இந்த யோகியின் இடஒதுக்கீட்டு செய்திகள் குழப்பாகின்றன …
உ.பி.,யில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி.,க்கான ஒதுக்கீடு ரத்து
சரியாக அம்பேத்கர் பிறந்தநாளில் எப்படி அறிவித்திருக்கின்றார் பார்த்தீர்களா? மறுபடியும் அம்மாநிலம் அந்த வருணாசிரம கற்காலத்தை நோக்கி பின் செல்ல தொடங்கியாயிற்று
இந்நிலை தமிழகத்திற்கும் வரவேண்டும் என பலர் ஆசைபடுகின்றார்கள்..
இந்த யோகியின் இடஒதுக்கீட்டு செய்திகள் குழப்பாகின்றன,
பத்திரிகை செய்திகள் ஏற்கனவே இருந்த இட ஒதுக்கீட்டினை அவர் ரத்து செய்தார் என்கின்றன,
சிலர் அப்படி எல்லாம் இல்லை, அங்கே இட ஒதுக்கீடே இல்லை என்கின்றனர், அதாவது இட ஒதுக்கீடே இல்லை என்பதை பெருமையாக சொல்கின்றனர்
இட ஒதுக்கீடு இல்லை என்றால் அது நல்ல விஷயமா? அப்படி மாநிலங்கள் இந்தியாவில் இருக்கும்பொழுது தமிழக இட ஒதுக்கீடு விஷயங்களை சாத்தியமாக்கியது திமுக சாதனை அல்லவா? என்றால் “பரிவாரங்களிடம்” பதில் இல்லை
கன்ஷிராமும், மாயாவதியும் ஆண்ட உபியில் அவர்கள் ஆட்சியில் இட ஒதுக்கீடு வைக்காத அளவு ஆட்சிதான் நடந்ததா? என்றாலும் தலித் ஆதரவாளர்களிடம் பதில் இல்லை
ஒருவேளை ஏற்கனவே இருந்து இட ஒதுக்கீடு ரத்து செய்யபட்டால் அது தவறல்லவா? என்றாலும் பதில் இல்லை
என்ன சர்ச்சையோ
இந்த ஊடகங்களும், இந்த பரிவார கும்பல்களும் தமிழத்திற்கும் ஒரு முதலமைச்சர் உண்டு, அவர் பெயர் பழனிச்சாமி, அப்படி ஒரு ஆசாமி தமிழகத்தை நடத்துகின்றார் என நினைத்துகொள்வது நல்லது
இந்த முதலமைச்சரை பற்றி பேசாமல் எங்கோ இருக்கும் உபி முதல்வரை பற்றி இந்த ஊடகங்கள் அதிக கவலை கொள்வதுதான் பிராமண ஊடக தர்மம்.