒரு காலமும் அவர்கள் ஆயுத பலமும் அறிவும் காரணமல்ல இந்தியரிடையே இல்லாத ஒற்றுமையும் வீண் கவுரவ சண்டையுமே காரணம் என்பதை அந்த திருமணமே முதலில் காட்டிற்று

பிருத்த்விராஜன் வாழ்வை ஒருமுறை பார்த்துவிட்டு கோரியினை பார்க்கலாம்

(தொடரும்)