இந்த Benitto Kumar என்பவர் யார்?
இந்த Benitto Kumar என்பவர் யார்? ஏன் அவரை இன்னும் விட்டு வைத்திருக்கின்றாய் என பலர் கேட்டுகொண்டே இருக்கின்றார்கள்
அவர் நமது உறவினர், நாம் பள்ளியில் படிக்கும்பொழுது அவர் கல்லூரியில் படித்தவர். அந்த சிறிய கிராமத்தில் அவர் எல்லோருக்கும் ஒரு இன்ஸ்பிரேஷன்
நிறைய வாசிப்பவர், சிறுகதைகள் எல்லாம் அப்பொழுதே எழுதியவர். ஒருமுறை பிரபல பத்திரிகையில் அவர் கதைக்காக அப்பொழுதே 10 ஆயிரம் பரிசு கிடைத்திருந்தது
எல்லாவற்றிற்கும் மேல் எம்.காம் படிப்பில் மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் அன்றே தங்கபதக்கம் பெற்றவர்
அதெல்லாம் அந்த சிறிய கிராமத்தில் கொண்டாடபட்ட நிகழ்வுகள், அவரின் தாயார் அன்று சிரித்த சிரிப்பு இன்றும் மனதிலே நிற்கின்றது
நிச்சயம் பெரும் அறிவாளி , நிரம்ப வாசித்தவர். தன் சினிமா கனவுகள் கைகூடா நிலையில் மும்பை சென்றார் அப்படியே துபாய் சென்றார்
பள்ளிபருவத்தில் அவர் எமக்கு ரோல்மாடல் என்பதில் சந்தேகமில்லை.
நீண்டநாளைக்கு பின் தொடர்பு எடுத்தால் அதன் பின்புதான அவருக்கு இருந்த இன்னொரு பக்கம் புரிந்தது
அவரின் கல்லூரி நாட்களில் அவருக்கொரு நண்பர் இருந்தார், அவர் ராமசந்திரன் ரசிகர் வெறியர். இவரும் அவரும் இந்த செய்திதாள், ரேடியோ இன்னபிற விஷயங்களுக்காக நண்பர் ஆகி இருந்தார்கள்
நண்பரின் பெற்றோரும் இவரை மிக மிக வரவேற்று தன் மகனாக பாவித்தார்கள்
அதில் இவர் இந்த மீடியா செய்திகளுக்காக அவரிடம் சிக்கி அவரிடம் இருந்த எம்ஜிஆர் கிறுக்கு இவருக்கு வந்திருக்கின்றது.
அதாவது நண்பனின் பெற்றோர்கள் இவர் அவரை திருத்துவார் என பழக சொன்னால், அந்த எம்ஜிஆர் கிறுக்கர் இவரை திருத்தி முழு ராமசந்திரன் பைத்தியமாக மாற்றி இருக்கின்றார்
எதிர்பாரா பின்விளைவு என்பது இதுதான்
ஒருகாலத்தில் ராமசந்திரன் என்றால் அதன்பின் ரஜினி ரசிகராக ஆகவேண்டுமல்லவா? மனிதர் சிக்கிவிட்டார்
இப்பொழுது வந்து எல்லா பதிவுகளிலும் திமுகவினரிடம் சிக்கி விடுகின்றார், அவர்களும் பின்னி எடுக்கின்றார்கள் மனிதர் அசருவதாக தெரியவில்லை
மிக சிறுவயதில் என் தந்தை கை நீட்டி காட்டி , படித்தால் இப்படி படிக்க வேண்டும் , எழுதினால் இப்படி எழுதவேண்டும் என சொன்னவர்களில் இவரும் ஒருவர்
மிக நல்லமனிதர்தான், ஆனால் இந்த ரஜினி கிறுக்க்கும் கலைஞர் வெறுப்பும் மட்டும் போகவே இல்லை, சகவாச தோஷம் அது
முன்னொரு காலத்தில் ஒரு நண்பன் செய்த உதவிக்கு அவர் காட்டிகொண்டிருக்கும் கைமாறு அது , வேறு ஒன்றுமில்லை
அந்த நண்பனை பிடித்து சாத்தினால் எல்லாம் சரியாகிவிடும்