இந்த இலங்கையர்களை எப்படி விடுவிக்க முடியும்?

அகில உலகிலே தன் சொந்த நாட்டில் வந்து தாக்குதல் நடத்திய அந்நியநாட்டு தீவிரவாதி 4 பேரையும் விடுவிக்க சொல்லும் ஒரே கோஷ்டி இதுதான்

தன் கணவன் ராணுவத்தில் இறந்தபின் தன் மகனையும் இந்திய ராணுவத்திற்கு அனுப்பும் மனைவியர் வாழும் நாடு இது

தன் ஒரு மகன் நாட்டிற்காக செத்தால் அடுத்தமகனை அனுப்பும் தேசமிது

அந்த நாட்டில் இந்த அற்புதம்மாள் போன்றவர்கள் இருப்பதும் உண்டு

அற்புதம்மாள் மேல் ஒரு வருத்தம் எப்பொழுதும் உண்டு, ஒரு நாளாவது அம்மணி தன் மகனை சரியாக வளர்க்கவில்லை என கவலைபட்டதுண்டா?

போதைக்கு அடிமையான தன் மகனை பற்றி நாட்டுக்கு நல்ல குடிமகனை வளர்க்காததற்கு மன்னிப்பு கோருகின்றேன் என்றான் ஜாக்கிசான், இந்த அம்மணி நிலை என்ன?

ஒரு வார்த்தை புலிபற்றி அவர்கள் துரோகம் பற்றி சொல்வாரா?

அற்புதம்மாளும், நளினியின் தாயார் பத்மாவும் நல்ல குடிமக்களை இந்நாட்டுக்கு கொடுக்க தவறியபின் எப்படி பேசமுடியும்?

இல்லை, ஒருகாலமும் இல்லை

அந்நிய நாட்டு தீவிரவாதிகள் திருப்பெரும்புதூர்,மும்பை, புல்வாமா என எங்கு தாக்கினாலும் அந்த தாக்குதல் ஒன்றே

கசாப்புக்கும் அப்சல் குருவுக்கும் ஒரு நியாயம் இந்த முருகனுக்கும் சாந்தனுக்கும் இன்னொரு நியாயம் என்பது எங்கணம் சாத்தியம்

இதோ இந்த திருமா இன்று காங்கிரஸ் கூட்டணி, இந்த கருப்பு சட்டைகள் தமிழக அரசின் அடிமைகள்

பாஜக எதிர்ப்பு எனும் பெயரில் இங்கு தேசவிரோத தீவிரவாதிகளை அதுவும் அந்நியநாட்டு தீவிரவாதிகளை விடுவிக்க கோருவதை பகிரங்கமாக எதிர்க்கின்றோம், கண்டிக்கின்றோம்

மசூத் அசார் இந்தி பேசுவான் என்பதற்காக வட இந்திய சகோதர்கள் அவன் இந்திக்காரன் அவனை மன்னித்துவிடுங்கள் என்றால் ஏற்கமுடியுமா?

அதே நிலைப்பாடுதான் இங்கும்

முருகனும் அவன் கூட்டாளிகளும் தமிழ் பேசுகின்றார்கள் என்பதற்காக இந்த இலங்கையர்களை எப்படி விடுவிக்க முடியும்?

அவர்களை விடுவிக்க முடியாது

வேண்டுமானால் இந்த கும்பலை உள்ளே தள்ளி அவர்கள் அருகே அமர்த்திவிடலாம்.