இனியாவது ரஜினி திருந்தட்டும்
காலா படத்திற்கு கன்னடத்தில் தடை என்றால் அரசியல், இனி வாட்டாளுக்கு வெட்ட வேண்டியதை வெட்டாமல் அங்கு படம் ரிலீசாகாது, அன்னார் எதிர்ப்பார்ப்பது அதுதான்
கன்னடத்தில் தடை இப்பொழுது வந்திருக்கலாம், படம் வரும்பொழுது மும்பையிலும் தடை வரலாம், பொறுத்து பாருங்கள்
ஆனால் ஐரோப்பாவில் தடை என்பதுதான் யோசிக்க வேண்டிய விஷயம், விஷயம் உறுதி இல்லை எனினும் சாத்தியம் உண்டு
பொதுவாக இம்மாதிரி படங்களை கவனமாக எடுக்க வேண்டும், அதுவும் உலகம் முழுக்க ஓடவேண்டிய ரஜினி படத்தினை எடுக்க கடும் யோசனைகள் வேண்டும்
காரணம் எல்லா நாட்டிலும் தமிழர் உண்டு, அவர்களுக்கு சிக்கலும் உண்டு. அப்படிபட்ட நிலையில் ரஜினி பெரும் போராளி, தமிழர் போராளி என வரும் படங்களை எல்லாம் பல நாடுகள் ரசிக்காது
புரட்சி புண்ணாக்கு எல்லாவற்றையும் அவர்கள் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கபார்ப்பார்கள், சமூக அமைதி அவர்களுக்கு முக்கியம்
வெளியே கவனியாது விட்டது போல் இருந்தாலும் உள்ளூர ஒவ்வொரு அரசும் விளக்கெண்ணெய் போட்டு கண்காணிக்கும், இதனால் நம் நாட்டில் என்ன சிக்கல் வரலாம் என்பதை எல்லாம் யோசிப்பார்கள்
ஐரோப்பாவில் தமிழர் உண்டு என்பது வேறுவிஷயம் அதையும் தாண்டி கருப்பு என்பதெல்லாம் அவர்களுக்கு என்றுமே வெறுப்பு
காண சகிக்காத கறுப்பு சட்டையில் நின்றுகொண்டு வேங்கை மவன் நான் கருஞ்சிறுத்தை, கறுப்பர் நகர காவல் தெய்வம் என்பதெல்லாம் அவர்களுக்கு உவப்பானது அல்ல
படம் தமிழர் வாழும் ஏரியாவில் சில சலசலப்புகளை உண்டு செய்யலாம், கறுப்பர்கள் ஆதரவு என எதிர்பாரா நிகழ்வுகள் வரலாம் என்றெல்லாம் யோசிப்பார்கள்
ஐரோப்பாவில் காலா ஓடினாலும் மலேசியாவில் காலா துண்டாடபட்டு வெறும் 1 மணிநேரத்திற்கு மலாய் வெர்ஷனில் சுருக்கபட்டது போல வெறும் கால் மட்டும் வரும்
எப்படியோ மும்பை அடுத்து தென்னாப்ரிக்க தமிழர், பிஜி தமிழர், வெஸ்ட் இண்டீஸ் தமிழர், லண்டன் தமிழர், பாரிஸ் தமிழர் இங்கெல்லாம் கருப்பு, கருத்தவன், கருவாயான் போன்ற பெயர்களில் ரஜினியினை வைத்து பெரும் புரட்சிகள் செய்ய இருந்த ரஞ்சித்தின் கனவில் மண் விழுந்திருக்கின்றது
இனியாவது ரஜினி திருந்தட்டும்