இந்து மக்களின் ஞான சம்பிரதாயம்
இந்துக்களின் மரபினை போல குருவின் பெருமையினை சொன்னவர்கள் யாருமில்லை
மகாபாரத்தில் துரோணரின் பெருமை முதல் ராமாயணதில் விசுவாமித்திரர் வரை குருக்களின் பெருமை கொட்டி கிடக்கின்றது
ஆனானபட்ட சிவனே தன் மகனை குருவாக கொண்டு பணிந்தான் என்கின்றது சிவபுராணம்
அசுரருக்கும் குரு உண்டு, தேவர்களுக்கும் குரு உண்டு என்பது ஒவ்வொரு மனிதனும் அவன் குருவால் வழிநடத்தபடுகின்றான், குரு இல்லாத வாழ்வு பாழ் என்பதை சொல்லிற்று
குரு பவுர்ணமி என ஒரு கொண்டாட்டத்தையே வைத்த மதம் இந்துமதம்
ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் உள்ள குருகுலங்களில் காலையில் வகுப்புகள் தொடங்கும் பொழுது ஒலித்துகொண்டிருந்த வார்த்தை, நமஹ என்றால் போற்றுகிறோம் அல்லது வணங்குகிறோம் என பொருள்,
அப்படித்தான் வணங்கினார்கள், குரு என்றால் இருளை நீக்குபவர், அறிவினை தருபவர் என பொருள், கிரகங்களில் கூட அறிவினை தரும் கிரகத்திற்கு குரு என பெயரிட்டு கொண்டாடியது பாரதம்.
“குருவில்லாத வித்தை பாழ்”, “குருவில்லாத கல்வி கருஇல்லாத முட்டை” என்றெல்லாம் குருவின் பெருமையை உயர்த்தி பிடித்தனர்,
அவ்வளவு ஏன் எல்லா அரசுகளிலும் ராஜகுரு என்று ஒருவர் இருப்பார், அரசனே அவரிடம்தான் ஆலோசனை கேட்பார், அரசனுக்கு ஏதும் ஆனதென்றால் அடுத்த மன்னனை தயார் செய்வதும் ராஜ்குருவே.
அசுரர்க்கே சுக்ராச்சாரி என்றொருவர் இருந்தார், அலெக்ஸாண்டருக்கு அரிஸ்டாட்டில் இருந்தார், சந்திர குப்தனுக்கு சாணக்கியன் இருந்தார்
விவேகானந்தருக்கு ராமகிருஷ்ண பரமஹம்சர் இருந்தார், சிவாஜிக்கு ராமதாசர் இருந்தார்
அர்ஜூனனுக்கு கண்ணனே குருவாக வந்தான்
பீமராவ் என்பவருக்கு அம்பேத்கரும், அப்துல்கலாவிற்கு வைத்தியநாத அய்யர் எனும் ஆசிரியருமே வழிகாட்டி
ராமனுக்கு விசுவாமித்திரரே குருநாதர்.
துரோணரிடமும் பீஷ்மரிடமும் வித்தைகளை கற்ற அர்ச்சுணனுக்கு இறுதியில் தெளிவினை கொடுத்தது அவனது குரு கண்ணணே.
கிட்டதட்ட கடவுளின் அவதாரம் என்றே குருக்களை முன்னோர்கள் வணங்கினர்.
இந்த பிறவியில் நாம் யாரை எல்லாம் குருவாக நினைக்கின்றோமோ அவர்களை எல்லாம் இந்நாளில் வணங்கினால் பல வகை ஆசீகளுக்கும் நல்ல முக்திக்கும் உதவி செய்யும் என்கின்றது சாஸ்திரம்
ஒரு பழமொழி உள்ளது “இறைவனால் கொடுக்கப் பட்ட சாபத்தை ஒரு குருவினால் மாற்ற முடியும், ஆனால் ஒரு குருவினால் கொடுக்கப்பட்ட சாபத்தை இறைவனாலும் மாற்ற முடியாது”
குரு மனம் குளிர்ந்தாலே கோடி நன்மை கூடிவரும் என்பார்கள்
குரு என்பவர் ஞான ஒளி கொடுப்பவர், வாழ வழிகொடுப்பவர், அறிவும் ஞானமும் கொட்டி கொடுப்பவர்
குரு என்பவர் கடவுளால் அனுப்பபட்டு ஒவ்வொருவரையும் கைதூக்கிவிடுகின்றார் என்பதே சரி. சரியான குருவினை கண்டுபிடிக்காதவன் எவனும் வாழ்வில் வெற்றியடைய முடியாது
கல்வி கொடுப்பவர் மட்டுமல்ல, சரியான திசையினை காட்டி ஒருவன் வாழ்வினை திருப்பும் சக்தி கொண்ட எல்லோருமே குரு வகையே
சரியான குருவினை கண்டடைந்தபின் ஒருவன் வாழ்வே மாறிவிடும் என்பதே மானிட வாழ்வியல் தத்துவம், அந்த குருவினை விடாமல் பிடித்து கொள்வதும் அவரை போற்றுவதும் சால சிறந்தது
இந்துமதம் ஞானிகளை வழிகாட்டிகளை மட்டும் கொண்டாடவில்லை, இறைவனுக்கு ஓடும் ஒவ்வொரு பாதத்தையும் தொட்டு வணங்க சொன்னது
ஒரு ஞானகுருவினை, பக்தி பழத்தை கண்டதும் காலை தொட்டு வணங்க சொன்னார்களே ஏன்?
அந்த பாதங்கள் இறைவனுக்காக ஓடுபவை , இறைவனின் அருளை பெற்று மக்களுக்கு கொடுப்பதற்காக ஓடுபவை என்பதற்காக சொன்னார்கள்
எந்த மதத்திலும் இல்லா சிறப்பு இந்துமதத்தில் மட்டும்தான் அப்படி உண்டு
இந்துமத பாடல்களெல்லாம் இறைபாதத்தை தன் தலையில் சூடிய வரிகளை கொண்டுதான் பாடபட்டிருக்கும், உத்தமான பக்தர்கள் அப்படி பாடினார்கள்
ஞானியர்கள் என்ன? தேர் வரும்பொழுது தேர் இழுக்கும் பக்தர்களுக்கெல்லாம் பாதபூஜை செய்வது இந்துக்கள் மரபு
பாதயாத்திரை செய்யும் பக்தர்களின் கால்களுக்கும் அந்த பூஜையினை செய்வார்கள்
இந்த கால்கள் புண்ணியம் செய்த கால்கள், இந்த கால்கள் இறைவனை தேடும் கால்கள் என பூஜித்து வணங்கினார்கள், இன்றும் அந்த சம்பிரதாயம் உண்டு
அந்த சம்பிரதாயத்தின் தொடர்ச்சிதான் குருக்களை பல்லக்கில் சுமப்பது, அது ஒரு கொண்டாட்டம்
உலககோப்பை வென்றபொழுது வழிகாட்டிய கேப்டன் சச்சின் டென்டுல்கரை சுமந்தவர்கள் உண்டு, வீரப்பனை கொன்றபொழுது விஜயகுமார் ஐ.பி.எஸ் அதிகாரியினை சுமந்தவர்கள் உண்டு, இன்னும் யாரெல்லாம் வழிகாட்டி வெற்றி தெடி கொடுப்பார்களோ அவர்களை தூக்கி கொண்டாடுவது உலக வழமை
இந்துமதம் ஞானத்தை வழங்கும் தங்கள் குருவினை அப்படி கொண்டாட சொன்னது, தருமை ஆதீனத்தின் பல்லக்கு அப்படியானது
இதை நிறுத்த சொல்வதன் உள்நோக்கம் கடுமையானது
இதன் அடுத்தகட்டம் பாத பூஜைகளை தடை செய்வது, அதன் அடுத்தகட்டம் தேர் திருவிழா இதர திருவிழா என இலக்காக இருக்கலாம்
இதெல்லாம் இந்து மக்களின் ஞான சம்பிரதாயம், ஒரு அறிவார்ந்த சமூகம் ஞானிகளை வழிகாட்டிகளை கொண்டாடும் வழக்கத்தின் தொடர்ச்சி, அதில் அரசு தலையிட்டு சர்ச்சை செய்வதெல்லாம் ஒரு காலமும் ஏற்றுகொள்ளமுடியாது
தருமை ஆதீனத்து பல்லக்கை தடை செய்யத்தான் மக்கள் தங்களுக்கு அதிகாரம் தந்திருக்கின்றார்கள் என அரசும் அதிகாரிகளும் நம்புவதெல்லாம் நிச்சயம் அறிவார்ந்த சிந்தனை அல்ல அது அறிவுடமையும் அல்ல
அரசுகள் மாறும் வீழும் ஆனால் இந்துமதமும் அதன் சம்பிரதாயங்களும் காலம் காலமாக நீடித்துவருபவை, அதனை தொட்டுபார்ப்பது அறிவுடமை ஆகாது, அரசு தன் பிடிவாதத்தை தளர்த்தி கொள்வது நல்லது
அப்படியென்றால் வயது அண்ணவர்களை டோலியில் சுமந்து செல்வது தடை செய்ய முடியுமா…. தேர் இழுப்பதை தடை செய்ய முடியுமா?… காசி சேத்திரம் சென்று வருபவரகளை பாத பூஜை செய்ய வதை தடை செய்ய முடியுமா? அழகர் ஆற்றில் இறங்குவதை தடை செய்ய முடியுமா? இவர்கள் பேச பேச இந்து மத சாம்பிராத்தாயங்கள் வளரும்
ஓம் குருவே நமஹ 🙏🙏🙏