இந்திய பாஸ்போர்ட் நிறத்தை இனி காவிகலர் ஆக்குமாம்…

எப்படி எல்லாம் இத்தேசத்தை காவிமயபடுத்துவது என் தீரா சிந்தனையில் இருக்கும் அரசு இது , “வெற்றிலை போட்டு தெருவெல்லாம், சுவரெல்லாம் துப்புவர்களை கூட, அடடே காவி நிறம் ஆக்குகின்றீர்களே, நீங்கள்தான் தேச பக்தர்கள்” என ஊக்குவிக்கும் எண்ணம் கொண்ட அரசு இது

சும்மா இருக்குமா?

இந்திய பாஸ்போர்ட் நிறத்தை இனி காவிகலர் ஆக்குமாம், கேட்டால் அப்படி அல்ல இது ஆரன்ஞ் நிறம் அவ்வளவுதான். அப்பழம் காவி கலரில் இருந்தால் நாங்கள் என்ன செய்ய? என அமைதியாய் சொல்கின்றார்கள். விஷயம் பெரிதாகின்றது.

இந்த அரசு என்ன திட்டத்தில் இருக்கின்றது என்றால் அது மிக காமெடியானது

பொருளாதார மாற்றம் என்றால், ரூபாய் நோட்டின் நிறத்தை மாற்றிவிட்டு நாங்கள் இந்திய பொருளாதாரத்தை மாற்றிவிட்டோம் என்பார்கள்

இப்பொழுது போலிபாஸ்போர்ட் அல்லது பாதுகாப்பு குறைபாடுள்ள முறைகளை எப்படி களைவீர்கள் என்றால் இதோ நிறத்தை மாற்றிவிட்டோம் என்கின்றார்கள்

மோடி மாறவேண்டும் என சொல்லுங்கள், கலர் புத்தாடை அணிவித்து மோடி மாறிவிட்டார் என்பார்கள்

இன்னும் எதெல்லாம் சுட்டிகாட்ட படுகின்றதோ அதற்கெல்லாம் கலரை மாற்றிவிட்டு இதோ மாற்றம் என்பார்கள்.