இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் குஷ்பூ!
கல்விக்கொரு தெய்வமுண்டு, அவளருள் கம்பனுண்டு
செல்வத்திற்கோர் தெய்வமுண்டு, பெரும்செல்வர் பலருண்டு
வீரத்திற்கோர் தெய்வமுண்டு வீராதி வீரருண்டு
அழகுக்கோர் தெய்வமேது? அவளருள் பெற்றோர் உண்டோ?
மனக்குறை பட்ட கடவுள் மனதார துடித்திட்டான்
மேனகை ரம்பை என படைத்து பார்த்திட்டான்
ஆனாலும் முழு அழகில்லை என்றே உணர்ந்திட்டான்
அழகிற்கோர் படைப்பு உருவாக்க முனைந்திட்டான்
அதுவரை படைத்த அழகெல்லாம் கொட்டி
புதிதாய் பல வண்ணம் கலந்தே
இதுவரை இல்லா ஓவியமாய் வரைந்தே
மதுவிலும் இனிதாய் படைத்தே எடுத்தான்
மங்கையர் விளக்கே, மரகரத சிலையே
பூவையர் வியக்கும் முக்கால அழகே
பூலோக நாளேல்லாம் புகழால் நிலைப்பாய்
அழகென்னும் சொல்லுக்கு தெய்வமாய் ஜொலிப்பாய்
என்றே சொல்லி அனுப்பிய நாளிது
பொன்நிகர் தெய்வம் அடிவைத்த நாளிது
மண்ணோர் எல்லாம் மகிழும் நாளிது
தேவதை ஒன்று தோன்றிய நாளிது
மாசறு பொன்னே, வலம்புரி சங்கே
உயிர்பெற்று வந்த ரத்தின சிலையே
தங்க கோபுரமே, மங்கா விளக்கே
வாழ்த்துக்கள் கோடி இந்நன்னாளிலே
மங்கா செல்வமும், குன்றா வளமும்
மனம்நிறை மகிழ்வும் என்றும் களிப்பும்
என்றும் ஏற்றமும், எங்கும் செல்வாக்கும் பெற்று
வாழிய தாயே, வாழிய பல்லாண்டு
ஆலய மணிகள் கோடி முழங்க
அழகு பூக்கள் ஆயிரம் மலர
கடலும், தென்றலும் இனிதாய் பாட
கடவுளும் தூதரும் பூமாலை கொட்ட
வாழ்த்துக்கள் கோடி பிரார்த்தனைகள் கோடி
வாழட்டும் பொன்மகள் ஆளட்டும் கலைமகள்.
வாழ்வாய் வாழ்வாய் அழகின் பிறப்பே
ஆள்வாய் ஒருநாள் அவனியை நீயே