இந்த பேனரையே பாருங்கள் …
நீதிகட்சியா இருந்த காலத்தில் திராவிட எழுத்தை தொடங்கி வைத்தது வழக்கறிஞர் பன்னீர் செல்வம், அதனை தொடர்ந்து பாமர எழுத்தில் சாடினார் பெரியார். அந்த நெருப்பு சாடலில் இன்னும் எண்ணெய் ஊற்றி அழகாய் எரிய வைத்தார் அண்ணா
கலைஞர் அதனை ஜோதி போல் எரியவிட்டார்.
அந்த நெருப்பில் எத்தனையோ திராவிட எழுத்தாளர்கள் உருவாயினர். நெடுஞ்செழியன், அன்பழகன், மதியழகன், சம்பத் என பெரும் பட்டாளமே உருவாயிற்று, வரிசை மிக நீண்டது
அற்புதமான எழுத்தாளர்களை அது கொடுத்தது, சாகாவரம் கொண்ட திராவிட சிந்தனைகளை அவர்கள் கொடுத்தார்கள்
அது திமுக என உருவெடுத்து சம்பத் வெளியேறிய பின்னும் எழுத்தாளர்கள் வந்து கொண்டே இருந்தார்கள், திராவிட கொள்கைகளை எழுதிகொண்டே இருந்தார்கள்
ஒருவரா இருவரா? பெரும் படையே உண்டு. அவர்களின் ஒவ்வொரு எழுத்தும் திமுகவின் செங்கல்கள்.
அப்படிபட்ட பெரும் பாரம்பரியமுள்ள திமுகவிற்கு , இந்த மனுஷ் என்பவர் மட்டும்தான் எழுத வந்தவர் போலவும், அதற்கு ஸ்டாலின் தலமை என்பது போலவும் தமாஷ் செய்யபடுகின்றது
திமுகவின் எழுத்து பாரம்பரியம் அறிந்த யாரும் இதனை பார்த்து சிரிக்காமல் இருக்க முடியாது
இந்த பேனரையே பாருங்கள்
திராவிட சிங்கம் பெரியாரின் படம் இல்லை, ஏன் வேண்டும் இன்ப திராவிடம் என எழுதிய அண்ணாவின் படம் இல்லை
ஆனால் ஸ்டாலினும், மனுஷ்யபுத்திரனும் இருக்கின்றார்கள்
ஸ்டாலினை பெற்ற ஒரே காரணத்திற்காக கலைஞர் படமும் இருக்கின்றது
இதெல்லாம் திமுக மீது பெரும் அதிருப்தியினை கொண்டுவரும் விஷயம் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை
திமுகவில் புதிதாக புத்தகம் எழுத என்ன இருக்கின்றது, ஸ்பெக்ட்ரம் வழக்கு இருக்கின்றது அதை எழுதலாம்
மற்றபடி ஆயிரம் ஆண்டுகள் நிலைத்து நிற்கும் அற்புத தத்துவ புத்தகம் அன்றே எழுதியாயிற்று, அவற்றை இத்தலைமுறை படித்தாலே போதும்
அதுவும் ஸ்பெக்ட்ரம் குற்றசாட்டு வந்த காலத்தில் எப்படி எல்லாம் திமுகவினை சாடினார் இந்த மனுஷ்யர், மனுஷன் போலவா சாடினார்? கனிமொழியினை எல்லாம் இவர் திட்டிய வகை என்ன? கலைஞரை கேட்ட கேள்விகள் என்ன?
கட்சிக்கு கொஞ்சமும் பிரயோசனமில்லாத ஒருவனை , ஒரு கட்சி தலமை ஏன் இப்படி தனக்கு நிகராக நிறுத்தவேண்டும்?
சசிகலா ஜெயா உறவு மட்டும் தமிழக அரசியலில் மர்மம் இல்லை போலிருக்கின்றது