இனிய விஷூ வாழ்த்துக்கள்

Image may contain: food

 

தமிழனுக்கு தை மாதம்தான் புத்தாண்டு, சித்திரை என்பது வசந்தகாலத்தை வரவேற்கும் விழா என அறியபடலாமே தவிர புத்தாண்டு என்பதை எல்லாம் ஏற்பதாக இல்லை

தை முதல்தேதி எப்படி தமிழர் புத்தாண்டு என்பதை பல இடங்களில் பார்த்தாகிவிட்டது

இன்று புத்தாண்டு என கொண்டாடுவர்களை பார்த்து சொல்ல முடிவெதெல்லாம் ஏப்ரல் 1 மட்டும் அந்த நாள் அல்ல‌

எனினும் மக்கள் சந்தோஷமாக கொண்டாடும்பொழுது அதனை கண்டிக்க கூடாது, கொண்டாடட்டும். அப்படி நம்பிகொண்டிருப்பவர்களுக்கு வாழ்த்துக்கள்

இவ்விழா சிங்களருக்கும் புத்தாண்டு என்பதால் இலங்கை களைகட்டியிருக்கின்றது, அப்படியே உலகெல்லாம் உள்ள தமிழரும் கொண்டாடுகின்றார்கள்

மிக சிறப்பாக கொண்டாடுபவர்கள் யாரென்றால் சாட்சாத் மலையாளிகள், அவர்களுக்கு நம்மை போல தை பொங்கல் எல்லாம் இல்லை. ஓணமும் இந்த சித்திரை விசுவும் முக்கிய பண்டிகை

விஷூ என்றால் பார்த்தால் அல்லது தரிசித்தல் என பொருள், ஆங்கில விஷுவல் எனும் வார்த்தாஇ இதிலிருந்தான் வந்தது

புத்தாண்டினை கனிகளை பார்த்து தொடங்குவது அவர்கள் வழக்கம், சீனரிடமும் இதே வழக்கம் உண்டு

மலையாளிகள் இன்று கேரளம் என ஆகிவிட்டாலும் நம் முப்பாட்டன் சேரனின் வாரிசுகள், மிக அழகானா சுத்தமான தமிழ்சொற்கள் எல்லாம் இன்று மலையாளத்தில்தான் இருகின்றன, தமிழ்நாட்டில் இல்லை

கவிப்பெருமான் இளங்கோ முதல் பல தமிழை அழகாக கையாண்ட‌ புலவர்களை கொடுத்த பகுதி அது

இன்றும் பத்மினி சகோதரிகள் முதல் அம்பிகா, ராதா, நதியா, மீரா ஜாஸ்மின், நயந்தாரா, மஞ்சிமா, நித்யா மேனன்என பலரை தமிழகத்திற்கு கொடுத்து கொண்டிருக்கின்றது

அது எத்தனை பத்மினிக்களையும், மேனன்களையும், தாராக்களையும் கொடுத்தாலும் ஒரு குஷ்பூவிற்கு ஈடாகாது என்பது வேறு விஷயம்

இன்று அவர்களுக்கு உற்சாக பெருநாள்

இன்றும் பத்மினி சகோதரிகள் முதல் அம்பிகா, ராதா, நதியா, மீரா ஜாஸ்மின், நயந்தாரா, மஞ்சிமா என பலரை தமிழகத்திற்கு கொடுத்து கொண்டிருக்கின்றது