இந்த யழவு திமுகவினை நினைத்தால் குழப்பமே மிஞ்சுகின்றது

இந்த யழவு திமுகவினை நினைத்தால் குழப்பமே மிஞ்சுகின்றது

ஒரு காலத்தில் ஈழமக்களை வாழவைக்கவே போராளிகளை ஆதரிக்கின்றோம் என்றார்கள், கருணாநிதி அமைதிபடையினை அவமதித்தது அப்படித்தான்

இலங்கையில் ஈழதமிழர் எல்லா உரிமையும் பெற்று வாழவேண்டும் அதுதான் எங்கள் நோக்கம் என்றார்கள்

15 வருடம் மத்தியில் இருந்தபொழுது என்ன செய்தார்கள் என்பது தெரியாது

நாம் கேட்பது ஒன்றே ஒன்றுதான்

ஈழதமிழரை அடித்துவிரட்டியது புலிகளும் இலங்கை அரசும், இன்று புலிகள் இல்லை

ஆக இவர்கள் கொள்கைபடி ஈழத்துக்கு அனுப்பி வாழவைக்க வேண்டுமா? இல்லை சிங்களனுக்கு ஆதரவாக இங்கேயே வைத்துகொள்ள வேண்டுமா?

ஈழதமிழனுக்கு இங்கு குடியுரிமை கொடுத்தால் சிங்களனுக்கு அது சந்தோஷமல்லவா? அவன் அடித்துவிரட்டி இவர்கள் சேர்த்துகொண்டால் சிங்களனும் திமுகவும் கூட்டு களவாணிகள் என அர்த்தமாகின்றதா இல்லையா?

ஆம் 1 லட்சம் ஈழதமிழருக்கான நிலமும் உரிமையும் இலங்கை அரசுக்கு செல்லுமா இல்லையா?

ஆக ஈழதமிழரின் மொத்த உரிமையினை சிங்களனிடம் விட்டுவிட்டு ஈழதமிழரை இங்கு குடியமர்த்த சொல்கின்றார்களா? இது சிங்கள தரப்புக்கு எவ்வளவு மகிழ்ச்சி

அப்பாடா ஒருவழியாக ஈழதமிழரில் பெரும் தொகை காலியாயிற்று என எவ்வளவு ஆறுதல்?

நம் செவிட்டில் போட்டு நம் தலையில் ஈழ அகதி மக்களை கட்டிவிடுவார்கள் என்றிருந்தோமே, பரவாயில்லை திமுக புண்ணியத்தில் தமிழ்நாட்டிலே அமர்த்திவிட்டார்கள் என சிங்களம் பெருமூச்சு விடாதா?

திமுக தேர்தல் நிதியில் ராஜபக்சே பணமும் வந்திருக்கலாம் போல, இல்லையேல் சிங்களனுக்கு மிக ஆதரவான இக்காரியத்தை செய்யவே மாட்டார்கள்.

மிக மிக மடத்தனமாக காரியத்தை கோருகின்றது திமுக, சர்வாதிகாரி மண்டையில் ஒரு மண்ணாங்கட்டியுமில்லை. மாபெரும் மடத்தனம் இது

அவனுகளும் அவனுக ஈழ கொள்கையும்