இந்த ஜோசியர்களை முதலில் சாத்த வேண்டும்

இந்த ஜோசியர்களை முதலில் சாத்த வேண்டும்

ஆங்கில புத்தாண்டிற்கு உங்கள் ராசிபலன் இதோ என சில ஆசீகளையும் பல சாபங்களையும் கொடுத்தார்கள்

பின் தைபுத்தாண்டு பலன் என ஒன்றை கொடுத்தார்கள்

இப்பொழுது விளம்பி ஆண்டு பலன் என இன்னொரு பலனை சொல்கின்றார்கள்

ஒரு வருடத்து பலன் என சொல்லிவிட்டு இடையில் மூன்று வகை வருட பலனை சொன்னால் எப்படி?

இடையில் குருபெயர்ச்சி, சனிபெயர்ச்சி, கிரகணம், ராகு அது இது என அதற்கொரு ஒஅலன்

ஒரு மனிதன் எதனை பின்பற்றுவான்? இதை வெளியிட ஊடகங்கள் வேறு

காவேரி எப்பொழுது வரும் என கேட்டால் பூரா ஜோசியனும் ஆடியில் வருணபகவான் நோக்கினால் வரும் என்கின்றார்கள்

இது யாருக்கு தெரியாது?

“டேய் ஜாதகம்னு ஒன்னுமில்லே, நீ தான் போய் நின்னு அவன் உன்னை சாதகமா வச்சி பொழைக்க வழிசெய்ற” என சொன்ன எம்.ஆர் ராதா சும்மா சொல்லவில்லை