இந்த திராவிட கும்பல்கள் தங்களை அறியாமல் ஒரு விபரீத காரியத்தில் இறங்கி இருக்கின்றன‌

இந்த திராவிட கும்பல்கள் தங்களை அறியாமல் ஒரு விபரீத காரியத்தில் இறங்கி இருக்கின்றன‌

அதாவது தமிழகத்தில் புத்த, சமண ஆலயம் நிறைய இருந்ததாகவும் பின் அது இந்து ஆலயமாக மாற்றபட்டதாகவும் பல குரல்கள் எழுகின்றன‌

பாஜக போன்ற கட்சிகள் ஆதிக்கம் செலுத்தாமல் இருக்க இவர்கள் இப்படி எல்லாம் கிளம்புகின்றார்களாம், இது வலுக்குமானால் நாங்கள் எல்லாம் முன்னாள் பவுத்தர்கள் இந்த ஆலயங்கள் எல்லாம் எங்கள் புத்த ஆலயம் என்றொரு கூட்டம் கிளம்பும்

கிளம்பினால் என்னாகும்?

பெரும்பான்மையாக இங்கு இருக்கும் இந்து மக்களுக்கு இவர்கள்பால் பெரும் வெறுப்பு ஏற்படும். எல்லா இந்து ஆலயங்களும் நிரம்பி வழிகின்றன. எந்த கோவில் ஆளில்லாமல் இருக்கின்றது, இல்லவே இல்லை

ஆக அந்த புனிதமான ஆலயங்களை எல்லாம் இடித்து புத்தம் ஆக்குவோம், சமணம் ஆக்குவோம் என்றால் அந்த பெருவாரியான மக்களின் எதிர்ப்பினை சந்திக்க வேண்டும்

பின் அவர்கள் ஓரணியில் திரண்டு இவர்களை ஓட ஓட விரட்டியடிப்பார்கள், சும்மாவே நாள்பார்த்துகொண்டுதான் இருக்கின்றார்கள்

ஆக இந்துக்களிடையே மிகபெரும் எழுச்சியினை தமிழகத்தில் செய்ய இந்த திராவிட கும்பல்கள் முயற்சிக்கின்றது

நிச்சயமாக அவர்கள்தான் பெரும்பான்மை கிட்டதட்ட 80% இருக்கின்றார்கள், ஆனால் பிரிந்து கிடக்கின்றார்கள். கோவில் இடிப்போம் என்றால் நிச்சயம் ஒன்றாய் வந்து மிதிப்பார்கள்

யாரோ ஒரு பார்ப்பனன் மிக அழகாக திராவிட வேடத்தில் ஊடுருவி இதனை எல்லாம் சொல்லி கொடுத்துகொண்டிருக்கின்றான், அது தெரியா திராவிட கும்பல்கள் வெட்டுவதற்கு கழுத்தை கொடுத்துகொண்டிருக்கின்றன‌

சில இடங்களில் அமைதியாக இருப்பது நல்லது,

இவர்களோ எரிபொருளாக‌ பொங்கி எரிந்து மதவாதம் எனும் ராக்கெட்டை உயர பறக்க வைப்பதில் தீவிரமாக இருக்கின்றார்கள்.