இந்த ஊதியகுழு இனி கிடையாது என்பது போல சில செய்திகள்

இந்த ஊதியகுழு இனி கிடையாது என்பது போல சில செய்திகளை மத்திய அரசு சொல்லிவிட விவகாரம் வெடிக்கின்றது

ஊதிய குழு என்ன செய்யும்?

அரசு அலுவலர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை அப்பொழுதிருகும் விலைவாசிக்கு தக்கபடி சம்பளம் வழங்க அறிக்கை சமர்பிக்கும், அரசு அதை பொறுத்து சம்பளத்தை உயர்த்தும்

அதாவது அரசு ஊழியர்களுக்கு விலைவாசி உயர்ந்தால் சம்பளம் உயர்த்தி சொல்லி கொடுக்க ஒரு குழு

இதை போல அன்றே ஒரு குழுவினை அமைத்து விவசாயி வாங்க வேண்டிய இடுபொருள் அவன் கொடுக்க கூடிய வேலையாள் சம்பளம் இதர சிக்கல்களை எல்லாம் கணித்து அவனின் விளைபொருளுக்கான விலைவைக்க ஒரு குழுவினை அமைத்திருந்தால் விவசாயம் இந்த அளவு சீரழிந்திருக்காது

விவசாயியும் வாழ்ந்திருப்பான்