இனி என்னாகும்?

புல்வாமா தாக்குதல் அதை தொடர்ந்த தாக்குதலால் காட்சிகள் வேகமாக மாறுகின்றன‌

முதலில் புல்வாமா தாக்குதலுக்கு காரணம் யாரென்றால் இந்த ஆட்சியின் வெற்றுவிளம்பரம், அதுதான் முதல் காரணம்

பஞ்சாபில் இந்திரா தீவிரவாதத்தை வேரறுத்தது போல் காஷ்மீரில் நாங்கள் வேரறுத்துவிட்டோம் என காட்ட துடித்தார்கள், துடிப்பென்றால் அப்படி ஒரு துடிப்பு

விளைவு காஷ்மீர் தீவிரவாதமில்லா பகுதி என அறிவிக்க முன்னோடியாக சில பகுதிகளை அறிவித்தார்கள், அதன் பின் நாங்களும் இருக்கின்றோம் என காட்டவேண்டிய அவசியம் அந்த தரப்புக்கும் வந்தது

அதன் பின் எல்லை தாண்டி அடித்ததெல்லாம் நல்ல விஷயமே, நிச்சயம் நமது நுட்பம் அல்ல ஏதோ ஒரு வல்லானை துணைக்கு அழைத்து அடித்தாயிற்று

அதன் பின் நடக்கும் நிகழ்வுகள்தான் அச்சமூட்டுகின்றன‌

இனி இந்திய விமானம் நுழைந்துவிடாதபடி கடும் தயாரிப்பில் இறங்கிவிட்டது பாகிஸ்தான், சீனாவிடமிருந்தும் அமெரிக்காவிடமிருந்தும் வாங்கியும், ஆப்கனில் திருடிகொண்டு வந்தவறையும் வைத்து மிகபெரும் வேலி அமைக்கின்றது

24 மணிநேரமும் தன் வான் எல்லையினை 50 ஆயிரம் அடி உயரம் வரைகாக்கும் நவீன சிஸ்டங்களை நிறுவி வைத்திருகிக்கின்றது

ஏகபட்ட வான் பாதுகாப்பு சாதனங்களுடன் அது மிக பலமான எல்லையினை அமைத்துவிட்டது

இனி இந்திய விமானங்கள் எல்லை தாண்டுவது மகா சிரமமே

இனி என்னாகும்?

மிகுந்த பாதுகாப்பில் பாகிஸ்தானில் தீவிரவாதிகள் பயிற்சி பெறுவர், அதை இங்கிருந்து நாம் பார்க்க வேண்டும்

புலிகளின் சாதனை இலங்கையில் என்னவென்றால் சொத்தையாக கிடந்த, அதாவது ஹெலிகாப்டர் கூட இல்லாமல் இருந்த இலங்கை ராணுவத்தை மிக பலபடுத்தியது

அதாவது புலிகளை ஒழிக்கவே தன்னை மிகபலமாக மாற்றிகொண்டது இலங்கை ராணுவம், புலிகளின் ஒரே சாதனை அது

இப்பொழுது இந்த அரசும் பாகிஸ்தானுக்கு அந்த விஷயத்தை செய்துவிட்டது

அந்த மொரார்ஜி தேசாய்க்கு வழங்கபட்டது போல “நிசான் இ பாகிஸ்தான்” விருது மோடிக்கும் வழங்கபடலாம்

சமீபத்தில் பாகிஸ்தானுக்கு அவர் செய்திருக்கும் மாபெரும் உதவியில் பாகிஸ்தான் அவ்வளவு மகிழ்ச்சியில் இருக்கின்றது