இந்திராவினை இந்நாடு ஒரு காலமும் மறக்க முடியாது

இந்திராவினை இந்நாடு ஒரு காலமும் மறக்க முடியாது. இந்நாட்டிற்காக அவர் எடுத்த சவால்களும் அதனால் அவர் தன் உயிரினை கூட கொடுத்ததும் இந்திய வரலாற்றில் நிலைத்திருக்கும் கல்வெட்டுகள்

ஆனால் ஒரே ஒரு இடத்தில் அவரை சற்று வருத்தமாக நோக்க வேண்டி இருக்கின்றது.

திமுகவினை கட்டுபடுத்துகின்றேன் என அந்த ராமசந்திரனை வளர்த்துவிட்டது என்றுமே ஏற்றுகொள்ளமுடியாதது.

ஒன்றும் அந்த ராமசந்திரனை காங்கிரசில் பிடித்து போட்டிருக்க வேண்டும் அல்லது வருமானவரி சோதனையில் உள்ளே வைத்து அப்படியே வெளிதள்ளியிருக்க வேண்டும்

ஆனால் அவரை திமுகவிற்கு எதிராக விளையாடவிட்டு வேடிக்கை பார்த்தார் இந்திரா

அதன் விளைவு அந்த தொப்பி சனியன் தான் ஒரு தீரா தமிழக தொல்லையாகி தனக்கு பின் பெரும் தலைவலி ஒன்றையும் உருவாக்கிவிட்டு சென்றது

அந்த தலைவலி என்னென்ன வம்புகளை எல்லாம் வளர்த்துவிட்டிருக்கின்றது என்பதை சமீபத்திய ரெய்டுகள் சொல்கின்றன‌

எப்படி அவர் வீட்டை சோதனை செய்யலாம் என்றெல்லாம் புத்தி பேதலித்து குதிக்கின்றன அந்த கும்பல்கள்?

இநாட்டில் ஒரு மாநிலத்தின் முன்னாள் முதல்வரின் வீட்டை சோதனையிட யாரிடம் கேட்கவேண்டும்? அதுவும் வருமான வரிதுறை யாரை கேட்டுவிட்டு வரவேண்டும்?

அது அவர்கள் சாஷ்டங்கமாக விழுந்து வணங்கி அங்கபிரத்ட்சனம் செய்த இடம் என்பதால் அவர்களுக்கு கோவிலாம், உருப்படுமா?

எங்கள் கோவில் என்ற்கின்றார்கள், சிலர் தீகுளிக்கின்றார்களாம், எல்லா கட்சியும் குதிக்கின்றது

ஆக அங்கு ஏதோ விவகாரம் இருந்திருக்க வேண்டும், இல்லாவிட்டால் இந்த அழுகை அழமாட்டார்கள்

கம்பளி கத்தரிக்கும் போது ஆடு அழுவதில்லை, ஆனால் கழுத்தில் கத்தி வைத்தால் கதறும் அல்லவா?

முன்பு நடந்த ரைடுகள் கம்பளி வெட்டிய ரகம், இப்பொழுது நடப்பது கழுத்தில் கத்தி வைத்த ரகம் போல‌

இந்த கூத்துக்களையும், அவர்கள் செய்யும் அழிச்சாட்டியங்களையும் காண சகிக்கவில்லை. முதல்வர் பழனிச்சாமி கூட தான் உழைத்து முதல்வர் ஆனதாக சொல்லிகொள்கின்றார்

எப்படி எல்லாம் உழைத்தார் என்பது யாருக்கு தெரியாது?

இந்த கொடுமைகளை எல்லாம் தொடங்கி வைத்தவர் அந்த இந்திரா என்பதை கொஞ்சம் வருத்தத்துடன் கடந்து செல்ல வேண்டி இருக்கின்றது

எந்த காங்கிரஸை வளர்க்க‌ திமுகவினை அழிக்க அதிமுகவினை தொடங்க வைத்தாரோ இந்திரா, அந்த காங்கிரஸினை தமிழகத்தில் திமுகதான் கைபிடித்து வருகின்றது

அதுதான் கலைஞர்

சொர்க்கத்தில் இருக்கும் இந்திராவின் ஆவி இரு காரியங்களுக்கு அழும், ஒன்று பிரபாகரனை அன்று இலங்கையிடம் ஒப்படைக்காமல் காத்து மாறாக வளர்த்துவிட்ட பாவத்திற்காகவும்

இரண்டாவது, எதிரி என நினைத்த கலைஞர் தன் கட்சிக்கு உறுதுணையாக இருப்பதையும் நினைத்து, இந்த மனிதரையா அழிக்கபார்த்தோம் என்ற வலியிலும் அழும்