இந்த குஷ்புபற்றி ஏன் எழுதுகின்றாய்?

Image may contain: 1 person, close-up

சில விஷயங்களை நன்றாக எழுதுகின்றாய், இன்னும் படி நிறைய புத்தகம் எழுது, நிச்சயம் பிரகாசிக்கலாம் என சிலர் சொல்கின்றார்கள் அப்படியா என்றால் அடுத்து வருகின்றது ஆபத்து

இந்த குஷ்புபற்றி ஏன் எழுதுகின்றாய்?, அதை நிறுத்து இல்லை என்றால் மண்ணாய் போவாய் என ஆலோசனை சொன்னார்கள் பாருங்கள், பொறுக்குமா சங்கம்?

“நாம் கல்லானாலும் குஷ்பு வீட்டு வாசல் கல்லாவோம், மணலானாலும் அவர் வீட்டு முற்றத்து மணலாவோம்..” என சீறி சொல்லியாயிற்று

அப்படியும் கிரானைட் கல்லாகவோ, தாதுமணலாகவோ ஏன் ஆற்றுமணலாக கூட ஆசையில்லையா நாசமாய் போ என சொல்லிவிட்டு சென்றுவிட்டார்

சங்கத்து அடிப்படை கொள்கையிலே கை வைத்தால் எப்படி சங்கம் பொறுக்கும்? விரட்டியாயிற்று

“பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை” என்ற வரி இந்த முகத்தினை தவிர யாருக்கு பொருந்தும்?

அட.. அட.. அட என்ன ஒரு அழகு

இதனை எப்படி ரசிக்காமல் இருக்கின்றார்கள், வெறுமனே கடந்து செல்கின்றார்கள் ஆக ரசனை கெட்ட ஒரு சமுதாயம் உருவாகிகொண்டிருக்கின்றது, அதிலிருந்து தமிழர்களை மீட்கும் வேலையினை சங்கம் செய்துகொண்டே இருக்கின்றது