இந்தோனேஷியாவுக்கு சென்றிருக்கின்றனர் சவுதி அரசர்
சவுதி மன்னருடன் 25 இளவரசர்கள், 10 அமைச்சர்கள், 100 பாதுகாப்பு அதிகாரிகள் என மொத்தம்1,500 பரிவாரங்கள் என 36 விமானங்களில் இந்தோனேஷியாவுக்கு சென்றிருக்கின்றனர் சவுதி அரசர்
ஏன் இப்படி மொத்த அரண்மனையோடு பயணித்தார்?
ஒருவேளை தனியாக சென்றால், திரும்பி வரும்பொழுது யாரும் அடுத்த மன்னராக இருந்துவிடுவார்கள் என்ற அச்சமாக இருந்திருக்குமோ?
மொத்த குடும்பத்தையும் மொத்தமாக அழைத்துசென்று கண்காத்திருப்பாரோ?
ஆக சிம்மாசனத்தையும் கூடவே சுமந்துசென்றிருக்கின்றார் சவுதி மன்னர்.
இதுவும் ஒருவகை ராஜ தந்திரமாக இருக்கலாம்..
கூவத்தூர் செய்திகளை மன்னர் படித்திருக்க வாய்ப்பு உண்டு, அது சவுதி மன்னரை பாதித்திருக்கலாம்