இந்திய வெளியுறவுக் கொள்கை வலுவானதாக மாறியிருக்கிறது: சீனா
இலங்கை துறைமுகத்தை சீன ராணுவப் பணிக்கு பயன்படுத்தக் கூடாது: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர்
இந்திய வெளியுறவுக் கொள்கை வலுவானதாக மாறியிருக்கிறது: சீனா
இரண்டும் தனிதனி செய்திகள், ஆனால் நடந்திருக்கும் விஷயத்தின்படி சீனா சொல்லியிருப்பது விஷயம் அல்ல விஷமம்
அதாகபட்டது இலங்கையில் சீனா வலுவாக காலூன்றிவிட்டது, அதனை முடக்கும் விஷயத்தில் இந்தியாவிற்கு வெற்றி இல்லை. முன்பு அமெரிக்க கால்பதிப்பினை இந்திராவும் ராஜிவும் விரட்டியது போல பாஜகவினால் முடியவில்லை
விளைவு என்னாயிற்று? அன்று இரண்டாம் திட்டமாக ராஜிவினால் தொடங்கபட்ட ஐ.என்.எஸ் கட்டபொம்மன் தளத்தினை பாஜக அரசு பலபடுத்துகின்றது, நேற்று கூட நிர்மலா சீத்தாராமன் அதனை பார்வையிட்டார்
இதனை எல்லாம் கூர்ந்து நோக்கிய சீனா, இலங்கையில் இந்திய பிடி நழுவுவதையும், நேபாளம் நோக்கி சுஷ்மா சுவராஜ் ஓடுவதையும் கண்டு இந்திய வெளியுறவு கொள்கையினை கிண்டலாக சொல்கின்றது
ஆனால் பாருங்கள், சீனாவே ஒப்புகொண்ட இரும்பு ஆட்சி மோடியுடையது என பலர் கிளம்புவார்கள், அவர்கள் அப்படித்தான்.