இந்த ஆண்டவன் இருக்கின்றானே, படு சோம்பேறி …
இந்த ஆண்டவன் இருக்கின்றானே, படு சோம்பேறி
என்றோ உலகில் படைத்த மீன் இனங்களை அப்படியே வைத்திருக்கின்றான், இன்னும் மாற்றவில்லை அதே மீன்கள் தான் வருகின்றன.
காய்கறி முதல் ஆட்டுகறி வரை அதேதான் வருகின்றது, ஒரே எரிச்சல். ஒரு மனிதன் புதிது புதிதாக உண்ண வேண்டாமா? அதில் ஏன் இந்த கடவுளுக்கு வஞ்சனை?
பரலோகத்தில் அவருக்கு என்னதான் வேலை? புதிது புதிதாக மீன் இனங்களை படைத்து சமுத்திரத்திற்கு அனுப்பினால்தான் என்ன?
இதை சும்மா விட முடியாது
எல்லா ஆலயங்களிலும் சென்று இதனை முறையிட்டு நியாயத்தை கேட்டுவிடவேண்டியதுதான்.
இப்படி ஒன்றுமே புதிதாக செய்யாமல் என்னதான் செய்கின்றான் அந்த சர்வேஸ்வரன்?