இந்திய வீரர்கள் 1500 பேருக்கான நினைவு தூண்

மே 26ம் தேதி சென்னைக்கு வருகின்றார் பாரத பிரதமர் மோடி

தமிழகத்துக்கு பல்லாயிரம் கோடி நலதிட்டங்களை அறிவிக்க வரும் அந்த பெருமகன், சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடக்கும் விழாவில் அதனை அறிவிப்பார்

இம்முறை இந்த கருப்புகொடி விளையாட்டு, “கோபேக் மோடி” எனும் விளையாட்டெல்லாம் இருக்காது என்பது எல்லோரும் அறிந்தது, தமிழக அரசு இப்பொழுதெல்லாம் எந்த சிக்கலையும் தவிர்க்கவே விரும்புகின்றது என்பது தெரிகின்றது

எம்மை பொறுத்தவரை மோடி வந்து நலதிட்டங்களை அறிவிக்கட்டும், அதை மக்களிடம் தமிழக பாஜக சென்று சேர்க்கட்டும்

இதுவரை தமிழகத்துக்கு செய்த திட்டங்களை மோடி சொல்லட்டும் அதுவும் தமிழகமெல்லாம் பரவட்டும், அதற்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டியிருந்தால் அங்கே அது கிழிபடட்டும்

மோடி செய்யவேண்டிய முதல் காரியம் ஒன்று உண்டு, அது மே மாத துயரங்கள்

மேமாதம் ராஜிவ் கொலை முதல் முள்ளிவாய்க்கால் கொலைகள் வரை அரங்கேறிய மாதம், மோடி திருப்பெரும்புதூர் சென்று ராஜிவ் பலியான இடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு விரைவில் சென்னை மெரினாவில் இலங்கையில் அமைதிபடையாக இறந்த வீரர்களுக்கு அஞ்சலி தூண் நிறுவபடும் என அறிவித்தால் அது ஏகபட்ட விஷயங்களுக்கு பதிலாக அமையும்

யாரும் ஒருவார்த்தை பேசிவிட முடியாது

சென்னை மெரினாவில் அவசிய தேவை திராவிட கல்லறைகள் அல்ல, இலங்கையில் அமைதி ஏற்படுத்த சென்று இந்திய காங்கிரஸ் அரசு தமிழக திமுக அரசு உள்ளிட்ட அரசுகளின் குழப்பத்தால் செத்த , இன்னும் பலவகை குழப்பங்களால் உயிரிழந்த இந்திய வீரர்கள் 1500 பேருக்கான நினைவு தூண்

அதனை மோடி நிறுவ உத்தரவிட்டால் அதை தடுக்க யாருக்கும் சக்தி இல்லை, ஏன் சென்னை கோட்டையே ராணுவத்துக்கு சொந்தமானது எனும் வகையில் தமிழக அரசு கூட இவ்விவகாரத்தில் தடைகோர முடியாது

மோடி இதனை அறிவிப்பார் என எதிர்பார்ப்போம்

இலங்கையில் செத்த இந்த வீரர்களுக்கு இலங்கை கொழும்புவில் நினைவாலயம் உண்டு ஆனால் சொந்த இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் நினைவாலயம் இல்லை என்பது பெரும் வேதனை, மோடி அந்த குறையினை நீக்குவார் தமிழக ஆளுநரும் தளபதி அண்ணாமலையாரும் அதன் அவசியத்தை மோடிக்கு எடுத்துரைப்பார்கள் என நம்புவோம்

நிச்சயம் இதெல்லாம் காங்கிரஸ் என்றோ செய்திருக்கவேண்டிய காரியம் ஆனால் செய்யவில்லை, பாஜவும் செய்யாவிட்டால் செய்ய யாருமில்லை