இந்திய போராட்டங்களும் வழக்கறிஞர்களும் பிரிக்கமுடியாதவை
இந்திய போராட்டங்களும் வழக்கறிஞர்களும் பிரிக்கமுடியாதவை
சுதந்திர போராட்டத்தில் வ.உ.சி , காந்தி, பட்டேல், ராஜாஜி என வழக்கறிஞர்கள் வரிசை மிக நீண்டது.
சமூக போராட்டத்தில் பன்னீர்செல்வம், அம்பேத்கர் என பெரும் வரிசை உண்டு
சுதந்திரத்திற்கு பின் இந்தியாவின் ஒவ்வொரு போராட்டத்திலும், குறிப்பாக தமிழகத்தில் வழக்கறிஞர்கள் போராட்டம் பெரும் மாற்றங்களை கொடுத்தது
மொழிப்போர், மிசா, ஈழ ஆதரவு காலங்கள் என எல்லா போராட்டங்களிலும் வழக்கறிஞர்களின் போராட்டம் தீரமிக்கவை
அவர்களின் தீரமிக்க போராட்டங்கள்தான் இந்நாட்டில் உரிமைகளை எல்லாம் பெற்று கொடுத்தன, மறுக்க முடியாது.
பெரும் பாரம்பரியம் கொண்ட வழக்கறிஞர் சங்கங்கள் இப்பொழுதெல்லாம் என்ன ஆனதோ தெரியவில்லை, சத்தமே இல்லை
அம்மாதிரி பெரும் வழக்கறிஞர்கள் போராட்ட வரலாறு கொண்ட தமிழகத்தில்தான் இந்த ஜூலி எல்லாம் போராளி என ஊடகத்தால் உருவாக்கபட்டார், காலகொடுமை என்பது நிச்சயம் இதுதான்
ஒரு களத்திலும் அவர்களை காணவே இல்லை, நிச்சயமாக இந்திய வரலாற்றில், தமிழக வரலாற்றில் இது புதிது, ஆச்சரியம்
ஆனால் அதைபற்றி வழக்கறிஞர்கள் கூட பேசவில்லை என்பதுதான் அதனை விட ஆச்சரியம்..
காலங்கள் எப்படி எல்லாம் மாறிகொண்டிருக்கின்றன..