இந்து அமைப்புகள் ஏகபட்டது உள்ள நாடு இது
இந்து அமைப்புகள் ஏகபட்டது உள்ள நாடு இது, சில சமத்தாக இருக்கின்றன, சில அமைப்புகளால் பெருமை உண்டு, சில அமைப்புகள் வாழ்த்துகுரியவை
மிக சில அமைப்புகள் உடனே தடை செய்ய வேண்டியவை, அப்படியே அந்த உறுப்பினர்களை மனநல சிகிச்சைக்கு அனுப்ப வேண்டியது மகா அவசியம்
அப்படிபட்ட அமைப்பில் ஒன்றுதான் சனதான் சன்ஸ்தா
இந்த அமைப்பில் உள்ள வெறியர்கள் தும்பிகளை விட ஆபத்தானவர்கள், மகா மகா அயோக்கியர்கள், ஆப்கன் தாலிபன்கள் , ஐஎஸ் இயக்கத்தை விட மகா ஆபத்தானவர்கள்
அப்படி என்ன செய்திருக்கின்றார்கள் என்றால், இந்த சுதந்திர தினத்தை சீர் குலைக்க வெடிகுண்டு வீச திட்டமிட்டிருக்கின்றார்கள்
இவர்கள் விரும்பும் ஆட்சிதான் நடக்கின்றதே, பசுமாடுகள் எல்லாம் பாதுகாப்பாக இருகின்றதே பின் ஏன் இவர்கள் ஆத்திரபடுகின்றார்கள் என்றால், இவர்கள் ஆத்திரம் நாடு அமைதியாக இருப்பது எப்படி என்பது?
அதனால் வெடிகுண்டுகளை செய்து வெடிக்க வைத்து அப்பழியினை இஸ்லாமியர் மேல் போட்டு இங்கு பெரும் கலவரம் ஏற்பட்டு ரத்த ஆறு ஓடவேண்டும் என்பது இவர்களின் கேடுகெட்ட ஆசை
நல்ல வேளையாக மும்பை காவல்துறை அவர்களை கைது செய்து முகதிரையினை கிழித்திருக்கின்றது.
நல்ல இந்து இத்தேசத்தை நேசிப்பான், அதுவும் சுதந்திர திருநாளை எல்லாம் சீரழிக்க நினைக்கவே மாட்டான், இப்படி மதம் பெயரில் வெறுப்பான காரியங்களை செய்யவே மாட்டான்
உளவுதுறை மோடிக்கு அந்நியநாட்டு தீவிரவாதிகளால் ஆபத்த்து என சொல்லிகொண்டிருக்க இவர்களோ கலவரம் ஏற்படுத்த நாங்கள் போதும் என சொல்லிகொண்டிருகின்றார்கள்
அந்நிய நாட்டு தீவிரவாதிகள் இந்நாட்டை எதிரியாக வரிந்து கொண்டவர்கள், அவர்கள் அப்படி செய்வதும் சொல்வதும் ஆச்சரியமல்ல
ஆனால் நான் இந்து, இந்தியன் என சொல்லிகொண்டே சொந்த மக்களை கொல்லதுடிக்கும் இவர்கள் நிச்சயம் தேச துரோகிகள்
இதுவே இஸ்லாமிய இயக்கத்தார் வீட்டிலோ இல்லை ஒரு இஸ்லாமியரிடமோ இந்த வெடிகுண்டுகள் சிக்கி இருந்தால் இந்நேரம் என்ன ஆகியிருக்கும் என்பது சொல்ல வேண்டியதில்லை
யார் யாரெல்லாம் பொங்கி இருப்பார்கள், யாரை எல்லாமோ பிடித்திருப்பார்கள், யார் எல்லாமோ கண்டிப்பார்கள், பொங்குவார்கள்
ஆனால் இங்கு ஒரு சத்தமுமில்லை
இந்நாட்டில் அமைதியும் சகோதரத்துவமும் நிலைக்க செய்ய வேண்டியது அந்த சனதான் சன்ஸ்தா எனும் சாத்தான்கள் கூட்டத்தை உடனே தடை செய்து அவர்களை செய்ய வேண்டியதை செய்ய வேண்டும்