இந்திய சுதந்திர வரலாறு : 08
சிவாஜிக்கு பின்னரான இந்துவிடுதலை போரை இரு பெண்கள் முன்னெடுத்து சென்றார்கள், வரலாற்றில் ஒவ்வொரு இந்தியனும் இந்துவும் கையெடுத்து வணங்கவேண்டிய மாதரசிகள் அவர்கள்
புனே தொடங்கி தமிழகம் மதுரை வரை பெரும் இந்து ராஜ்ஜியத்தை உருவாக்கிவிட்டு 50 வயதில் காலமானான் வீரசிவாஜி, அவனுக்கு பின் அவன் மகன் சாம்பாஜியிடம் அவ்வளவு சாமார்த்தியமில்லை சிவாஜியிடமில்லா கேளிக்கையும் கொண்டாட்டமும் அவனிடம் குடிகொண்டன
அந்த சாம்பாஜியினை எளிதாக பிடித்து கொடூரமாக கொன்று அவன் மகன் சாகுவினை கைதியாக்கினான் அவுரங்கசீப், 1690களில் சிவாஜியின் இந்துராஜ்ஜியத்தை ஏறகுறைய தகர்த்து போட்டிருந்தான் அவுரங்க்சீப் மராட்டியம், ஆந்திரா, அப்படியே தென் பக்கம் சுபிர் அலிகான் என்பவனை கர்நாடக பிரதேச நவாபாக அவன் ஆற்காட்டில் குடியேற்றியது வரை அவன் கைக்கு தென்னகம் சென்றது
தன் பூரண இந்துஸ்தான் எனும் இலக்கை நோக்கி அவன் முன்னேறிய நேரம்தான் சிவாஜியின் இளையமகன் ராஜாராமின் மனைவி தாரபாய் பெரும் யுத்தம் தொடுத்து இழந்ததை மீட்டாள், சிவாஜியி மராட்டிய பக்கம் இருந்து குஜராத் வரை இந்து ராஜ்ஜியத்தை மறுபடியும் மீட்டெடுத்தாள்
உண்மையில் அவள் செய்தது மிகபெரிய சாதனை, இரு குழந்தைகளின் விதவை தாய் எனும் அடையாளத்துடன் அவளை ஏளனமாக நோக்கிவிட்டு சிவாஜியின் பேரனும் குழந்தை முதல் மொகலாயரின் கைபாவையாக வளர்க்கபட்டவனுமான சாகுவினை சிவாஜியின்வாரிசாக களமிறக்கினான் அவுரங்கசீப்
அதாவது தன் பொம்மையினை இறக்கினான்
அந்த பொம்மையினை தூக்கி எறிந்து சிவாஜியின் பெரும் கனவான இந்து ராஜ்ஜியத்தை மறுபடியும் நிறுவினாள் தாரபாய், அவள் ஜீஜாபாயின் இன்னொரு பிறப்பாகவே போற்றபடுகின்றாள்
வரலாற்றில் ஜான்சி ராணி, வேலுநாச்சியார் என வீரபெண்மணிகள் காட்டபட்டாலும் வலுவான முகலாய படைகளை எதிர்த்து தானே குதிரைமேல் ஏறி வழிநடத்தி இரவும் பகலும் போராடி மொகலாயரை விரட்டிய அவளுக்கு வரலாற்றில் தனி இடம் உண்டு
அவளின் எழுச்சி அவுரங்கசீப் சரித்துபோட்ட இந்து ராஜ்ஜியத்துக்கு தனி பலம் கொடுத்தது, அவளை தொடர்ந்து எழும்பினாள் ராணி அகல்யா பாய்
தாராபாய் 1720களில் விட்டுசென்ற இந்து ராஜ்ஜியம் பின் அகல்யாபாயால் முன்னெடுக்கபட்டது, அவளே காசிவரை மீட்ட முதல் இந்துராணியாக அறியபடுகின்றாள், அவுரங்கசீப்பால் நாசமாக்கபட்ட காசியில் பல இந்து அடையாளங்களை அவளேதான் மீட்டெடுத்தாள்
அகல்யாபாய் வலுவான இந்து ராணியாக மிகபெரிய போரை மொகலாயருக்கு எதிராக நடத்தினாள்
சிவாஜியும் அவனை தொடர்ந்து தாராபாயும் அகல்யாபாயும் கொடுத்த நெருக்கடியில் தன் கனவு நிறைவேறாமலே செத்தான் அவுரங்கசீப், அவனுக்கு பின் மொகலாயம் சக்தி இழந்தது
இந்த சூழலில்தான் டெல்லியினை பெரும் சூறைகாற்றாக தாக்கினான் ஈரானிய மன்னன் நாதிர் ஷா, எப்பொழுதெல்லாம் மொகலாயம் தடுமாறுமோ அப்பொழுதெல்லாம் பாரசீக மன்னன் டெல்லிமேல் பாய்வது வழமை
இதனாலே வீரசிவாஜியினை கொஞ்சம் விட்டுபிடித்தான் அவுரங்கசீப், முழு போரை அவன் தொடங்கினால் அங்கே பெர்ஷிய ஷா வருவான் என்பதால் அவனுக்கு தயக்கம் இருந்தது
அவனுக்கு பின் இந்துக்களின் பெரும் போர் மொகலாயத்தை சரிக்க எளிதாக வந்து அடித்தான் நாதிர்ஷா, 1739களிலே அவன் டெல்லி ஆக்ராவினை சூறையாடி மயிலாசனம், கோஹினூர் வைரத்தையெல்லாம் கவர்ந்து சென்றான்
அந்த நாதிர்ஷா இந்தியாவினை ஆளவிரும்பவில்லை காரணம் இந்துக்களின் எழுச்சியும் போரும் அவனுக்கு அச்சத்தை கொடுத்தன, அங்கு ஆளமுடியாது என நம்பிய அவன் பெரும் கொள்ளையுடன் பாரசீகம் திரும்பினான்
அவனின் படையெடுப்பில் மொகலாயம் சரிந்தது, இந்து எழுச்சி அதனை இன்னும் சரித்து போட்டது எனினும் மொகலாயர் முழுவதும் அழியவில்லை பலம் பெருமளவு சரிந்திருந்தது
ஒரு பெரும் அரசு சரியும் பொழுது அதன் கட்டுபாட்டில் இருக்கும் சிற்றரசுகள் தங்களை சுதந்திரமாக அறிவிப்பதும், சில அரசுகள் எழுவதும் இயல்பு
அப்படி மொகலாய கட்டுபாட்டில் இருந்த பல அரசுகள் அல்லது அவர்கள் தங்கள் ஆளுநராகவோ அரசனாகவோ நியமிக்கபட்டவர்கள் தனி சுல்தான்களாக ஆங்காங்கே ஆட்சி அமைத்து ஆள தொடங்கினார்கள்
அப்படி ஆற்காடு நவாப் தமிழக பக்கம் தன்னை தனி சுல்தானாக கருதி கொண்டிருந்தான்
நாடு முழுக்க ஒரு குழப்பமும் போர் மேகமும் கவிழ்ந்திருந்தது, ஒரு பக்கம் மொகலாயர் துருக்கி சுல்தானின் படைகளை பெற்று இழந்ததை மீட்பார்கள் எனும் அச்சம் எல்லோருக்கும் இருந்தது
இந்துக்கள் தரப்பில் மொகலாயரை முழுக்க சரித்துவிட்டு அவர்களுக்கு கட்டுபட்ட சிற்றரசுகளை கைபற்றி முழு இந்துராஜ்ஜியம் அமைக்கும் பெரும் திட்டம் இருந்தது
அப்பக்கம் சீக்க்கிய கூட்டம் டெல்லியினையும் ஆப்கானையும் துண்டாடி ஒரு ராஜ்ஜியம் அமைத்தால் மொகலாயரால் ஆள்திரட்ட முடியாமல் போகும் பொறியில்சிக்குவார்கள் என எண்ணி மெல்ல மெல்ல அந்த காரியத்தை செய்தது
ஆம், சீக்கிய அரசுகள் மட்டும் எழாமல் இருந்திருந்தால் இந்நேரம் பாகிஸ்தான் எனும் தேசம் வங்கம் வரை நீடித்திருக்கும், வட இந்தியா எனும் பகுதியே இன்று இருந்திராது
சீக்கியர்கள் மெல்ல மெல்ல எழுந்து ஆப்கனுக்கும் டெல்லிக்கும் இடையே அரண்போல் நின்றதில் தாய்பூமியான
ஆப்கனில் இருந்து மொகலாயம் துண்டிக்கபட்டு அனாதை ஆயிற்று அவர்களுக்கு யாரும் உதவிக்கு வரமுடியாதபடி முடங்கினார்கள்
இப்படி மொகலாயம் பல வகைகளில் சிக்கி அடங்கி கிடக்க, அவர்களை இன்னும் பலவீனபடுத்த இந்துக்கள் அடிக்கடி போர்களை நடத்திகொண்டிருந்தபொழுதுதான் யாருமே எதிர்பாரா காட்சி தமிழக பக்கம் நடந்தது
இந்தியாவின் தென்கோடியில் இருக்கும் தமிழகத்தின் பகுதிகளை ஆற்காடு நவாப் பிரதிநிதித்து கொண்டிருந்தான் மொகலாயம் சரிந்ததால் அவன் தனி ராஜாபோல் ஆட்சி செலுத்தலானான்
மொகலாயருக்கு நவாப் வரிகட்டவில்லை என்றால் நாம் ஏன் நவாபுக்கு வரிகட்ட வேண்டும் என இந்து மன்னர்களெல்லாம் முணுமுணுத்தார்கள் சிலர் வரியினை குறைத்தார்கள் சிலர் கட்டவே இல்லை
அவர்களை என்ன செய்வது என நவாபுக்கும் தெரியவில்லை, தஞ்சாவூரிலும் மராட்டியர் இருந்ததாலும் மொகலாயர் சரிந்து கிடந்ததாலும் கிடைத்த வருவாயில் ராஜியம் நடத்தி கொண்டிருந்தான்
1740ககளில் அன்வர்தீன் கான் எனும் நவாப் இருந்தபொழுது அவன் மருமகன் சாந்தா சாகிப்புக்கும் மகன் முகமது அலிக்கும் மோதியது
ஒரு சிறிய சுல்தானியத்தின் சண்டையாக அது பார்க்கபட்டது
இந்த முரண்பாடு அவர்கள் குடும்ப சண்டையாக இருந்தபொழுது தமிழகத்தில் இரு அந்நிய வியாபார கம்பெனிகள் மோதிகொண்டன
அது பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியும், பாண்டிச்சேரியில் இருந்த பிரெஞ்ச் கிழக்கிந்திய கம்பெனியுமாகும்
இந்தியா முழுக்க போரும் குழப்பமும் அசைக்கமுடியாத மொகலாயத்துக்கு இந்துக்கள் மரண அடி கொடுத்து முடக்கி இனி இந்தியாவில் இந்துராஜ்ஜியம் என்ற நிலை வந்தபொழுதுதான் இந்தியாவின் தென் மூலையில் இரு கம்பெனிகள் தங்களுக்குள் அடித்து கொண்டன
அப்பொழுது பாண்டிச்சேரியில் பிரான்ஸ் கம்பெனியினருக்கு ஒரு ஆளுநர் இருந்தான் அவன் பெயர் டூப்ளே, அவன் சண்டையெல்லாம் இடமாட்டான் மாறாக நிர்வாகம் செய்யும் ஆளுநர்
அவனுக்கு இந்தியாவின் செல்வம் எப்பொழுதும் கண்களை உறுத்தியது, பெரும் பணமும் செல்வமும் பெரும் அரசுகளும் கொண்ட வட இந்திய பக்கம் செல்லமுடியாத பிரான்ஸ் பிரிட்டிஷ் கோஷ்டி தென் தமிழக கடல் பக்கம் பெரும் எதிர்ப்பு இல்லாததால் சுற்றி சுற்றி வந்தது
அதுவும் மராட்டியர் தமிழகம் வரை ஆண்ட காலங்களிலும் தஞ்சாவூரில் சரபோஜிகள் வலுவாக இருந்ததாலும் மிக மிக பணிவாகத்தான் வியாபாரம் மட்டும் பார்த்தது
அன்று பிரிட்டன், பிரான்ஸ், போர்ச்சுக்கலெலாம் தரித்திர தேசங்கள். ஓரளவு எழும்ப தொடங்கியிருந்த பிரிட்டனும் அமெரிக்காவில் போர்களை நடத்தியது
இந்த கம்பெனிகளெல்லாம் தனியார் கம்பெனிகள், அவர்களுக்கென ஒரு காவல்படையினை வைத்திருந்த தனியார் படைகளே
1740களில் ஐரோப்பாவில் அடிக்கடி நடக்கும் யுத்தம் பிரான்ஸுக்கும் பிரிட்டனுக்கும் வெடித்தது, அந்த விளைவு உலகெல்லாம் பிரான்சும் பிரிட்டனும் மோத வழிசெய்தது
தாங்கள் வலுவானவர்கள் என காட்ட பாண்டிச்சேரியில் இருந்த பிரான்ஸின் கம்பெனி படை சென்னையில் இருந்த செயின்ட் ஜார்ஜ் கோட்டை எனும் பிரிட்டிசாரின் வியாபார கோட்டையினை கைபற்றி அங்கிருந்தோரை கைதிகளாக இழுத்து சென்றது
இரு கம்பெனிகளுக்கும் நடந்த சண்டையினை ஆற்காடு நவாப் குடும்பமும் கவனித்து இவர்களை நம் குடும்ப சண்டைக்கு பயன்படுத்தினால் என்ன? காசு கொடுத்தால் அடிக்க வரபோகின்றார்கள், அதிலும் இந்த வலுவான பிரான்ஸ் அணியினை நாம் பயன்படுத்தினால் என்ன என திட்டமிட்டது
சாந்தாசாஹிப் அந்த திட்டத்தை வகுத்து கொண்டிருந்தபொழுதுதான்
1746ம் ஆண்டு டூப்ளே அனுப்பிய பிரென்ச் படைகள் கமாண்டர் லெபுதனே தலமையில் சென்னை ஜார்ஜ் கோட்டையினை கைபற்றி எல்லோரையும் விலங்கிட்டு அவமானகரமாக இழுத்து சென்றது
அதனில் ஒரு இளம் பிரிட்டிஷ்காரன் இருந்தான், அவனுக்கு வயது ஏறகுறைய 21 அந்நேரம் இருந்திருக்கலாம்
அது இந்தியாவுக்கு பெரும் கடல்வழி என்பதால் பிரிட்டனின் வசதியானாரோ இல்லை நல்ல வாழ்க்கை கொண்டிருந்தோரோ வர அஞ்சிய காலம்
ஏதும் கொடும் தண்டனை என்றால் அந்த கைதிகளை ஆஸ்திரேலியாவுக்கு கப்பல் ஏற்றி அனுப்பிய காலம், அதாவது போனால் திரும்ப வர உத்தரவாதமில்லா காலம்
இதனால் லண்டனில் ஒருமாதிரி சுற்றிகொண்டிருந்த கோஷ்டிகள், வீட்டில் இருந்து விரட்டியடிக்கபட்டோர், உருப்படாதுகள், அடியாட்கள் என பிம்பம் கொண்டவர்கள்தான் இந்தியாவுக்கு பணிக்கு வந்தனர்
அப்படி அவனும் வந்திருந்தான், பல குற்றங்களுக்காக சமூகத்தால் அவமானபடுத்தபட்டு குடும்பத்தால் கைவிடபட்டு சிலமுறை தற்கொலைக்கும் முயன்று தோற்ற அவன் செத்தால் இந்தியாவில் சாவோம் என கிழகிந்திய கம்பெனியில் சேர்ந்து சென்னை கோட்டைக்கு வந்திருந்தான்
அவன் தன்னை ஒரு பிரிட்டிஷ்காரனாக பெருமையாக கருதினான், தன்னை ஒரு பிரான்ஸ் தளபதி விலங்கிட்டு அழைத்து செல்வது அவனுக்கு பெரும் அவமானமாக விளங்கிற்று
பாண்டிச்சேரியில் பிரான்ஸ்படையினர் அவனை நடத்திய கூடுதல் அவமானம் அவனை கொதிக்க வைத்தது
எப்படியாவது தப்பி சென்று இந்திய மக்களின் உதவி பெற்றாவது இந்த பிரான்ஸ் கூட்டத்தை ஓட விரட்டுவேன் என செய்த சபதமே இந்தியாவின் அடுத்த 200 வருடத்தை மாற்றி போட்டது
ஆம், அவனே ராபர்ட் கிளைவ். இந்தியாவின் தலையெழுத்தை மாற்றி ஆங்கில ஆட்சிக்கு அடிகோலிய அந்த ராபர்ட் கிளைவ்
இந்தியா எனும் பெரும் கண்டத்தின் தலைவிதி பாண்டிச்சேரி சிறையில் இருந்த அவனால் மாற்றி எழுதபடும் என அப்பொழுது யாரும் கனவு கூட கண்டிருக்க முடியாது…
(தொடரும்..)