இந்திய சுதந்திர வரலாறு : 07

அந்த 15ம் நூற்றாண்டில்தான் இந்தியாவின் தலைவிதி பெரிதாக மாறிற்று ஏறகுறைய ஒரே நேரத்தில் இரு அந்நியர்கள் கால்வைத்தார்கள்

ஒருவன் வடக்கே நிலம் வழியாக கால் வைத்தான் அவன் பெயர் மிர் சாகிர் உல் முகமட், அவன் தனக்கு தானே பாயும் புலி என ஒரு பட்டம் வைத்து கொண்டான், அதற்கு உஸ்பெக் மொழியின் பெயர் பாபர்

இன்னொருவன் கடல் வழியாக இந்தியாவினை அடைந்திருந்தான் அவன் பெயர் வாஸ்கோட காமா, அது வரை ஐரோப்பாவுக்கு நேரடி கடல்வழி கிடையாது அரேபியாவின் செங்கடலை அன்மித்த பகுதிகள் வரை இந்திய கப்பல் செல்லும் அங்கிருந்து தரை வழியாக செல்லும் சரக்குகள் மத்திய தரைகடல் வழியாக ஐரோப்பா செல்லும்

வாஸ்கோடகாமா ஆப்ரிக்காவினை சுற்றி இந்தியா வரும் வழியினை அறிந்தான், அதற்கு காரணம் நிலம் வழியாக அதாவது துருக்கிவழியாக சென்ற இந்திய மிளகு உள்ளிட்டவை துருக்கிய சுல்தானின் எழுச்சியால் பாதை மூடபட்டிருந்தது, சிலுவை போர்களின் வெற்றி துருக்கியர் பக்கம் சரிய பாதை இல்லை என்றாயிற்று

இதனாலே கப்பலேறி வெறி பிடித்து இந்தியா தேடி வெள்ளையர் கூட்டம் அலைந்தது கொலம்பஸ் அமெரிக்கா கரையில் போய் இந்தியா என முட்டிகொண்டான், இன்னும் யார் யாரோ தோற்றார்கள்

ஆனால் வாஸ்கோடகாமா கேரளத்தின் கள்ளிகோட்டையினை வந்தடைந்தான்

அன்றைய இந்தியாவின் வளம் ஆற்றங்கரையிலும் நாட்டுக்குளும்தான் இருந்தது, 15ம் நூற்றாண்டில் இந்திய சுல்தான்களிடமும் நாயக்கர்களிடம் கப்பல்படை இல்லை, மலையாள அரசர்களிடமும் பெரும் கப்பல் படைக்கு அவசியமில்லை இதனால் கடற்கரைகள் கொஞ்சம் பலவீனமாக பின் தங்கித்தான் இருந்தன, அப்படி இருந்த கள்ளிகோட்டையினை முழு கிறிஸ்தவ காலணியாக்க முயன்றான் வாஸ்கோடகாமா

ஆனால் பெரும் கலவரம் மூண்டு அவன் அடித்தே கொல்லபட்டான், அவன் கல்லறை இன்றும் கோழிக்கோட்டில் உண்டு

இந்தியாவின் ஒரு ஓரத்தில் கிறிஸ்துவ ஆட்சியினை நிறுவமுயன்று முதலில் தோற்று செத்தவன் அவனே, 1524ல் அவன் செத்தபின் மலையாள இந்துமன்னர்கள் சகவாசம் வேண்டாம் என போர்ச்சுகீசிய கோஷ்டி பிஜப்பூர் சுல்தானிடம் அனுமதி வாங்கி கோவா பக்கம் ஒதுங்கிற்று

1526ல் பாபர் இந்தியாமேல் படையெடுத்தான் அவனுக்கும் லோடிக்கும் மோதிற்று

இந்த மோதலை உன்னிப்பாக கவனித்து வந்தான் சங்கர சிம்மன் எனும் ராணா சங்கா, அவன் ராஜபுத்திர வம்சத்தின் பிரதான தலைவனாய் இருந்தான், இரண்டாம் பிரித்த்விராஜன் என கொண்டாடபட்டான்

அவன் இந்து மன்னர்களை திரட்டி பெரும் படை அமைத்து லோடியினை ஒழித்து இந்துஸ்தான்விடுதலையினை அறிவிக்க தயாரான பொழுதுதான் பாபரின் மிரட்டல் இருந்தது

இரு எதிரிகளை ஒரே நேரம் சந்திப்பது முட்டாள்தனம் என பதுங்கினான் சங்கா, லோடியினை பாபர் வென்றான், அப்பொழுதுதான் பீரங்கியினை முதலில் இந்தியாவுக்கு அறிமுகபடுத்தினான் பாபர்

லோடியினை வென்ற பாபரை மிக எளிதாக நெருக்கினான் ராணா சங்கா, சங்காவின் வீரபோரில் பாபர் தோல்விமுகத்தில் இருந்தான்

1525ல் பாபர் தோற்றோடும் நேரமும் வந்தது, திரும்பி அவன் ஆப்கனுக்கே ஓடுமாறு சங்காவின் சேனை வெற்றியின் விளிம்பில் நின்றது

தந்திரகார பாபர் பேச்சுவார்த்தை என வலைவிரித்தான், ராணாவின் தவறு அதை நம்பியது

பாபர் தான் ஒரு குறுநில மன்னனாக ஒரு ஓரத்தில் ஆள்வதாகவும் உரிய கப்பத்தை கட்டுவதாகவும் நாடகமாடி பேச்சுவார்த்தையினை நீடித்து கொண்டே ராணாவின் நம்பிக்கைகுரிய தளபதிகள் சிலரை வளைத்தான், அப்படிபட்ட துரோகிகள் இந்துஸ்தானத்தில் எக்காலமும் உண்டு

அப்படி சிக்கியவன் சில்காடியா எனும் சிற்றரசன், ராணா சங்காவினை கொல்ல உதவினால் சங்காவின் மாமன்னன் இடத்தை அவனுக்கு தருவதாக ஆசைகாட்டி தூண்டிவிட்டான் பாபர்

இந்த சூது தெரியாமல் பாபரை விரட்டி அடிக்கும் கடைசி யுத்தம் தொடங்கினான் சங்கா, எதிர்பார்த்தபடியே பாபர் தோற்று ஓடினான், அவனை விரட்டி சென்றான் சங்கா, அப்படி செல்லும்பொழுது சங்காவினை பின்னால் இருந்தே குத்தி கொன்றான் சில்காடியா

தந்திர பாபர் திரும்பிவந்து சங்காவின் நிலைகுலைந்த சேனைகளை வென்று தன் மொகலாய ஆட்சியினை நிறுவினான்,

ஆனால் இந்துக்கள் விடவில்லை ராணா சங்காவின் இதர விசுவாசிகள் சில்காடியா அரசனை கொன்றார்கள் பாபருக்கு பெரும் சவால் விடபட்டது

பாபர் உண்மையினை உணர்ந்தான் , இந்துக்கள் எதிர்ப்பில் இங்கு ஆளமுடியாது ஒரு காலமும் முடியாது என்பது அவனுக்கு தெரிந்தது, இந்துக்கள் என்றேனும் ஒரு நாள் தங்கள் அரசை விட்டுவைக்காமல் விரட்டுவார்கள் இந்து உணர்வு அப்படி என்பது அவனுக்கு புரிந்தது

இதனால் கடுமையாக அவன் பணிந்துதான் சென்றான், அவன் அந்த சர்சைகுரிய மசூதி கட்டியது கூட உங்கள் அருகே உங்களில் ஒருவனாக நான் தொழுவேன், நான் உங்களில் ஒருவன் என இந்துக்களிடம் காட்டுவதற்காகவே

அப்படியெல்லாம் அவன் பணிந்து ஆண்டபொழுதுதான் அவன் மகன் நோயில் விழ அந்த கவலையில் 1530ம் ஆண்டே இறந்தான் பாபர் மகன் பிழைத்துகொண்டான்

தந்திரகார பாபர் இறந்ததும் மொகலாயருக்குள் மோதல் வந்தது, சர் ஷா சூரி என்பவன் ஆட்சியினை பிடிக்க அவனுக்கும் மொகலாயருக்கும் மோதியது, பாபரின் மகன் ஹூமாயூன் தப்பி ஓடி யுத்தம் நடத்தினான்

இந்த மோதலில் ஷெர்ஷாவினை வீழ்த்தி ஆட்சியினை பிடித்தான் இந்துமன்னன் ஹெமு எனும் ஹேமந்த், ஆம் மொகலாயரை விரட்டி அடிக்க அன்றே இத்தேசம் பெரும் போரில்தான் இருந்தது

எனினும் மொகலாயரின் மிரட்டல் தொடர்ந்தது, அவர்களின் பெரும் பலம் மத்திய ஆசியாவில் இருந்து அலை அலையாக ஆட்களை இறக்குவது

இந்துக்களுக்கு அந்த வாய்ப்பு இல்லை அவர்களின் தென்னக நாட்டில் பாமினி சுல்தான்களே இருந்தார்கள், அவர்களை தாண்டித்தான் நாயக்கர்கள் தமிழகத்தில் இருந்தார்கள், இதனால் அவர்கள் உதவி கிடைக்கவில்லை

வடக்கே இந்துக்களும் தெற்கே இந்துக்களும் சேரமுடியாதபடி பாமினிக்கள் பலமாக இருந்தார்கள்

இப்படி சிக்கிகொண்ட வட இந்திய இந்துக்களால் பெரும் படை திரட்டமுடியவில்லை என்றாலும் வீரமாக போரிட்டு கொண்டே இருந்தார்கள், எதிர்ப்பு எப்பொழுதும் வலுவாக இருந்தது

ஹூமாயுனும் வீழ்த்தபட்ட நேரம் ஆட்சி இந்துக்களிடம் 1550களில் சிக்கியது எனினும் ஹூமாயுனின் நம்பிக்கைகுரிய தளபதி பைராம்கான் பெரும் படைதிரட்டி வந்து மறுபடியும் மொகலாயரை ஸ்தாபித்தான் அப்படியே பாபரின் பேரன் ஜலாலுதீனை மன்னராக்கினான்

ஜலாலுதீன் பாபர் போல தந்திரசாலி, இந்துக்களுடன் உறவாடாமல் வாழமுடியாது ஆளமுடியாது என்பதால் இந்துக்களுடன் மண உறவே கொண்டான். மொகலாயருக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கிய ராஜபுத்திரரின் குடும்பத்திலே ஜோத்பாயினை திருமணமும் செய்தான்

அப்பொழுது ஒரு அமைதி நிலவிற்று, அந்த அமைதி இரு தலைமுறைக்கு நீடித்தது

இந்த காலகட்டத்தில் இந்துக்களுக்கும் பெரும் அச்சுறுத்தல் இல்லை, ஜலாலுதீன் மிக கவனமாக ஆட்சி நடத்தினான், பாபர் செய்ய விரும்பியதை அழகாக செய்தான்

இந்துக்களுக்கு பெரும் இடையூறு இல்லை, கட்டாய மதமாற்றம் இல்லை, பெரும் வரி இல்லை, இந்துக்களுடன் மோதல் இல்லை என தன்னை பெருந்தன்மையாக காட்டி கொண்டான்

உண்மையில் அது பெருந்தன்மை அல்ல, பயம் இந்துக்களுடன் உரசினால் ஆட்சி நிலைக்காது எனும் பயம்

இதே நேரம் தெற்கே விசித்திரங்கள் நடந்தன‌

கோவா பக்கம் பிஜப்பூர் சுல்தானிடம் அனுமதி வாங்கி வியாபாரம் செய்த போர்ச்சுகீசியர் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டனர், கிறிஸ்தவர்களாக மாறிய இந்துக்கள் போர்ச்சுகீசிய கட்டுப்பாடு பிடிக்காமல் ஒதுங்கியபொழுது பெரும் கொலைகளை நிகழ்த்தினர்

15ம் நூற்றாண்டின் மத்தியில் அந்த ரத்த சரித்திரம் நடந்தது, இயேசுவின் பெயரால் நடந்தது

அதை தடுக்க இந்து அரசர்கள் இல்லை, பிஜப்பூர் சுல்தானுகு அவசியமுமில்லை

எனினும் அந்த கொடூரங்கள் கிறிஸ்தவர்கள் பற்றிய அச்சத்தை தோற்றுவித்தன‌

அரேபியாவில் பண்டைய மதங்களை அழித்து தடமின்றி புதைத்த இஸ்லாமியமும் ரோமிலும் கிரேக்கத்திலும் இன்னும் தென் அமெரிக்காவிலும் அதன் பண்டைய கலாச்சாரத்தை ஒழித்துகட்டிய கிறிஸ்தவமும் இந்தியாவினையும் அப்படி ஆக்க வட்டமிட்டன‌

ஆனால் இந்துக்களின் எதிர்ப்பு அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது, இந்துக்கள் தங்கள் அடையாளத்தை இழக்கவோ அழியவிடவோ கொஞ்சமும் தயாராக இல்லை போராடினார்கள்

அக்பர் ஜலாலுதீன் இதனால் கவனமாக ஆட்சியினை செய்தான் அவனுக்கு பின் ஹஜாங்கீரும் ஷாஜகானும் அதையே செய்தார்கள், ஷாஜகானின் மூத்தமகன் தாரா ஷிக்கோ கூட அக்பர் ஜலாலுதீன் வழியில்தான் இருந்தான்

ஆனால் ஒரு வசம்த்துக்கு கேடு விளையும் பொழுது புத்திகெட்ட மூர்க்கமான ஒருவன் வருவான் அல்லவா? அவனிடம் அதிகாரமும் செல்வாக்கும் குவியும் அல்லவா?

அப்படி ஒருவன் வந்தான் அவன் அவுரங்கசீப்

காலம் மெல்ல 1600களை தாண்டி 1650களுக்கு வந்தது, மொகலாயர் அரசு உலகின் நம்பர் 1 இடத்தை அடைந்தது, அவர்களுக்கு அடுத்து துருக்கி சுல்தானியம் மிக பலமாக இருந்தது ஐரோப்பா அவர்களிடம் நடுங்கியது

நெப்போலியனே துருக்கிசுல்தான்களுடன் நேருக்கு நேர் மோத அஞ்சினான், ஒரு போரையும் அவன் ஆட்டோமன் துருக்கியரிடம் நடத்தவில்லை அவர்கள் பலம் அப்படி

அந்த துருக்கி அரசும் மொகலாய அரசும் தொட்டுகொள்ளும் தூரத்தில் இருந்தன, மொகலாய அரசுக்கு சோதனை என்றால் துருக்கி படைகள் வரும் அளவுதான் தொலைவு இருந்தது

இடையில் பாரசீக அரசு இருந்தது அவர்கள் ஷியாக்கள் என்பதால் வழமையான உரசல் இருந்தது

அதாவது மொகலாயர் அவ்வளவு வலுவாக இருந்தார்கள் அதைவிட முக்கியம் ஆட்கள் எங்கிருந்தோ வந்து வந்து குவிவார்கள்

இந்நிலையில்தான் காலம் ஒரு ஆச்சரியமான திருப்பத்தை அல்லது ஏற்பாட்டை செய்தது, பாபர் வரும்பொழுதே அந்த ஞானி உருவாகி தீர்க்கமான காரியத்தை செய்தார்

இந்துமதமும் இந்துஸ்தானமும் நிலைக்க வேண்டுமானால் இந்துமதம் புதிய பிரிவினை உருவாக்க வேண்டும் அது இந்துமதத்துக்கு துணையாக ஆனால் தனியாக வலுக்க வேண்டும், அப்பொழுதுதான் ஆப்கானியரையும் குழப்பமுடியும் பல வகையான அனுகூலங்களை பெறமுடியும்

மிக அழகாக நாங்கள் சீக்கியர்கள் என தனிமதம் தொடங்கினார், முழுக்க முழுக்க மண்ணையும் அதன் கலாச்சாரத்தையும் காக்கும் அமைப்பாக அது வளர்ந்தது

மிக சரியாக ஆப்கானியரின் இந்தியாவில் கால்வைக்கும் இடத்தில் அது விதைகொண்டது

மொகலாயம் பெருக பெருக அதுவும் வளர்ந்தது, அது ஒருபக்கம் வளரும் பொழுதுதான் 1660களில் தெற்கே வீரசிவாஜியும் எழுந்தான்

உண்மையில் சிவாஜி பெரும் ஆச்சரியம்

இந்துக்கள் விடுதலை இந்துஸ்தான் விடுதலை என்ற ஒன்றை தவிர அவன் ஏதும் யோசிக்கவே இல்லை, மிக சாதுர்யமாக வீரமாக அவன் மெல்ல மெல்ல வளர்ந்து பிஜப்பூர் சுல்தானியத்தை அடக்கினான், அதன் பலமிக்க தளபதியான அப்சல்கான் வரை கிழித்து போட்டான்

சிவாஜிதான் போர்ச்சுகீசியரை அடக்கினான், அவர்களின் மதமாற்ற கொடுமைக்கு அப்பொழுது முற்றுபுள்ளி வைத்து அவர்களை முழங்காலில் நிறுத்தினான்

கப்பல்படைகள் கட்டி முதன் முதலில் ஐரோப்பியரை ஒடுக்கி வைத்தவனும் அந்த சிவாஜியே

சிவாஜி இங்கு எழ எழ அப்பக்கம் மொகலாயர் அரசனாக அவுரங்கசீப் முடிசூடினான், அவன் முழு இஸ்லாமிய சுல்தானாகவே இருந்தான்

அவன் அக்பர் பாபர் கருத்தில் இருந்து முழுக்க மாறினான், இந்தியா என்பது இஸ்லாமிய தேசமாகும்
ஆப்கனின் தொடர்ச்சியாகும் அதை தன்னால் செய்யமுடியும் என நம்பினான்

இதற்கு அவனுக்கு இரு தடைகள் இருந்தன, முதலாவது சீக்கிய இனம் இரண்டாவது வீரசிவாஜி

சீக்கியருக்கு அன்று அரசு பெரிதாக இல்லை, சொல்லிகொள்ளும் அரசர்களும் படைகளும் இல்லை ஆனால் மொகலாயருக்கு கட்டுபட்டு மதம் மாற மறுத்தார்கள் மொகலாயரை எதிர்த்தார்கள்

அவர்களை கூட ஓரளவு கட்டுபடுத்திய அவுரங்கசீப்பால் தெற்கே நுழையமுடியவில்லை காரணம் சிவாஜி எனும் இந்துவீரனின் சாகசம் அப்படி

எத்தனையோ தந்திரங்களை செய்து, ஏன் ஆக்ராவில் தன் காலடியில் அவனை சிறைவைத்தும் கூட அனாசயமாக தப்பி சென்ற சிவாஜி ஒரு இந்து மன்னனாக தன்னை முடிசூட்டி கொண்டான்

அப்பொழுதுதான் விபரீத முடிவெடுத்தான் அவுரங்கசீப்

இந்தியா இந்துநாடாக நீடிக்க ஒரே காரணம் இந்து ஸ்தலங்களும் காசி போன்ற நகரங்களும் ஆலயங்களும் இருப்பதுதான் அதையெல்லாம் அகற்றிவிட்டு அடையாளம் தெரியாமல் ஆக்கிவிட்டால் வருங்காலத்தில் இந்துமதமே இல்லாமல் போகும் என நம்பினான்

பெரும் அக்கிரமங்களை அவன் செய்ய ஆரம்பித்தபொழுதுதான் தீரா போர்களை தொடங்கினான் சிவாஜி

அந்த 16ம் நூற்றாண்டில்தான் கிழக்கிந்திய கம்பெனிகள் இந்தியாவுக்குள் வியாபாரம் செய்ய வந்தன‌

கொலம்பஸ் சென்ற இந்தியா மேற்கிந்தியா என்பதால் உண்மை இந்தியாவான கிழக்கிந்தியாவுக்கான கம்பெனியினை கிழக்கிந்திய கம்பெனி என்றாக்கினார்கள்

இப்படி டச்ச்சு கிழக்கிந்திய கம்பெனி, பிரான்ஸ் கிழக்கிந்திய கம்பெனி, என பல கம்பெனிகள் உதித்தன‌

இந்தியாவில் வடக்கே சூரத் அவர்களின் முக்கிய சந்தையாக இருந்தது எனினும் அங்கு மொகலாயர் கட்டுபாடு என்பதால் அங்கே அவர்களால் கால் ஊன்ற முடியவில்லை

போர்ச்சுகீசியர் கோவா பக்கம் வலுவாக இருந்தார்கள், மலையாள கரையும் வாஸ்கோடகாமா வந்ததால் எச்சரிக்கையாய் இருந்தது

இதனால் இந்த ஐரொப்பிய அபலைகள் அங்கெல்லாம் காலூன்ற முடியவில்லை

இதனால் இந்த அனாதை கூட்டம் நாயக்க இந்து மன்னர்களின் தமிழகத்திற்கு வந்தது, வடக்கே இந்துக்களுக்கும் மொகலாயருக்கும் நடந்த தீரா யுத்தம் தெற்கே இல்லை

இதனால் தென்னக கடற்கரைகளில் ஐரோப்பியர் அமைதியாக ஒதுங்கினார்கள், சென்னை போன்ற இடங்களில் கோட்டை கட்டினார்கள்

கடலூர், புதுச்சேரி, தரங்கம்பாடி, என வரிசையாக அவர்கள் கால்வைத்து பாகம் பிரித்தார்கள், 16ம் நூற்றாண்டிலே கடற்கரைகளில் மதமாற்றம் தொடங்கிற்று, நாயக்க மன்னர்களும் அதை பெரிதும் தடுக்கவில்லை

காரணம் பாண்டியருக்கு பின் முத்துகுளித்தல், சங்கு எடுத்தல், கடல் கொள்ளையினை அடக்குதல், கடல் பயண பாதுகாப்பெல்லாம் நாயக்கர்க்கு தெரியவில்லை இதனால் ஐரொப்பியர் உதவி அவர்களுக்கு தேவைபட்டது

விளைவு தமிழகம் வெகுவாக மதமாற்றமும் இன்னும் பலவும் நிகழும் இடமாயிற்று, இன்றளவும் கிறிஸ்தவ கோஷ்டிகள் வலுத்து நிற்க இதுதான் காரணம்

வடக்கே அவர்கள் செல்லமுடியாமல் இருக்க மொகலாயர்களுக்கு எதிரான குழப்பமான போர்காலம் முக்கியம்

இதனால் தமிழகம் மற்றும் கிழக்கு கடற்கரை வங்கம் என ஐரோப்பிய கோஷ்டி சுற்றிற்று

ஆனால் எந்நிலையிலும் இந்தியாவில் ஆள்வோம் என ஐரோப்பியர் கனவு கூட காணவில்லை காரணம் அந்த 16ம் நூற்றாண்டின் மத்திய காலங்கள் அப்படி அணலடித்தன‌

மொகலாயரின் அவுரங்கசீப் இந்தியா முழுக்க தன் ஒரே ஆட்சியில் கொண்டுவந்து அதை இஸ்லாமிய நாடாக மாற்றுவேன் என தீர்மானமாக போரை நடத்தினான்

சிவாஜி பதிலுக்கு பெரும் தாக்குதலை தொடங்கினான், அவுரன்கசீப்பின் முழு இந்தியா எனும் கனவை அவன் சிதறடித்து கொண்டிருந்தான்

ஒரு பக்கம் சீக்கிய தாக்குதல் தொடங்கிற்று

ஆனாலும் மிகபெரிய வல்லரசான மொகலாயம் கடும் போரை நடத்திற்று, எனினும் தென்னகம் முழுக்க சிவாஜி எழும்பினான்

அவன் அரசு புனேயில் இருந்து தமிழகம் செஞ்சி தஞ்சாவூரை தாண்டி மதுரை வரை வந்தது

இனி மொகலாயரை வீரசிவாஜி விரட்டுவான் எனும் நிலைக்கு அருகில்வந்தான் சிவாஜி தென்னகம் முழுக்க கைபற்றிய அவன் காசி நோக்கி செல்ல திட்டமிட்டபொழுதுதான் 50 வயதில் காலமானான்

அவன் சாகும் பொழுது இந்தியாவின் 3ல் இருபங்கு நிலம் அவனிடம் இருந்தது, அவன் காலமான பொழுது அவுரங்கசீப்புக்கு வயது 65

தன் இரண்டாம் இன்னிங்க்ஸை அவுரங்கசீப் தொடங்கினான், வழக்கம் போல் ஐரோப்பியர்கள் அவனுக்கு ஆயுதமும் கருவிகளும் விற்று சம்பாதித்தார்கள்

இரண்டாம் முறையாக இந்தியா முழுக்க எனக்கு அவன் எழும்பியபொழுது ஒரு பெண் அவனுக்கு சவால்விட்டாள் அவள் பெயர் தாராபாய்

சிவாஜியின் தம்பி ராஜாராமின் மனைவி அந்த தாரபாய், செஞ்சி கோட்டையில் இருந்து அவள் கொடுத்த எழுச்சித்தான் இந்திய சுதந்திரத்தின் அடுத்த வரலாற்றை எழுதியது

அவள் மட்டும் இல்லையென்றால் அவுரங்க்சீப்பின் கனவு நிறைவேறியிருக்கும், சிவாஜி வெறும் கலககாரனாக முடிந்திருப்பான்

தாராபாய் எனும் இந்துபெண்புலி பாய்ந்த பாய்சல்தான் இந்துராஜ்ஜிய சுதந்திர போரின் அடுத்த அத்தியாயத்தை எழுதியது

(தொடரும்..)