இன்னும் திறக்கவே இல்லையாம், அதற்குள் விரிசலாம்
திறப்புவிழாவுக்கு முன்னரே விரிசல் கண்டதால் தஞ்சை ரயில்வே மேம்பாலத்தை திறக்க உயர் நீதிமன்றம் இடைக்கால தடை: உத்தரவு
இன்னும் திறக்கவே இல்லையாம், அதற்குள் விரிசலாம்
காலத்தால் முந்தைய கல்லணை அப்படியே இருக்கின்றது, ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பெரிய கோவில் அப்படியே இருக்கின்றது
ஆனால் மிக சமீபத்தில் கட்டபட்ட மேம்பாலம் விரிசல் அடைகின்றதாம், எப்படி?
மக்கள் வரிபணம் எப்படி சுரண்டபடுகின்றது என்றால் நேரடியாக கோட்டை கஜானாவில் கைவிட்டு அள்ளுவது அல்ல, அது முடியவும் முடியாது
கஜானா பணம் இப்படி செலவழிப்பதாக சொல்லபட்டு அதில் சுருட்டிகொள்வது
அப்படி சுருட்டியது போக கட்டினால் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும், செம்மொழி மநாட்டு பூங்கா சுவரும் இடிந்துவிட்டதாம். கொஞ்சநாளைக்கு முன்பு ஒரு பஸ்நிலையம் இடிந்து சிலரை கொன்றதும் குறிப்பிடதக்கது
இவர்கள் கட்டிய எல்லாமே இடிந்துவிழுகின்றது ஆனால் அவர்கள் கட்சி அப்படியே இருக்கின்றது , கட்டடத்திற்கு செலவழிக்க வேண்டிய பணமெல்லாம் கட்சி கட்ட செலவழித்தால் கட்சி நிற்கத்தான் செய்யும்