இந்திய வெளியுறவு துறை இலங்கையில் தோற்றுவிட்டது : திருநாவுக்கரசர்
இந்திய வெளியுறவு துறை இலங்கையில் தோற்றுவிட்டது : திருநாவுக்கரசர்
அதாகபட்டது இலங்கை அதன் பாராளுமன்றத்தில் அதன் நாட்டு எல்லைக்குள் மீன்பிடிக்க வரும் அந்நிய நாட்டினருக்கு எதிராக கடும் சட்டங்களை இயற்றியுள்ளது
இதனை மோடி அரசு ஓடி சென்று தடுக்கவில்லையாம்
ஒரு நாடு இயற்றும் சட்டங்களை இன்னொரு நாடு எப்படி தடுக்க முடியும்? இந்த அடிப்படை அறிவு கூட இல்லாத இவர்தான் தமிழக காங்கிரசின் தலைவராம்
என்னவோ காங்கிரஸ் அரசில் இலங்கையினை காலுக்குள் வைத்திருந்தது போலவும், இன்று மோடி அதனை விட்டுவிட்டது போலவும் பேசிகொண்டிருக்கின்றார்
ராஜிவ் காலத்திலே அந்த புலிகளையே வழிக்கு கொண்டுவரமுடியாமல், அழிக்கவும் முடியாமல் தோற்றுபோனதுதான் இந்திய வெளியுறவு துறை
பாஜகவிற்கு தமிழிசை போல காங்கிரசிற்கு இந்த திருநாவுக்கரசர் போல
இவர் முன்னாள் பாஜக என்பது குறிப்படதக்கது, ஒருவேளை காங்கிரசின் தவறுகளை சுட்டிகாட்டும் வாய்பினை உருவாக்க ஸ்லீப்பர் செல்லாக இந்து வந்திருக்கின்றாரோ என்னமோ?
கொசுறு
இந்த ஜூலிக்கே 4 பேர் ரசிகர்கள் என திரளும் பொழுது, குஷ்பூவிற்காக பெரும் படை திரள்வதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?
அது ஆச்சரியமாக இருக்கவே முடியாது.
நேற்று முளைத்த காளானினை விட நிரந்தரமாக மின்னும் வைரம் எவ்வளவு சிறப்பு வாய்ந்தது?
ஆக நாம் மிக சரியாகத்தான் போய்கொண்டிருக்கின்றோம் Venkatesh Mothilal , Sadhu Sadhath , Surin Vijay, Senthil Vasan M,