இந்திரா போட்டு சென்ற பாதையில்தான் மோடி அரசும் பழனிச்சாமி அரசை பாதுகாக்கின்றது
நேரு என்பவர் மிக மிக பெருந்தன்மையான மனிதர், அவரின் பரோபகார பெருந்தன்மை கட்சிக்கு சரிவரலாம் ஆட்சிக்கு சரிவராதுஇந்தியாவில் இஷ்டத்துக்கு கட்சி தொடங்குவதை தடுக்குமாறு சட்டமியற்ற சுதந்திர இந்தியாவில் சொன்னார்கள், நேரு இது ஜனநாயக நாடு என மறுத்தார். அந்த ஓவர் ஜனநாயகமே இன்று அங்கிள் சைமனார் போன்றவர்களெல்லாம் கட்சி தொடங்க காரணமாயிற்றுஇந்திரா காலத்தில் திமுக பெரும் தலைவலியாயிற்று, காமராஜரும் சரிக்கபட்டார். இனி திமுகவினை வீழ்த்த இன்னொரு திமுக வந்தால்தான் உண்டு என்ற அளவில் நிலமை இருந்ததுதிமுகவின் நகர்வுகள் பிரிவினையினையினை விதைப்பது போலவும் தமிழகத்தில் தேசியத்தை குழிதோண்டி புதைப்பது போலவும் இருந்தனதகப்பன் செய்த தவறை வேறுவிதமாக சரிசெய்தவர் இந்திரா, எதிரியினை ஒழிக்கமுடியாவிட்டால் அவனுக்கு சரியான எதிரியினை உருவாக்கி அவனை குழப்பிவிடு என்பது அவரின் ராஜதந்திரம்அவரின் ஒவ்வொரு அணுகுமுறையும் அப்படித்தான் இருந்தது. திமுகவினை அப்படித்தான் அணுகினார் அவர்அவருக்கு வாய்ப்பு எம்.ஜி ராமசந்திரன் வடிவில் வந்தது. கருணாநிதிக்கும் அவருக்கும் பிணக்குகள் உருவான நேரம். ராமசந்திரனை தன் கட்டுபாட்டில் வைத்தல் ஒன்றே இங்கு தான் எக்காலமும் முதல்வராக வழி என கருணாநிதி சித்தித்த நேரம். ம்ம்ம் என்னை வைத்தே ஆட்சிக்கு வந்துவிட்டு என்னை அடக்க பார்க்கின்றாரா? முக முத்து எல்லாம் என் எதிரியா? என ராமசந்திரன் மனதால் புழுங்கிகொண்டிருந்த நேரம்அந்நேரம் மிக சரியாக களம் இறங்கினார் இந்திரா, அவரின் மிரட்டலில் தானாக விழுந்தார் ராம்சந்தர், விளைவு அண்ணா திமுக உருவானது.(நாம் ஒன்றும் ஆதாரமில்லாமல் சொல்லவில்லை. ராமசந்திரன் எனும் யானையின் அங்குசமாக வலம் வந்தவர் டிஜிபி மோகன் தாஸ். அவர் சொன்னவை இவை)திமுகவுக்கு மிக சரியான தலைவலியினை உருவாக்கினார் அவர், அதிலிருந்து தொடங்கியது கருணாந்தியின் தீரா தலைவலி, கடைசிகாலம் வரை தீரவில்லைராமசந்திரன் கட்சி தொடங்கியதும் அவர் வெல்ல ஆரம்பித்ததும் பின் மிசா காலத்தில் கருணாநிதி அரசு டிஸ்மிஸ் செய்யபட்டதும் உலகறிந்ததுமிசா காலங்களின் ஜார்ஜ் பெர்ணாண்டஸ் உட்பட தன் எதிரிகள் வரிசையில் திமுகவினை இந்திரா குறித்து வைத்து அடித்ததும் , அதற்கு பழிவாங்க 1977ல் இந்திராவினை திமுகவினர் தாக்கியதும் ரகசியமல்லஅந்த தாக்குதலுக்கு பின் காட்சிகள் மாறின, அதாவது அந்த தாக்குதல் மிசாவுக்கு பழிவாங்க நடத்தபட்டது என்றாலும் திமுகவினர் மனதில் உள்ளூர கட்சியினை உடைத்ததே முதல் காரணம் , மொரார்ஜி தேசாயினை குளிரிவிக்க செய்தது இரண்டாம் காரணம்அந்நேரம் இந்திராவுக்கு பெருத்த அதிர்ச்சி இருந்தது அது ராமசந்திரனிடம் ஏற்பட்டிருந்த மாற்றம்ஆம் முதலில் இந்திராவுக்கு அடிமையாக இருந்தவர் மெல்ல கருணாநிதியோடு ரகசிய கைகோர்ப்பில் ஈடுபட்டார். காங்கிரஸ் தமிழகத்தில் வளர்ந்துவிட கூடாது எனும் ஒப்பந்தம் அவருக்கும் கருணாநிதிக்கும் ரகசியமாக இருந்ததுஇதை மெல்ல புரிந்தார் இந்திரா, தஞ்சையில் அவர் போட்டியிட வந்தபொழுது ராமசந்திரன் தந்திரமாக ஓடி ஓளிந்ததில் அவருக்கு பல விஷயங்கள் புரிந்தனபின் அரசியலை அரசியலாக ஆடினார். ராமசந்திரனே அதிரும் வண்ணம் கருணாநிதியோடு கை கோர்த்தார், கருணாநிதியும் ராமசந்தினை நோக்கி “ஹவ் இஸ் இட்” என சிரித்துகொண்டார்.கருணாநிதி மேல் இருந்த கோபத்தை விட பன்மடங்கு கோபத்தை ராமசந்தர் மேல் காட்ட தொடங்கினார் இந்திரா, ராம்சந்தர் அரசு நிதி சுழலில் சிக்கி மதுகடை எல்லாம் திறந்தது அந்த நேரத்தில்தான்வாய்ப்புக்காக காத்திருந்த இந்திராவுக்கு வழி ஜெயலலிதா வடிவில் வந்தது, வராது வந்த மாமணியாக அவரை கருதி தனக்கு அருகில் அமர்த்தி ராமசந்திரனை நோக்கி புன்னகைத்தார் இந்திராவெடவெடத்த ராம்சந்தருக்கு என்னவோ புரிந்து போக “ஆத்தா மகமாயி” என ஓடிசென்று காலில் விழுந்தார்ஆம் அதுபோக கலைஞருக்கு சர்காரியா கமிஷன் போல ராமசந்திரனுக்கு ரே கமிஷன் உட்பட பல கமிஷன்களை ஏவிவிட்டிருந்தார் இந்திராசர்காரியா மற்றும் ரே கமிஷன்களில் சிக்கி திணறிய கருணாநிதிக்கும் ராமசந்திரனுக்கும் தமிழ்நாட்டில் இமேஜ் கெட்டது. இருவரும் இணையவும் முடியாமல் அதே நேரம் இந்திராவினை பட்டவர்த்தனமாக எதிர்க்கவும் முடியாமல் திணறினர்இந்த நேரத்தில்தான் ஈழ சிக்கல் இங்கு வந்தது, கருணாநிதி சில கோஷ்டிகளையும் ராம்சந்தர் பிரபாகரனையும் பிடித்து கொண்டு அரசியல் செய்தனர் .இந்த இருவரையும் கோமாளிகளாக முன்னிறுத்தி ஈழபோராளி லகானை இந்திராவே பிடித்திருந்தார்அந்த காலகட்டத்தில் எதிர்பாரா விதமாக
இந்திரா கொல்லபட்டார்அந்த அனுதாபத்தில் ஆட்சிக்கு வந்திருக்க வேண்டிய காங்கிரஸ் அதிமுகவினை அரியணை ஏற்றிவைத்ததுதாய் வழியில் ராஜிவ்காந்திக்கும் அதிமுகவே விருப்பமாய் இருந்தது, திமுக புலிகளோடு சேர்ந்து செய்த அட்டகாசம் அவருக்கு கடும் அதிருப்தியானதுதிமுகவினை சமாளிக்க தன் தாய் செய்த வழியே சரியானது என முடிவு செய்தவர் அதிமுக பக்கமே சரிந்தார், அவர் சாவிலாவது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததா என்றால் இல்லை ஜெயலலிதாதான் வந்தார்இனி யார் செத்தாலும் கவனமாக ஆட்சியினை பிடிக்கவேண்டும் என காங்கிரஸ் சுதாரித்த நேரம் காங்கிரஸில் சாக இனி யாரும் இல்லை காரணம் கட்சியே செத்துவிட்டதுஇந்திரா உலக அரசியலை எப்படி ஆட்டிவைத்தார் என்பதை ஆங்காங்கே பார்த்திருக்கின்றோம், நிச்சயம் தமிழ்நாட்டு அரசியலையும் புரட்டி வைத்தவர் அவர்தான்இந்திரா துணிந்து திமுகவினை உடைத்திருக்காவிட்டால் இந்நேரம் 50 ஆண்டுகள் கருணாநிதி முதல்வராக இருந்திருப்பார், நடந்திருக்கும் ஊழல்களை நீங்களே முடிவு செய்யுங்கள்ஊழலை விட கொடுமையானது இந்திய எதிர்ப்பு, அப்படி அசுர பலத்தில் திமுக இருந்திருந்தால் புலிகள் உட்பட இந்திய எதிரிகள் இங்கு என்ன ஆட்டம் ஆடியிருப்பார்கள் என்பதை நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள்மிக சரியான வழியினை மிக அட்டகாசமான முன்னேற்பாட்டினை இங்கு செய்துவிட்டு சென்றவர் இந்திராஅதில்தான் இன்றும் திமுகவினை அடக்கி அதற்கு சரியான எதிர்வினை கொடுக்க எதிர்சக்தி இருகின்றது, அது எந்நாளும் இருக்கும்இந்திரா போட்டு சென்ற பாதையில்தான் மோடி அரசும் பழனிச்சாமி அரசை பாதுகாக்கின்றதுஇந்திரா இந்தியாவின் எல்லா திசைகளுக்கும் தலைகீழ் திருப்பம் கொடுத்தவர், அதில் தமிழக அரசியலும் உண்டு